Friday, February 25, 2005

பா.கே.ப சுட்டது

பார்த்தது

சுனாமியும் வருமானவரித்துறையும் ஒண்ணுதான். எப்போ, எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது....வருமான வரி ஆபிஸை நாம தட்டினா மகிழ்ச்சி; அவங்க தட்டினா அதிர்ச்சின்னு கபிலன் புல்லரிக்க வெச்சுட்டிருந்தார். இடம் - இன்கம் டாக்ஸ் ஆபிஸ். யுகபாரதி, நா.முத்துக்குமார், கபிலன் என மும்மூர்த்திகள் கலந்து கொள்ளும் கவியரங்கம். உலகத்துலேயே சின்சியரா வேலை பார்க்குறவங்கன்னு கபிலன் கொடுத்த சர்டிபிகேட் யாருக்குமே கிண்டலா தெரியலை. முப்பத்திரண்டு சங்கதியும் மொத்தமா வெளியே தெரியற மாதிரி ஒரே வழிசல், பார்வையாளர்கள் வரிசையிலிருந்து. நுங்கம்பாக்கம் ஹைவே பக்கம் போனாலே கார் கொஞ்சம் குலுங்கித்தான் போகுதாம்... உன் சமையலறையில் உப்பா சர்க்கரையான்னு கேட்டவரிடமிருந்து இப்படியரு அச்சுப் பிச்சுத்தனமான உளறல். பாவம் தமிழ் சினிமா!


கேட்டது

போனவாரம் நடந்த பொதுக்குழுவில் ஒரு அதிமுக பிரமுகர், ஆட்சியெல்லாம் நல்லாத்தான் நடத்துறீங்க...அப்படியே உங்க பிள்ளைங்களையும் கொஞ்சம் 'கவனி'யுங்கன்னு சொல்லி ஒரு கோரிக்கை வைக்க, அம்மா கொஞ்சம் அப்செட். கட்சிக்காரங்களுக்கு எதுவும் செய்யலைன்னு சொல்ல முடியாது... எதை எப்போ செய்யணும்னு எனக்கு தெரியும்னு சொல்லி ஒரு சமாளிபிகேஷன் போட்ட கையோடு நிறுத்தாம 'திமுகவை பாருங்க... ஆட்சியில இருந்தாலும் இல்லேன்னாலும் தலைமை என்ன சொல்லுதோ அதை செஞ்சு முடிக்கிறாங்க... அதுமாதிரி நீங்களும் நடந்துக்கணும்'னு அம்மாகிட்டேர்ந்து ஓரே அட்வைஸ் மயமாம். ஆட்சியில இருக்கும்போதே இப்படி இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்குதே, எலெக்ஷன்ல மட்டும் தோத்துப் போனா அதிமுக ஆசாமிங்க அட்ரஸ் இல்லாம போய்டுவாங்கன்னு அம்மாவே ஒத்துக்கிட்ட மாதிரி ஆயிடுச்சே!


படித்தது

கருணாநிதியின் விஷம ஏடு பட்டியலில் துக்ளக் இருப்பது போல ஜெயலலிதாவிடம் எதுவுமில்லை; அவரைப் பொறுத்தவரை கல்யாண பத்திரிக்கை தவிர மத்தது எல்லாமே விஷமம்தான் - இந்த வார துக்ளக்கில் சோ சொல்லியிருக்கிறதைப் பார்த்தா சாட்டையை சொடுக்கிட்ட மாதிரிதான் தெரியுது. ஆனா, தர்மபுரி பஸ் எரிப்பு தாமதாவதில் உள்நோக்கம் இருக்குறதா நாலு வருஷம் கழிச்சு அய்யாவுக்கு இப்போதான் தெரிஞ்சுருக்கு. மூணு வருஷமா மூன்றாவது அணியைப் பத்தி மூச்சு விடாதவர் இப்போ தமிழ்நாட்டுல கூட்டணி ஆட்சி வந்தா நல்லா இருக்கும்னு சொல்றார். எலெக்ஷன் வரைக்கும் எதைப்பத்தியும் இவர் பேசாம இருந்தா அதைவிட நல்லா இருக்கும்!

சுட்டது