Thursday, September 29, 2005

அமானுஷ்யம்

Image hosted by Photobucket.com

பூம்புகார் - மேலையூர் மெயின் ரோடிலிருந்து குறுக்காக புகுந்து செம்பொன்னார் கோயில் நோக்கி போகும் சாலையிலிருந்து விலகி காவிரியாற்றின் கரையில் ஆலமரத்தினடியில் கொஞ்சம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கண்ணில் பட்ட சிலை. தலையை கொடுத்த தேவி யாரென்று தெரியவில்லை. யார், எதற்காக இதை இங்கே கொண்டு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆடு, மாடு கூட சீந்த ஆளில்லாத இடத்தில், உச்சி வெய்யில் நேரத்தில் திடீரென்று பிரத்யட்சமானது போன்ற பிரமைக்கு காரணம் தெரியவில்லை. இப்போதெல்லாம் அடிக்கடி ஆழ் மனதில் ·பிளாஷ் ஆகும் காட்சிகளில் இதுவும் ஒன்று.