சந்திரமுகி - தென்னிந்திய சினிமாவிலேயே அதிகபட்ச வசூலை வாரிக்குவித்த வெற்றிப்படம்
மைனஸ் பாயிண்ட்ஸ்
சொதப்பலான திரைக்கதை
முகஞ்சுளிக்க வைக்கும் வசனம்
தேவையற்ற சண்டைக்காட்சி
படு சாதாரண காட்சியமைப்புகள்
சம்பந்தமில்லாத கேரக்டர்கள்
நடிகர்களின் டிராமடிக் நடிப்பு
அரதப்பழசான காமிரா கோணங்கள்
நம்பவே முடியாத கதை
எரிச்சலூட்டும் ஸ்பிளிட் பெர்ஸானலிட்டி ஜிகிடி
இரைச்சலான பின்னணி இசை
அலுப்பூட்டும் செட்
எங்கேயோ கேட்ட பாடல்கள்
பிளஸ் பாயிண்ட்
எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழணங்கே...
உன் சீரிளமை திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!
Friday, July 22, 2005
Tuesday, July 19, 2005
திருப்பங்கள்
திருப்பங்கள் எப்போதும் நமக்கு சுவராசியம்தான். எல்லா திசைகளையும் எப்போதும் உற்றுநோக்க வைப்பது திருப்பங்கள்தான். எதிர்பாராத விஷயங்களை அறிமுகப்படுத்தி வைப்பவையும் திருப்பங்கள்தான். சில சமயம் எதிர்பாராத திசைகளை நோக்கி நம்மை பயணிக்க வைப்பதும் திருப்பங்கள்தான்.
திருப்பங்களே இல்லாத சீரான பாதையில் கவனிக்க எதுவுமில்லை. மாறாக நம் கவனத்தை திசை திருப்பி விபத்துகளை விளைவிக்கும் ஆபத்துகள் உண்டு. அடிக்கடி வரும் திருப்பங்கள் நம் கவனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை. வேகத்தை மறக்கடித்து விவேகத்தை நினைக்க வைக்கும் விஷயஞானிகள்.
போகவேண்டிய தூரம் அதிகமில்லை என்பதே ஒவ்வொரு திருப்பங்களும் சொல்லும் செய்தி. பல திருப்பங்கள் நம்மை யூகிக்க விடுவதில்லை. ஒவ்வொரு திரும்பங்களுக்கு பின்னரும் செல்லும் பாதையின் உயரம் கூடுவது பிரமையில்லை, உண்மை. கடந்து போன திருப்பங்களை திரும்பிப் பார்க்க கண்கள் திரும்புவதில்லை. திரும்பினாலும் தெரிவதில்லை, வாழ்க்கையை போல!
Wednesday, July 13, 2005
உட்லண்ட்ஸ் சந்திப்புகள்
வலைப்பதிவாளர்களின் சந்திப்பு இப்போதெல்லாம் அடிக்கடி உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் நடக்கிறது. பி.கே.சிவகுமார்தான் இதை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து சுஜாதா, காசி. சமீபத்திய காசியுடனான சந்திப்பு பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று நிறைய சென்னை நண்பர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். பிரகாஷ்ஜி கவனிக்க! தற்போது 'தமிழோவியம்' கணேஷ் சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னொரு பிரபல வலைப்பதிவாளரும் சென்னை வர இருப்பதாக ஒரு தகவல். அடுத்த முறையாவது சாம்பாரில் மூழ்கடித்த வடைக்கு பதிலாக வேறு டிஷ் கிடைக்குமா? பிரகாஷ்ஜி இதையும் சேர்த்தே கவனிக்க! நான் ரொம்ப சமத்து. கூட்டத்தில் கலந்து கொண்டாலும் வாத, விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. காமிராவை கையிலெடுத்து சுத்திச் சுத்தி வந்து சுட்டுத்தள்ளியதில் கிடைத்த ஸ்டில்கள்...
சுரேஷ் கண்ணன் , பிரசன்னா, பிரகாஷ், ராஜ்குமார், பிகேசிவக்குமார்
இரா.முருகன், பத்ரி
சுரேஷ் கண்ணன், பிரசன்னா
சுஜாதா
ராஜ்குமார், பிரகாஷ், கிருபா ஷங்கர், பிரதீப், தேசிகன்
பிரகாஷ், ஷங்கர், ப்ரதீப், தேசிகன்,
அருள்செல்வன், .இராம.கி, மதுமிதா, உஷா, காசி, சந்திரன்
நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ், சுரேஷ் கண்ணன்
வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி
வெங்கடேஷ், கல்யாண், நாராயண்
வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி
நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ்
சுரேஷ் கண்ணன் , பிரசன்னா, பிரகாஷ், ராஜ்குமார், பிகேசிவக்குமார்
இரா.முருகன், பத்ரி
சுரேஷ் கண்ணன், பிரசன்னா
சுஜாதா
ராஜ்குமார், பிரகாஷ், கிருபா ஷங்கர், பிரதீப், தேசிகன்
பிரகாஷ், ஷங்கர், ப்ரதீப், தேசிகன்,
அருள்செல்வன், .இராம.கி, மதுமிதா, உஷா, காசி, சந்திரன்
நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ், சுரேஷ் கண்ணன்
வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி
வெங்கடேஷ், கல்யாண், நாராயண்
வெங்கடேஷ், கல்யாண் ( சாகரன் ), நாராயண், பத்ரி
நாராயண், பத்ரி, மாலன், பிரகாஷ், செல்வராஜ்
Wednesday, July 06, 2005
நெய்வேலி ரண்டக்க
ஜுலை மாதம் வந்தாலே மீடியாவை ஆக்ரமிக்கும் செய்தி அது. வருஷாவருஷம் நெய்வலி பழுப்பு நிலக்கரி கார்ப்பரேஷன் நடத்தும் புத்தக கண்காட்சிதான். சென்னை புத்தக கண்காட்சிக்கும் நெய்வேலி புத்தக கண்காட்சிக்கும் நிறைய வித்தியாசம். நெய்வேலியில் புத்தக வெளியீட்டாளர்களுக்கு நஷ்டம் சாத்தியமே இல்லாத விஷயம். சென்னையில் இல்லாத குடை ராட்டினம், உற்சாக ஊஞ்சல்கள் சங்கதிகளால் நெய்வேலியில் தாய்க்குலங்கள், குட்டீஸ்களின் கூட்டத்திற்கு உத்திரவாதமுண்டு.
கிரிவலம் போவது மாதிரி மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடையை கட்டுகிறார்கள். ஒரு பக்கம் மக்கள் உட்கார்ந்து கேட்க வசதியாக பரந்து விரிந்திருக்கும் ஹால். மேடையில் யாரோ தமிழ் இலக்கியத்தின் பெருமையை சுத்த தமிழில் செப்பிக்கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டமும் பாப்கார்னை ருசித்துக்கொண்டே அசுவராசியமாய் கேட்டுக்கொண்டிருந்தது. சரியான நேரத்தில்தான் போய் சேர்ந்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஆறு மணி. சிறந்த பதிப்பகத்திற்கான விருதை கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக பெற்றுக்கொண்டு பேசிவிட்டு, களைத்துப் போய் உட்கார்ந்திருந்தார் பத்ரி.
புத்தக கண்காட்சியை முழுசா ஒரு ரவுண்டு வர நேரமில்லை. எந்தெந்த புத்தகங்களை வாங்கலாம் (உபயம் புத்தக விளையாட்டு) என்று மனதுக்குள் போட்டு வைத்திருந்த திட்டம் நேரமின்மையால் பணாலானது. ஆடியன்ஸின் பல்ஸ் தெரிந்து எழுதப்படும் புத்தகங்களுக்கு அட்டகாசமான வரவேற்பு இருப்பது நெய்வேலியிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் மிடில் கிளாஸ் நடுத்தர வயது ஆசாமியாக இருந்தால் நேராக வந்ததும் அள்ள அள்ளப் பணத்தை கையில் எடுக்கிறார். டவுசர் பையன்கள் சச்சினையோ, டிராவிட்டையோ புரட்டி புரட்டிப் பார்க்கிறார்கள். ஸ்கூல் பையன்களை உஷார் பண்ணுகிறது ஒரு புத்தகம். ஜீன்ஸ் பார்ட்டிகளுக்கு இன்னும் அமெரிக்க கனவு மிச்சமிருக்கிறது. நாரயண மூர்த்தி புத்தகத்தில் எத்தனை சைபர் என்பதை மெனக்கெட்டு எண்ணிவிட்டு சரியா தப்பான்னு செக் பண்ணிவிட்டு போகும் சில குசும்பு பார்ட்டிகள். எதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தின் டாப் ரேட் புத்தகங்கள் என்பதை போட்டோவில் பார்த்தாலே சொல்லிவிடலாம்.
நெய்வேலி பத்தி பத்ரி ஜாலியா நிறையவே எழுதிட்டார் என்பதால் அவர் ஸ்டைலில் ஒரு சீரியஸா சில மேட்டர். நெய்வேலி புத்தக கண்காட்சியிலிருந்து பதிப்புலகம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறது. எந்தவொரு எழுத்தாளருக்காகவும் மக்கள் புத்தகங்கள் வாங்குவதில்லை. புதிய புதிய விஷயங்கள், போரடிக்காத நடை, உள்ளதை உள்ளபடியே சொல்வது, தலையணை சைஸிலோ அல்லது வாய்ப்பாடு சைஸிலோ இருந்துவிடாத புத்தகங்கள், கவர்ச்சிகரமான அட்டை, நியாயமான விலை இதெல்லாம் முக்கியம். புரட்டிப் பார்க்கும் வாசகனை பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை திறக்க வைக்கும் காரணிகள்தான் இவை.
அழுக்கேறிய அட்டையில், மங்கலான எழுத்துக்களில் சைவ சித்தாந்தம் பேசும் அந்த கனமான புத்தகங்களை எல்லோரும் வேடிக்கை பார்த்தபடியே நகருகிறார்கள். ஷெல்பில் பத்து, பதினைந்து புத்தகங்கள்தான் இருக்கும். சாணி பேப்பரில் நெருக்கமாக அச்சிடப்பட்டு, திறந்தாலே ஓ போட வைக்கும் தூக்க மாத்திரை ரக புத்தகங்கள். பதினோரு மணிக்கு திரைச்சீலையை விலக்கி வியாபாரத்தை ஆரம்பித்த அந்த முதியவர் ஒன்பது மணிக்கு கல்லாவை காலி செய்துவிட்டு சொன்ன டயலாக்கை மறக்கவே முடியாது. 'பரவாயில்ல.. இன்னிக்கு 500 ரூபாய்க்கு வியாபாரம் ஆயிருக்கு...' படிக்கும் பழக்கம் மக்களிடம் அதிகமாகியிருக்கிறது என்றெல்லாம் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் காசு கொடுத்து வாங்கும் பழக்கம்?
கிரிவலம் போவது மாதிரி மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடையை கட்டுகிறார்கள். ஒரு பக்கம் மக்கள் உட்கார்ந்து கேட்க வசதியாக பரந்து விரிந்திருக்கும் ஹால். மேடையில் யாரோ தமிழ் இலக்கியத்தின் பெருமையை சுத்த தமிழில் செப்பிக்கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டமும் பாப்கார்னை ருசித்துக்கொண்டே அசுவராசியமாய் கேட்டுக்கொண்டிருந்தது. சரியான நேரத்தில்தான் போய் சேர்ந்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஆறு மணி. சிறந்த பதிப்பகத்திற்கான விருதை கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக பெற்றுக்கொண்டு பேசிவிட்டு, களைத்துப் போய் உட்கார்ந்திருந்தார் பத்ரி.
புத்தக கண்காட்சியை முழுசா ஒரு ரவுண்டு வர நேரமில்லை. எந்தெந்த புத்தகங்களை வாங்கலாம் (உபயம் புத்தக விளையாட்டு) என்று மனதுக்குள் போட்டு வைத்திருந்த திட்டம் நேரமின்மையால் பணாலானது. ஆடியன்ஸின் பல்ஸ் தெரிந்து எழுதப்படும் புத்தகங்களுக்கு அட்டகாசமான வரவேற்பு இருப்பது நெய்வேலியிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் மிடில் கிளாஸ் நடுத்தர வயது ஆசாமியாக இருந்தால் நேராக வந்ததும் அள்ள அள்ளப் பணத்தை கையில் எடுக்கிறார். டவுசர் பையன்கள் சச்சினையோ, டிராவிட்டையோ புரட்டி புரட்டிப் பார்க்கிறார்கள். ஸ்கூல் பையன்களை உஷார் பண்ணுகிறது ஒரு புத்தகம். ஜீன்ஸ் பார்ட்டிகளுக்கு இன்னும் அமெரிக்க கனவு மிச்சமிருக்கிறது. நாரயண மூர்த்தி புத்தகத்தில் எத்தனை சைபர் என்பதை மெனக்கெட்டு எண்ணிவிட்டு சரியா தப்பான்னு செக் பண்ணிவிட்டு போகும் சில குசும்பு பார்ட்டிகள். எதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தின் டாப் ரேட் புத்தகங்கள் என்பதை போட்டோவில் பார்த்தாலே சொல்லிவிடலாம்.
நெய்வேலி பத்தி பத்ரி ஜாலியா நிறையவே எழுதிட்டார் என்பதால் அவர் ஸ்டைலில் ஒரு சீரியஸா சில மேட்டர். நெய்வேலி புத்தக கண்காட்சியிலிருந்து பதிப்புலகம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறது. எந்தவொரு எழுத்தாளருக்காகவும் மக்கள் புத்தகங்கள் வாங்குவதில்லை. புதிய புதிய விஷயங்கள், போரடிக்காத நடை, உள்ளதை உள்ளபடியே சொல்வது, தலையணை சைஸிலோ அல்லது வாய்ப்பாடு சைஸிலோ இருந்துவிடாத புத்தகங்கள், கவர்ச்சிகரமான அட்டை, நியாயமான விலை இதெல்லாம் முக்கியம். புரட்டிப் பார்க்கும் வாசகனை பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸை திறக்க வைக்கும் காரணிகள்தான் இவை.
அழுக்கேறிய அட்டையில், மங்கலான எழுத்துக்களில் சைவ சித்தாந்தம் பேசும் அந்த கனமான புத்தகங்களை எல்லோரும் வேடிக்கை பார்த்தபடியே நகருகிறார்கள். ஷெல்பில் பத்து, பதினைந்து புத்தகங்கள்தான் இருக்கும். சாணி பேப்பரில் நெருக்கமாக அச்சிடப்பட்டு, திறந்தாலே ஓ போட வைக்கும் தூக்க மாத்திரை ரக புத்தகங்கள். பதினோரு மணிக்கு திரைச்சீலையை விலக்கி வியாபாரத்தை ஆரம்பித்த அந்த முதியவர் ஒன்பது மணிக்கு கல்லாவை காலி செய்துவிட்டு சொன்ன டயலாக்கை மறக்கவே முடியாது. 'பரவாயில்ல.. இன்னிக்கு 500 ரூபாய்க்கு வியாபாரம் ஆயிருக்கு...' படிக்கும் பழக்கம் மக்களிடம் அதிகமாகியிருக்கிறது என்றெல்லாம் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் காசு கொடுத்து வாங்கும் பழக்கம்?
Friday, July 01, 2005
பொறுவாசகம்
சிவன் கோயிலில் சாயரட்சை நேரத்தில் பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் வந்தால் எப்படியிருக்கும்? இளையராஜாவின் திருவாசகத்தில் அந்த ப்யூஷன்தான். வெஸ்டர்ன் கிர்ர்ர்ர்ர்ர் லூலூவுக்கு நடுவே ராஜாவின் குரலில் தேனூறும் திருவாசகம். ஒரு வழியாக புலி வந்தே விட்டது. நெருக்கடியடிக்கும் கூட்டத்தில் நீச்சலடித்துக்கொண்டிருந்தது மியூசிக் அகாடமி. வண்டியை பார்க் பண்ணவே நாலு தெரு தாண்ட வேண்டியிருந்தது. அரசியல், ஆன்மீகம், சினிமான்னு ஏகப்பட்ட பிரபலங்கள் வந்திருந்தாலும் அரசியல் முகங்களுக்குத்தான் மெஜாரிட்டி. வை.கோ, பீட்டர் அல்·போன்ஸ் தவிர என்.ராம், பாரதிராஜாவையெல்லாம் அரசியல் லிஸ்ட்டுல சேர்த்துக்கிட்டா தப்பில்லையே! டெல்லியிலிருந்து பறந்து வந்து சிம்பிளான ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார் ஜெய்பால் ரெட்டி. அடுத்து பேச வந்த எந்த தமிழனும் ஜெய்பால் ரெட்டி அளவுக்கு இளையராஜாவை புகழ்ந்து தள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் திருவாசகத்துக்கு தோள் கொடுத்திருப்பவர்களில் நிறைய பேர் கிறிஸ்தவர்கள் என்பது நெஞ்சைத் தொட்ட விஷயம்.
மேடையிலேயே கமலும் பாரதிராஜாவும் ஓரங்கட்டிக்கொண்டார்கள். விழா முடியும் வரை ரஜினியோடு இளையராஜா பேசிக்கொண்டே.......இருந்தார். அதே மாதிரி வைகோவும் என். ராமும். பாவம், பாலமுரளி கிருஷ்ணாவுக்கு சரியான கம்பெனி கிடைக்கவில்லை. நடுவில் மாட்டிக்கொண்டு அவஸ்தையாய் உட்கார்ந்திருந்தார். வைகோவுக்கு நடைபயண அனுபவம் இன்னும் மறக்கவில்லை. அடிக்கடி மேடையிலேயே நடைபயின்று கொண்டிருந்தார். ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவின் இரட்டைக்குழல் துப்பாக்கின்னு பீட்டர் சொன்னதை மறுத்த கமல் நாங்க ரெண்டு பேரும் ரெட்டை மாடுகள் மாதிரின்னு சொன்னார். தொடர்ந்து விளக்க வந்த பாரதிராஜா ரெண்டு பேரும் அசோக சக்கரத்திலிருக்கும் சிங்கங்கள் என்றார். (அட..அட விடுங்கப்பா, திருவாசக விழாவுக்கு வந்தா திட்டம் போட்டு தனிக்கச்சேரி நடத்துறீங்களேன்னு யாராவது சொல்லக்கூடாதா?) இரண்டையும் இணைக்கும் சக்கரம் இளையராஜா என்பதையும் மேலிருக்கும் மகுடங்கள் தன்னைப்போன்ற இயக்குநர்கள் என்பதும் பின்னிணைப்பு. நாளைக்கு 'சிங்கங்கள் காலடியில் சிக்கியிருக்குது தமிழ் சினிமா'ன்னும் சொல்வார், சினி·பீல்டுல பிரச்னை வந்தா! (காலடியில் இருந்த தண்ணீர் பாட்டிலை தேட கமல் கொஞ்சம் கஷ்டப்பட்டது தனி கொசுறு)
கஷ்டப்பட்டு வாங்குற சம்பளத்தை பொண்டாட்டிக்கிட்ட கொடுக்கிறதும் ஒண்ணுதான்; திருப்பதி உண்டியலில் போடறதும் ஒண்ணுதான்னு ரஜினி போட்ட ரிலாக்ஸ் குண்டில் அரங்கம் கொஞ்சம் கலகல. ரஜினிக்கு பிடிச்ச மேடை பேச்சாளர் வைகோவாம். (நோ கமெண்ட்ஸ்!) வை.கோ பேசறதை நேர்ல பார்க்க சான்ஸ் கிடைச்சுருக்குன்னு சொல்லி எதிர்பார்ப்பை எகிற வைக்க, வை.கோ மைக்கை பிடிச்சதும் காமிரா ரஜினியையும் வைட் ஆங்கிளில் படம் பிடிக்க ஆரம்பித்தது. வை.கோவின் பரபரப்பான ஆன்மீகப்பேச்சும் ரஜினியின் படபட ரியாக்ஷனையும் காமிரா சுட்டுத்தள்ளி வெளியே பெரிய திரையில் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விசிலை அள்ளிக்கொண்டது. 'நீங்க ஏன் அரசியலில் இருக்கணும்'னு வைகோவிடம் இளையராஜா கேட்டதில் தப்பேயில்லை. தனக்கு இன்னென்ன விஷயம் தெரியுங்கிறதை வை.கோ அரசியல் கலக்காம பேசி தான் அரசியல்வாதி மட்டுமல்ல என்பதை ஆடியன்ஸ்க்கு சொன்னாரோ இல்லையோ ரஜினி புரிஞ்சுக்கணுங்கிற மாதிரிதான் பேச்சு இருந்தது. கடைசியாக, பேச்சு எப்படி இருந்தது என்பதை ரஜினியிடம் கேட்டு கமெண்ட்ஸ் வாங்கவும் மறக்கவில்லை. விழாவுக்கு வைரமுத்து வராதது பெரிய குறை. பா.விஜய்யை பாராட்ட போய்விட்டாரோ என்று நினைத்தால் அதுவுமில்லை.
மனுஷனுக்கு தேவை சந்தோஷமோ, கஷ்டமோ இல்லை. அமைதிதான்னு ரஜினி சொன்னதை வழிமொழிந்து பேச்சை ஆரம்பித்த ராஜா வழக்கம்போல தனது ஸ்டைலில் தொடர்ந்தார். கொஞ்சம் வெடிகுண்டு + சப்பைக்கட்டு, கொஞ்சம் சுயபுராண ஆன்மீக அனுபவங்கள், இசை பத்தின விளக்கங்கள், ஒரு நாலு வரி பாடல்...இளையராஜாவின் ஆன்மீகம் இன்னும் பக்திமார்க்கத்தில் மட்டுமே இருக்கிறது. சாம்பிளுக்கு ஒரு வெடிகுண்டு. 'கமலுக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது; கடவுளுக்கும் கமல் நம்பித்தான் ஆகணுங்கிற அவசியம் கிடையாது'
நடுநடுவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறேன் பேர்வழின்னு பிளேடை கழுத்தில் வைக்காத குறையாக இம்சைப்படுத்திய ஆசாமி உச்சகட்டமாய் ஒரு பாடலையும் பாட ஆரம்பித்து கூட்டத்தை கலைக்க வைக்க பிரயத்தனப்பட்டார். இளையராஜாவுக்காக யாகூ குழுமம் நடத்துபவரையும் மேடையில் கூப்பிட்டு வெச்சு கெளரவித்தார்கள். (ம்... நமக்கும் ஒரு காலம் வரும்!) நன்றி சொல்லுகிறேன் பேர்வழின்னு வந்த ஒரு பாதிரியாரோ சொந்தக்கதை சோகக்கதையையெல்லாம் அள்ளிவிட்டு, போகும்போது மறக்காம பிரசங்க நோட்டீஸ் வாங்கிக்கவும் சொன்னார். திருவாசகத்தை பத்தி எல்லோரும் திருவாய் மலர்ந்தருளுவதை கேட்கவும் கொஞ்சம் பொறுவாசகம் வேண்டும். நதிநீர் இணைப்பு பற்றி வை.கோவும் ரஜினியும் ஸ்டெப் எடுக்கவேண்டும்னு பாதிரியார் சொன்னதை அரசியல் பேச்சுன்னு இளையராஜா சொன்னதும் செம பாலிடிக்ஸ்தான்! இதே விழாவை நேரு ஸ்டேடியத்தில் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ கூப்பிட்டு எம்.எஸ்வியிலிருந்து வித்யாசாகர் வரை, டி.எம்.எஸ் முதல் தேவன் வரை, வாலியிலிருந்து யுகபாரதி வரை, கே.பாலசந்தர் முதல் பாலா வரை எல்லோரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட வேண்டிய விழா, அனுபவமில்லாதவர்களின் அரென்ச்மெண்ட்டில் சொதப்பலாகிவிட்டது. ரஜினி வந்த பரபரப்பில் கூட்டம் திமிலோகப்பட்டு, மியூசிக் அகாடமியின் வாசல் கண்ணாடி உடைந்து, பால்கனி நிரம்பி வழிந்து, லோக்கல் போலீஸ் உள்ளே வந்து 'தள்ளு முள்ளு' நடத்தினாலும் 'இதெல்லாம் எனக்கு சம்பந்தமில்லாத விஷயம்'ங்கிற மாதிரி நடந்துகிட்டவங்க விழாவை ஏற்பாடு பண்ணினவங்கதான். அது சரி, நமக்கு மட்டும் என்ன சம்பந்தமாம்? வந்தோமோ நம்ம ஆளை பார்த்தோமா.. நடையை கட்டுனோமான்னுதானே இருந்தோம். இதெப்படி இருக்கு?
மேடையிலேயே கமலும் பாரதிராஜாவும் ஓரங்கட்டிக்கொண்டார்கள். விழா முடியும் வரை ரஜினியோடு இளையராஜா பேசிக்கொண்டே.......இருந்தார். அதே மாதிரி வைகோவும் என். ராமும். பாவம், பாலமுரளி கிருஷ்ணாவுக்கு சரியான கம்பெனி கிடைக்கவில்லை. நடுவில் மாட்டிக்கொண்டு அவஸ்தையாய் உட்கார்ந்திருந்தார். வைகோவுக்கு நடைபயண அனுபவம் இன்னும் மறக்கவில்லை. அடிக்கடி மேடையிலேயே நடைபயின்று கொண்டிருந்தார். ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவின் இரட்டைக்குழல் துப்பாக்கின்னு பீட்டர் சொன்னதை மறுத்த கமல் நாங்க ரெண்டு பேரும் ரெட்டை மாடுகள் மாதிரின்னு சொன்னார். தொடர்ந்து விளக்க வந்த பாரதிராஜா ரெண்டு பேரும் அசோக சக்கரத்திலிருக்கும் சிங்கங்கள் என்றார். (அட..அட விடுங்கப்பா, திருவாசக விழாவுக்கு வந்தா திட்டம் போட்டு தனிக்கச்சேரி நடத்துறீங்களேன்னு யாராவது சொல்லக்கூடாதா?) இரண்டையும் இணைக்கும் சக்கரம் இளையராஜா என்பதையும் மேலிருக்கும் மகுடங்கள் தன்னைப்போன்ற இயக்குநர்கள் என்பதும் பின்னிணைப்பு. நாளைக்கு 'சிங்கங்கள் காலடியில் சிக்கியிருக்குது தமிழ் சினிமா'ன்னும் சொல்வார், சினி·பீல்டுல பிரச்னை வந்தா! (காலடியில் இருந்த தண்ணீர் பாட்டிலை தேட கமல் கொஞ்சம் கஷ்டப்பட்டது தனி கொசுறு)
கஷ்டப்பட்டு வாங்குற சம்பளத்தை பொண்டாட்டிக்கிட்ட கொடுக்கிறதும் ஒண்ணுதான்; திருப்பதி உண்டியலில் போடறதும் ஒண்ணுதான்னு ரஜினி போட்ட ரிலாக்ஸ் குண்டில் அரங்கம் கொஞ்சம் கலகல. ரஜினிக்கு பிடிச்ச மேடை பேச்சாளர் வைகோவாம். (நோ கமெண்ட்ஸ்!) வை.கோ பேசறதை நேர்ல பார்க்க சான்ஸ் கிடைச்சுருக்குன்னு சொல்லி எதிர்பார்ப்பை எகிற வைக்க, வை.கோ மைக்கை பிடிச்சதும் காமிரா ரஜினியையும் வைட் ஆங்கிளில் படம் பிடிக்க ஆரம்பித்தது. வை.கோவின் பரபரப்பான ஆன்மீகப்பேச்சும் ரஜினியின் படபட ரியாக்ஷனையும் காமிரா சுட்டுத்தள்ளி வெளியே பெரிய திரையில் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விசிலை அள்ளிக்கொண்டது. 'நீங்க ஏன் அரசியலில் இருக்கணும்'னு வைகோவிடம் இளையராஜா கேட்டதில் தப்பேயில்லை. தனக்கு இன்னென்ன விஷயம் தெரியுங்கிறதை வை.கோ அரசியல் கலக்காம பேசி தான் அரசியல்வாதி மட்டுமல்ல என்பதை ஆடியன்ஸ்க்கு சொன்னாரோ இல்லையோ ரஜினி புரிஞ்சுக்கணுங்கிற மாதிரிதான் பேச்சு இருந்தது. கடைசியாக, பேச்சு எப்படி இருந்தது என்பதை ரஜினியிடம் கேட்டு கமெண்ட்ஸ் வாங்கவும் மறக்கவில்லை. விழாவுக்கு வைரமுத்து வராதது பெரிய குறை. பா.விஜய்யை பாராட்ட போய்விட்டாரோ என்று நினைத்தால் அதுவுமில்லை.
மனுஷனுக்கு தேவை சந்தோஷமோ, கஷ்டமோ இல்லை. அமைதிதான்னு ரஜினி சொன்னதை வழிமொழிந்து பேச்சை ஆரம்பித்த ராஜா வழக்கம்போல தனது ஸ்டைலில் தொடர்ந்தார். கொஞ்சம் வெடிகுண்டு + சப்பைக்கட்டு, கொஞ்சம் சுயபுராண ஆன்மீக அனுபவங்கள், இசை பத்தின விளக்கங்கள், ஒரு நாலு வரி பாடல்...இளையராஜாவின் ஆன்மீகம் இன்னும் பக்திமார்க்கத்தில் மட்டுமே இருக்கிறது. சாம்பிளுக்கு ஒரு வெடிகுண்டு. 'கமலுக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது; கடவுளுக்கும் கமல் நம்பித்தான் ஆகணுங்கிற அவசியம் கிடையாது'
நடுநடுவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறேன் பேர்வழின்னு பிளேடை கழுத்தில் வைக்காத குறையாக இம்சைப்படுத்திய ஆசாமி உச்சகட்டமாய் ஒரு பாடலையும் பாட ஆரம்பித்து கூட்டத்தை கலைக்க வைக்க பிரயத்தனப்பட்டார். இளையராஜாவுக்காக யாகூ குழுமம் நடத்துபவரையும் மேடையில் கூப்பிட்டு வெச்சு கெளரவித்தார்கள். (ம்... நமக்கும் ஒரு காலம் வரும்!) நன்றி சொல்லுகிறேன் பேர்வழின்னு வந்த ஒரு பாதிரியாரோ சொந்தக்கதை சோகக்கதையையெல்லாம் அள்ளிவிட்டு, போகும்போது மறக்காம பிரசங்க நோட்டீஸ் வாங்கிக்கவும் சொன்னார். திருவாசகத்தை பத்தி எல்லோரும் திருவாய் மலர்ந்தருளுவதை கேட்கவும் கொஞ்சம் பொறுவாசகம் வேண்டும். நதிநீர் இணைப்பு பற்றி வை.கோவும் ரஜினியும் ஸ்டெப் எடுக்கவேண்டும்னு பாதிரியார் சொன்னதை அரசியல் பேச்சுன்னு இளையராஜா சொன்னதும் செம பாலிடிக்ஸ்தான்! இதே விழாவை நேரு ஸ்டேடியத்தில் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ கூப்பிட்டு எம்.எஸ்வியிலிருந்து வித்யாசாகர் வரை, டி.எம்.எஸ் முதல் தேவன் வரை, வாலியிலிருந்து யுகபாரதி வரை, கே.பாலசந்தர் முதல் பாலா வரை எல்லோரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட வேண்டிய விழா, அனுபவமில்லாதவர்களின் அரென்ச்மெண்ட்டில் சொதப்பலாகிவிட்டது. ரஜினி வந்த பரபரப்பில் கூட்டம் திமிலோகப்பட்டு, மியூசிக் அகாடமியின் வாசல் கண்ணாடி உடைந்து, பால்கனி நிரம்பி வழிந்து, லோக்கல் போலீஸ் உள்ளே வந்து 'தள்ளு முள்ளு' நடத்தினாலும் 'இதெல்லாம் எனக்கு சம்பந்தமில்லாத விஷயம்'ங்கிற மாதிரி நடந்துகிட்டவங்க விழாவை ஏற்பாடு பண்ணினவங்கதான். அது சரி, நமக்கு மட்டும் என்ன சம்பந்தமாம்? வந்தோமோ நம்ம ஆளை பார்த்தோமா.. நடையை கட்டுனோமான்னுதானே இருந்தோம். இதெப்படி இருக்கு?
Subscribe to:
Posts (Atom)