Saturday, March 26, 2005

சுட்டாச்சு...நிஜமாவே சுட்டாச்சு

தெருவில் திடீரென்று ஒலிபெருக்கி அலறியது. அறையை விட்டு வெளியே அவர்கள் ஓடி வந்தார்கள். வரிசையாக கார்களும் ஜீப்புகளும் ஊர்ந்து கொண்டிருந்தன. சுற்றிலும் மக்கள் கூட்டம். கருப்பு சிவப்புக்கொடிகளை ஏந்திய மக்கள். அறிவிப்பு இப்போது தெளிவாகக் கேட்டது.

'புரட்சி நடிகர் மருத்துவ மனையில் நலமாக இருக்கிறார். உயிருக்கு அபாயம் இல்லை. வெற்றியையே வாடிக்கை ஆக்கிய வேந்தர் பெருமகன் வாழ்க! எமனை வென்ற எங்கள் வீரர் வாழ்க! அண்ணா வாழ்க! என்றும் வெல்லும் எங்கள் திமுக! உங்கள் திமுக!'

'என்ன ஆச்சு எம்ஜியாருக்கு? ஹார்ட் அட்டாக்கா?'

'கூட்டத்தில கேட்டா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கதை சொல்லுவான். இரு, நான் சீனியரை போன் பண்ணிக் கேக்கறேன்'

சில நிமிடங்களில் ஜூனியர் வந்துவிட்டான்.

'ராதா சுட்டுட்டாராம். கழுத்துல காயம்'

'எந்த ராதா? எம்கேயா? எம்மாரா?'

'எம்கே ஏன் சுடப்போறாரு? எம்மார்தான்'

'ஷ¥ட்டிங் போதா'

'என்னடா கேக்கற?'

'ஷ¥ட்டிங் நடக்கறப்பவான்னு கேட்டேன்'

'அவரோட வீட்டுக்குப் போய் சுட்டுருக்காரு. தன்னையும் சுட்டுண்டாராம். சிரிக்காதே. எம்ஜியாருக்கு ஏதாவது ஆச்சுன்னா கிரிக்கெட் மேச் கோவிந்தா. தெரிஞ்சிக்கோ'

Image hosted by Photobucket.com

எம்ஜியார் சம்பவம் பட்டணத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எம்ஜியாரின் ரசிகர்களுக்கு அவரை ஒரு சாதாரண குண்டு துளைத்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. தெருச்சுவர்களெல்லாம் அவர்தான். கழுத்தை கட்டு மூடிக்கொண்டிருக்கிறது. என்னுடைய நண்பனின் சீனியர் ராதாவுக்கு தெரிந்தவராம். ராதா பழியை ரிவால்வர் மீது போடுகிறாராம். 'என்னடா துப்பாக்கி இது. அவரும் சாகல்லை. நானும் உயிரோட இருக்கேன்' என்று பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

இது 'சுட்டாச்சு சுட்டாச்சு'லிருந்து சுட்ட மேட்டருன்னு நெனைச்சு மாங்கு மாங்குன்னு படிச்சவங்களுக்கு... சோ.. ஸ்வீட்! பிடிச்சுக்கோங்க....அரை கிலோ அல்வா! சுட்டது, 'புலிநகக்கொன்றை'யிலிருந்து. அஞ்சு நாள் முந்தியே எல்லோருக்கும் அல்வா குடுத்து ரெக்கார்ட் பிரேக் பண்ணணும்னு நினைச்சேன், முடிச்சேன்! எல்லாரும் கூட்டணி போட்டு வூடு கட்றதுக்குள்ள வுடு ஜூட்!