Monday, November 29, 2004

திருக்கார்த்திகை தீபம்

தீபத்திருநாள்தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி! மண்பாண்டத்தில் செய்யப்பட்ட விளக்கு, நல்லெண்ணெய் வாசம், தீபாவளிக்கு வாங்கி வெடிக்காமல் நமத்துப்போயிருக்கும் பட்டாசு, பிசுபிசுவென்று கையில் ஒட்டிக்கொண்டாலும் இனிக்க வைக்கும் பொரி, பெரிய கோயில் சொக்கப்பானை, அதில் தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்கு எடுத்துவரும் கரித்துண்டுன்னு சுவராசியமான நினைவுகள்...

போன வருஷம் திருக்கார்த்திகைக்கு பஸ்ஸில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே திருவண்ணாமலை போய் சேர்ந்து ஏதோ ஒரு தெரு முனையில் நின்று அண்ணாந்து பார்த்து அண்ணாமலை தரிசனம் செஞ்சதை விட கூடுதல் திருப்தி 'ஜெயா' டிவியின் புண்ணியத்தில் இந்த வருஷம் வீட்டிலிருந்தபடியே கிடைத்துவிட்டது. திருவண்ணாமலைக்கு போனால் கூட கோயில் பிராகாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது. அதுவும் தீபம் ஏற்றியவுடன் திருவண்ணாமலை நகரத்துக்கே வெளிச்சம் வரும் காட்சியை தெருவில் நின்று பார்ப்பதைவிட வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து டிவியில் பார்ப்பதில் பரவசம். அகிலா கிரேனில் சரசரவென்று ஆக்ஷன் படம் மாதிரி காமிரா இயங்கி, எறும்பு போல ஊர்ந்து போகும் மக்களை படம்பிடித்தது அசத்தல். சன்டிவியாக இருந்திருந்தால் டெக்னாலஜியில் இன்னும் அசத்தியிருப்பார்கள். தடையாக இருப்பது பகுத்தறிவு கொள்கையா, சீரியலில் வரும் பணமான்னுதான் தெரியவில்லை! நமக்கெதுக்கு அரசியல்?!

சாம்பிளுக்கு குவாலிட்டி இல்லாத ஸ்டில்ஸ் கொஞ்சம். ஜெயாடிவியிலிருந்து சுட்டவை!

திருவண்ணாமலை சாயங்கால நேரம்...



உண்ணாமலை அம்மன் உற்சவத்துக்கு ஆஜர்...



கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்....



சிக்னல் கொடுத்தாச்சு!



மலை மீது தீபம்!



பிரகாசமாய் கொழுந்துவிட்டு...



கீழே, கோயில் பிரகாரத்தில் தீபம்...



லைட்ஸ் ஆன்..!



ஜொலிக்குதே...தங்கம் போல் ஜொலிக்குதே!



எறும்பு போல பக்தர்கள், அண்ணாமலையாரை சுற்றி!



அண்ணாமலையாருக்கு அரோஹரா!