Saturday, March 05, 2005

தேவுடா... தேவுடா!



டாப் 1

சக்தியெல்லாம் ஒன்று
சேர்ந்தாலே ...
சொர்க்கம் வரும் இந்த
மண் மேலே

உன்னைப் பற்றி யாரு
என்ன சொன்னால் என்ன
இந்தக் காதில் வாங்கி அதை
அந்தக் காதில் தள்ளு!

மேகம் மிதித்தாலும்
காகம் பறந்தாலும்
ஆகாயம்தான் அழுக்காக
ஆகாதுன்னு சொல்லு...

நன்றி - வாலி


டாப் 2

ஆறு மனமே ஆறு இங்கே
அனைத்தும் அறிந்தது யாரு
அறிவைத் திறந்து பாரு - அதில்
இல்லாததை சேரு

நன்றி - பா.விஜய்


டாப் 3

ஏத்தி விட்டத மறந்தாக்கா - அந்த
நன்றி என்னும் வார்த்தைக்கொரு
அர்த்தமில்லை
காத்திலிருந்து தலையாட்டி - நீ
நூலுக்குத்தான் நன்றி சொல்லு

பாஞ்சி பாயுற பட்டம் - இது
பட்டைய கெளப்புற பட்டம்
இது சூப்பர்ஸ்டாரு பட்டம்

நன்றி - நா. முத்துக்குமார்


டாப் 4

உன்னால் நானழகு
என்னால் நீயழகு
நம்மால் யாவும் அழகே

நன்றி - யுகபாரதி

டாப் 5

உள்ளம் தெம்பாக வை
எண்ணம் உயர்வாக வை
வாழும் காலமெல்லாம்
மண்ணில் மரியாதை வை

கண் இமைக்கும் நொடியில்..
அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும்
நாளை
இது உனக்கும் புரியும்

நன்றி - கபிலன்