Thursday, August 26, 2004

கம்பனும் கருப்புச்சட்டைகளும்

தமிழினக் காவலர் டாக்டர் வீரமணி, கம்பனுக்கும் கம்பன் விழாவுக்கும் நோ சொல்கிறார். காரணம்? கம்பன், இராவணன் என்கிற திராவிடனை வில்லனாக காண்பித்ததுதானாம்! பகுத்தறிவு அய்யா, ராமன் ஆரியன் என்றும் கைபர் கணவாய் கிராஸ் பண்ணி வந்தவன் என்றெல்லாம் ஏற்கனவே பிதற்றியவர்தான். இப்போது கம்பன் மீது பாய்ந்திருக்கிறார். (நன்றி - உண்மை மாத இதழ்)

கம்பன் என்ற புலவனைப் புகழ்வது, பாராட்டுவது, பெருமைப்படுத்துவது, அவனுக்கு விழா எடுப்பது என்பது, தமிழர், திராவிடப் பண்பாட்டையும், நாகரீகத்தையும் இழிவுபடுத்தும் மிகப்பெரிய பண்பாட்டுச் சீரழிவு ஆகும்!
கம்பன் அடிப்பொடிகளும், கம்பனைத் தூக்கி நிறுத்த முயலும் கொம்பன்களும் சிந்திக்க வேண்டும்.


காப்பி அடித்த கம்பனின் இராமன்- கடவுள் அவதாரம்!

“ஆரிய இராமனை உயர்த்தவே, இராவணன் அரக்கனாக்கப்பட்டான் - எதனால்? இராமன் தெய்வமாக்கப்படல் வேண்டும் என்பதற்காக” (‘இராவண காவிய’, மதிப்புரை) தந்தை பெரியார் அவர்கள் கம்பன் செய்த இனத் துரோகம்பற்றி ‘குடிஅரசு’ வார ஏட்டில் 1946-இல் எழுதினார்!

“வசிஷ்டர் இராமனிடம் சென்று கீழ்க்கண்டபடி (மனு) நீதி உரைக்கின்றார் - ‘எப்படி ஆட்சி நடத்த வேண்டும்’ என்று?”

“கரிய மாலினும் கண்ணுதல் ஆனினும்
உரிய தாமரை மேலுறை வானிலும்
விரியும் பூதமோர், அய்ந்தினும் மெய்யினும்
பெரியார் அந்தணர் பேணுதி உள்ளத்தால்!”

இதன் பொருள் (துளசிதாசர் இராமாயணத்திலும் இது உள்ளது) “திருமால், சிவன், பிரம்மா, அய்ம்பூதங்கள் இவை எல்லாவற்றிற்கும் மேல் ஒன்று உண்டு என்று சொன்னால் ‘உண்மை’ என்று தத்துவம் சொல்வார்கள். அந்த உண்மையை விட உலகில் உயர்ந்தவர் யார் என்றால் அவர் பார்ப்பனரே!
எனவே அவர்களை பார்ப்பனரை வணங்கி அனுதினமும் ஆட்சி நடத்து” என்று கம்பர் எழுதுகிறார் என்றால்.. இதைவிடக் கொடுமை - பச்சைப் பார்ப்பனீய வர்ணாசிரம உயர்வு பிரச்சாரம் வேறு உண்டா?

இந்தக் கம்பனை மானங்கெட்ட தமிழர்கள் தலையில் வைத்து விழாக் கொண்டாடுவதை விட இந்த இனத்தின் எழுச்சியைத் தடுத்து, மீட்சிக் கிடைக்காவண்ணம் வீழ்ச்சியுறச் செய்தல் வேறு உண்டா?


அட தேவுடா!