Saturday, December 31, 2005
2005 - 2006
2005 - ஏகப்பட்ட சந்தோஷங்கள், நிறைய பாராட்டு, கைகுலுக்கல், புதிய நட்புகள், செல்லத்திட்டுகள், அனுசரணையான பேச்சுக்கள் என சந்தோஷத்திற்கு குறைச்சலில்லாத வருஷமாக சொல்லப்படவேண்டியதுதான் எதிர்பாராமல் வந்த ஒரு பெரிய இழப்பினால் சோகத்துக்கு சொந்தமாகிவிட்டது. எந்த வருஷமும் பார்த்திராத இழப்பை இந்த வருஷம் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அடுத்தடுத்து வந்த ஏகப்பட்ட இறப்புகள். இயக்கம் ஸ்தம்பித்து சலனமற்று கிடந்த மனிதர்களால் இதயம் கனத்துப்போனது. போனது போகட்டும்... 2006 சந்தோஷமான வருஷமாக இருக்கட்டும் என்கிற பேராசையெல்லாம் எனக்கில்லை. இப்போதெல்லாம் நிதர்சனம் ஒரு சின்ன துழாவலில் கைக்கு தட்டுப்படுகிறது. சந்தோஷத்தை தொடர்ந்து வரும் கஷ்டத்தைத்தான் எதிர்கொள்ள முடியவில்லை. சந்தோஷம் வேண்டவே வேண்டாம். சந்தோஷத்தை விட நிம்மதிதான் இப்போதைக்கு முக்கியம். இந்த புதிய வருஷமாவது இறப்புகளும், இழப்புகளும், சோதனைகளும் இல்லாத நிம்மதியான வருஷமாக இருந்துவிட்டு போகட்டும்!
Monday, December 26, 2005
மாற்றுப்பாதை
பூமி ஒரு சுற்று சுற்றியிருப்பதை நம்பவே முடியவில்லை. வாணகிரி ஊராட்சி அலுவலக கட்டிடத்தை ஒட்டி தரிசாக கிடந்த இடங்களில் இப்போது கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்திருக்கின்றன. பீச் ஓரமாய் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் இப்போது மொட்டை மாடிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றன. மீனவ குடிசைகள் இருந்த இடமெல்லாம் படகுகளை நிறுத்தி வைக்கும் ஷெட்டாக மாறியிருக்கிறது. பூம்புகாருக்கு 4 கி.மீ முன்னால் இருக்கும் அந்த மெகா பாலத்தின் கட்டுமான வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்னும் பழைய பரபரப்பு மிச்சமிருக்கிறது. கலைக்கூடத்தை ஓட்டியிருக்கும் அந்த அரங்கத்தில் ஆடுகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. ரோட்டில் போகிறவர்களையெல்லாம் சப்பாத்தி சாப்பிட கூப்பிட்ட அந்த சர்தார்ஜியின் முகம் ஞாபகத்துக்கு வருகிறது. ஏதோ ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பழைய போர்டு உடைந்து ஓரமாய் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் குடிக்க சரியான தண்ணீர் கூட கிடைத்திராத பூம்புகாரில் இன்று கிடைக்காதது எதுவுமில்லை. மீனவ சமுதாயத்தை மட்டுமல்லாமல் கடலோர கிராமங்களின் முகவரியை மட்டுமல்ல முகத்தையும் சுனாமி மாற்றியிருக்கிறது. ஏகப்பட்ட அரசியல் ஈகோ பிரச்னைகளுக்கும் நடுவேயும் பல நல்ல விஷயங்கள் நடந்தேறியிருக்கின்றன. நல்லதோ, கெட்டதோ இன்று எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறது.
ஒரு வருஷமாய் இன்னும் கிடைக்காத விஷயம் ஒன்று உண்டு. 'சுனாமி'ன்னா பெருசா அலை துரத்திட்டு வரும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. எதனால் வரும், வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள் ரொம்ப குறைவு. ஓரே மாதத்தில் பள்ளிக்கூடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. ஆனால், பள்ளிக்கூட பாடங்களில் சுனாமி பற்றிய செய்திகள் இன்னும் சொல்லப்படவில்லை. மத்திய அரசோ, மாநில அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ மக்களுக்கு இலவசங்களை இறக்குமதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை நாலு பேரை உட்கார வைத்து சுனாமின்னா இதுதான் என்று சொல்ல முயற்சிக்கவேயில்லை. உதவிக்கு வந்த மகளில் சுய உதவி குழுக்களினால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. ஒரு அனுதாப அலையே வருமளவுக்கு அடுத்தவரிடம் பேசுவது எப்படி என்பதில் விவரமாக இருக்கும் மிஸ்டர் பொது ஜனத்துக்கும் சுனாமி பற்றி தெரிந்து கொள்ள நேரமில்லை. அடிக்கடி அந்தப்பக்கமாய் சென்று வந்தாலும் ஒரு பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் கொடுக்கமளவுக்கு நமக்கும் நேரமில்லையே என்கிற மனசாட்சியின் குரலை உதாசீனப்படுத்திவிட்டுதான் மேற்கொண்டு தட்டச்ச வேண்டியிருக்கிறது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. சுனாமியோ, வெள்ளமோ எது வந்தாலும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். எது நடந்தாலும் மாற்றம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் ஆதாரத்தையே அசைத்துப்பார்க்கும் மெகா மாற்றம் வரும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. பாதை குழப்பமாக இருந்தாலும் செய்தி தெளிவாகத்தான் இருக்கிறது.
ஒரு வருஷமாய் இன்னும் கிடைக்காத விஷயம் ஒன்று உண்டு. 'சுனாமி'ன்னா பெருசா அலை துரத்திட்டு வரும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. எதனால் வரும், வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள் ரொம்ப குறைவு. ஓரே மாதத்தில் பள்ளிக்கூடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. ஆனால், பள்ளிக்கூட பாடங்களில் சுனாமி பற்றிய செய்திகள் இன்னும் சொல்லப்படவில்லை. மத்திய அரசோ, மாநில அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ மக்களுக்கு இலவசங்களை இறக்குமதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை நாலு பேரை உட்கார வைத்து சுனாமின்னா இதுதான் என்று சொல்ல முயற்சிக்கவேயில்லை. உதவிக்கு வந்த மகளில் சுய உதவி குழுக்களினால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. ஒரு அனுதாப அலையே வருமளவுக்கு அடுத்தவரிடம் பேசுவது எப்படி என்பதில் விவரமாக இருக்கும் மிஸ்டர் பொது ஜனத்துக்கும் சுனாமி பற்றி தெரிந்து கொள்ள நேரமில்லை. அடிக்கடி அந்தப்பக்கமாய் சென்று வந்தாலும் ஒரு பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் கொடுக்கமளவுக்கு நமக்கும் நேரமில்லையே என்கிற மனசாட்சியின் குரலை உதாசீனப்படுத்திவிட்டுதான் மேற்கொண்டு தட்டச்ச வேண்டியிருக்கிறது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. சுனாமியோ, வெள்ளமோ எது வந்தாலும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். எது நடந்தாலும் மாற்றம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் ஆதாரத்தையே அசைத்துப்பார்க்கும் மெகா மாற்றம் வரும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. பாதை குழப்பமாக இருந்தாலும் செய்தி தெளிவாகத்தான் இருக்கிறது.
Monday, December 12, 2005
ஹேப்பி பர்த்டே!
'இன்று புதிதாய் பிறந்தோம்' என்கிற வார்த்தையை படிக்கும்போது அதற்கான அர்த்தம் ரொம்ப நாள் வரை புரிந்ததில்லை. ரொம்ப நாள் என்று பொதுவாய் சொல்வதைவிட பத்து வருஷத்துக்கு முன்புவரை என்று சொல்வது இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். அப்போதெல்லாம் கேள்வி கேட்பது பிடித்தமான விஷயம். பொறுப்பு, பதில் சொல்பவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்த பதினெட்டு வயசு. தினமும் டஜன் கணக்கில் கேள்விகளை எழுதி தள்ளி அனுப்பிவிட்டாலும் பிரசுரிப்பார் யாருமில்லை. எதுவாக இருந்தாலும் பிரசவித்து, பிரசுரமாய் வந்தால்தான் பெருமை. 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்' ஸ்டைலில் பத்திரிக்கையை தூக்கிக்கொண்டு ஓடிவந்து உற்சாகத்தில் ஊரையே கூட்டிய அனுபவம் பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கே உண்டு என்கிறபோது என்னைப் போன்ற சில்லுண்டிகளை பற்றி சொல்லவே வேண்டாம்! மூன்று வருஷம் போராடியபோது கிடைக்காத அங்கீகாரம், மூன்று நிமிஷ பதிலில் அதுவும் எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சந்தோஷத்தில் நிஜமாகவே நெஞ்சை அடைத்தது. ஓரே நிமிஷத்தில் உயரத்திற்கு போன கால்கள் தரையை தொட சில நாட்கள் ஆனது உண்மைதான். ஒரு சாதாரண வாசகனை எழுத்தாளனாக்குவது என்கிற முயற்சிக்கான முதல் விதை பத்து வருஷத்திற்கு முன்னர் இதே நாளில் கிட்டதட்ட இதே நேரத்தில்தான் தூவப்பட்டது. விதை முளைத்து வந்திருப்பது நல்ல செடியா, முள்செடியா என்பதெல்லாம் தனிக்கச்சேரி.
12.12.1995 தூர்தர்ஷன் பேட்டியிலிருந்து.... (click here)
தியானத்தின் போது மனம் அலைபாய்கிறதே? அதை எப்படி கட்டுப்படுத்துவது? - ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை.
'இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க. சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது. அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது. அது தேவையே இல்லை. அதைப்பத்தி கவலைப்படாதீங்க. காலையில எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க. அது எங்காவது போகட்டு. எது பின்னால வேணும்னாலும் போகட்டும் யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும். ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க. அதை கன்டினியூ பண்ணுங்க. அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும். அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும். இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சுயபுராணத்துல சொன்ன மாதிரி 'நீங்க பத்திரிக்கைங்களுக்கெல்லாம் எழுதுவீங்களா'ன்னு எல்லோரும் கேட்குற நிலைமைதான் இன்னிக்கும். அதனால புதுசா நமக்கு நாமே திட்டம்! நம்மை பத்தி நாமே சொல்லிக்கிறதுதான் நமக்கு நல்லது.
ஹேப்பி பர்த்டே ரைட்டர் ராம்கி!
Thursday, December 08, 2005
விடாது கற்பு!
சர்க்குலேஷன் ரொம்பவே குறைஞ்சு போச்சேன்னு நினைச்சு கவலைப்பட்டு பந்தை எறிஞ்ச இந்தியா டுடேவுக்கும் சரி ஆட்டத்துக்கு யாரும் கூப்பிடாம கங்குலி மாதிரி இருந்தவளுக்கு வகையாக ஒரு பந்து மாட்டும்போது விளாசலாம்னு நினைச்ச குஷ்புவுக்கும் சரி, நம்பவே முடியலை! சினிமாக்காரி ஒருத்தி சிக்கியிருக்கா...பந்தை கரெக்டா புடிச்சு அவுட்டாக்கினா, பவுடர் பயலுங்க பயந்துடுவானுங்க... பந்தை புடிக்கலேன்னாலும் பரவாயில்லை, டிரை பண்ணினா பப்ளிசிட்டிக்கு உத்திரவாதம். எது நடந்தாலும் நல்லதுக்குத்தான்னு பெவிலியனில் ரெண்டு டீம் காப்டனும் படு ரிலாக்ஸ். கிரவுண்டுல யாருமே இல்லேன்னு நினைச்சு மட்டையை குறுக்கே வைச்ச குஷ்புவை மீறி பந்து அந்தரத்தில் பறக்க, இதுதாண்டா டைம்னு உஷாராகி பகுத்தறிவு, சமூக நீதி, தமிழ் பாதுகாப்பு வகையறாக்கள் கைகோர்த்துகிட்டு ·பீல்டிங் ·பார்முக்கு வர, ஒக்க நிமிஷத்தில் எல்லாம் ஓவர். மேலே போன பந்து, வெடிகுண்டாய் மாறி.... அடப்பாவமே ஒரே ரண களம்தான்.
நம்மளை தவிர சன் நியூஸ் கூத்தை யாரும் பார்க்கலைன்னு நினைச்சது தப்புதான். இரண்டு பக்கத்துக்கும் நாமதான் நாட்டாமைங்கிற மாதிரி அந்த மாடு போட்ட அட்டகாசம் தாங்கமுடியலை. 1996ஆம் வருஷம் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்னர் புது ஆட்சி என்னவெல்லாம் செய்யணும்னு ஒரு வாசகர் கருத்து கேட்டிருந்தது. அதில் அடியேனும் கருத்து எழுதி பிரசுரமானது இன்னும் ஞாபகத்துக்கு இருக்குது. மதுவிலக்கு வேண்டாம்னு எழுதித்தள்ளிட்டு ஆசிரியர் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் மதுவிலக்கு வேண்டும்னு மாத்தி எழுதிக்கொடுத்ததாம் அந்த மாடு. வாக்குமூலம் கொடுத்திருப்பது அப்போது பொறுப்பாசிரியராக இருந்த ஞாநி!
நடிகர் சங்கத்திலிருந்து நோட்டீஸ் வந்தால் கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கும் ஸாரின்னு சுகாசினி சொன்னதில் 'ஸாரி'ங்கிற வார்த்தையை சரத்குமாரே சென்ஸார் பண்ணிட்டாராம். இப்படியெல்லாம் நடிகருங்களே சென்ஸார் பண்ணிட்டா எஸ்.ஜே. சூர்யாவுக்கு குஷியாக இருக்கும். எல்லாவற்றையும் நியாயப்படுத்துவதற்காக துடைப்பக்கட்டையையும் பெருமையா தூக்கிப்பிடித்த திருமாவளவனின் ஆட்டமும் எஸ்.ஜே.சூர்யாவின் டூயட் டான்ஸ் மாதிரி நாராசமாகத்தான் இருந்தது. குஷ்பு விஷயத்தில் சைலண்ட்¡க சதமடித்த பெரிசு கூட சுகாசினி விஷயத்தில் டக் அடிக்க வேண்டியிருந்தது. சுகாசினி தமிழச்சியே கிடையாது. கைபர் கணவாய் வழியா வந்தவர்தான்னு சீமான் பேசியிருக்கிறதை பத்தி ஞாநி கமெண்ட் அடிக்கலாம். ஆனா, நாம கமெண்ட அடிச்சா பூணூலைத்தான் மாட்டிவிடுவாங்க.
நம்ம நமீதா மாதிரி நச்சுன்னு ஞாநி கடைசியா ஒரு கேள்வி கேட்டிருப்பதில் நியாயமிருக்கிறது. பெரியாரின் நாத்திகம், பெண் விடுதலை, ஜாதி ஒழிப்புக் கொள்கைகளை ஏற்காத ராமதாஸ் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை மட்டும் ஆதரித்து பெரியாரின் வாரிசுன்னு பட்டத்தை வாங்கிக்கும்போது இட ஒதுக்கீட்டை ஏற்காத வாஸந்தி, மாலன் போன்றோர் பெரியாரின் பெண் விடுதலைக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பெரியாரின் வாரிசுகளாக ஏன் ஆகக்கூடாது? நமக்கேண்டா வம்பு! திருமாவளவன் வழியையே பின்பற்றலாம். தமிழ்நாடே வெள்ளக்காடா இருக்கும்போது குஷ்பு விஷயத்தை பிடிச்சு தொங்க வேண்டாம்னு சொல்லியிருக்கார். ஓவர் டூ வெள்ள மேட்டர்.
கொள்ளிடத்து மக்கள் கெலிக்கிறாங்க. அரசியல் தலைவருங்க எல்லாம் அடிக்கடி வந்துட்டுப் போறாங்க. பண புழக்கம் ஜாஸ்தியா இருக்குதாம். மணிசங்கர் ஏன் வரலைன்னு ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்க.கையில துட்டு இல்லை. அதனால வரலை. மக்களை சந்திக்கணும்னா நிறைய சூட்கேஸ் வேணும். அரசியல்வாதிங்க கிட்டே கைநீட்டி காசு வாங்காத தமிழனின் கற்பு கொடி கட்டி பறக்குது! அரசியலுக்கு புதுசா வந்திருக்கும் கரைவேஷ்டியோ கட்டுப்படி ஆகலைன்னு பாதி வழியிலேயே ரிட்டர்ன் ஆயிட்டாராம். இதுக்கெல்லாம் அசராத சமூக நீதி போராளியோ முப்பத்திரெண்டு காரில் வந்திருந்து ஏரியாவையெல்லாம் சுற்றிப்பார்த்து மக்களின் துயர் துடைத்துவிட்டு போயிருக்கிறார். அரசியல் மேட்டரெல்லாம நமக்கெதுக்கு? கொள்ளிடம் இப்போது எப்படி இருக்கிறது? நல்லாத்தான் இருக்குது.
'கொள்ளிட பாலத்துல பன்னிங்க கூட்டமா போயிட்டிருக்கிற மாதிரி போட்டோவை போட்டிருக்கியே... வம்புதானே?'
'அய்யய்யோ.. வேற பொருத்தமான போட்டோ இல்லீங்கண்ணா... வேணும்னா அதை ஆ·ப் த ரெக்கார்டா வெச்சுக்கோங்க'
நம்மளை தவிர சன் நியூஸ் கூத்தை யாரும் பார்க்கலைன்னு நினைச்சது தப்புதான். இரண்டு பக்கத்துக்கும் நாமதான் நாட்டாமைங்கிற மாதிரி அந்த மாடு போட்ட அட்டகாசம் தாங்கமுடியலை. 1996ஆம் வருஷம் கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்னர் புது ஆட்சி என்னவெல்லாம் செய்யணும்னு ஒரு வாசகர் கருத்து கேட்டிருந்தது. அதில் அடியேனும் கருத்து எழுதி பிரசுரமானது இன்னும் ஞாபகத்துக்கு இருக்குது. மதுவிலக்கு வேண்டாம்னு எழுதித்தள்ளிட்டு ஆசிரியர் குழு கேட்டுக்கொண்டதன் பேரில் மதுவிலக்கு வேண்டும்னு மாத்தி எழுதிக்கொடுத்ததாம் அந்த மாடு. வாக்குமூலம் கொடுத்திருப்பது அப்போது பொறுப்பாசிரியராக இருந்த ஞாநி!
நடிகர் சங்கத்திலிருந்து நோட்டீஸ் வந்தால் கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கும் ஸாரின்னு சுகாசினி சொன்னதில் 'ஸாரி'ங்கிற வார்த்தையை சரத்குமாரே சென்ஸார் பண்ணிட்டாராம். இப்படியெல்லாம் நடிகருங்களே சென்ஸார் பண்ணிட்டா எஸ்.ஜே. சூர்யாவுக்கு குஷியாக இருக்கும். எல்லாவற்றையும் நியாயப்படுத்துவதற்காக துடைப்பக்கட்டையையும் பெருமையா தூக்கிப்பிடித்த திருமாவளவனின் ஆட்டமும் எஸ்.ஜே.சூர்யாவின் டூயட் டான்ஸ் மாதிரி நாராசமாகத்தான் இருந்தது. குஷ்பு விஷயத்தில் சைலண்ட்¡க சதமடித்த பெரிசு கூட சுகாசினி விஷயத்தில் டக் அடிக்க வேண்டியிருந்தது. சுகாசினி தமிழச்சியே கிடையாது. கைபர் கணவாய் வழியா வந்தவர்தான்னு சீமான் பேசியிருக்கிறதை பத்தி ஞாநி கமெண்ட் அடிக்கலாம். ஆனா, நாம கமெண்ட அடிச்சா பூணூலைத்தான் மாட்டிவிடுவாங்க.
நம்ம நமீதா மாதிரி நச்சுன்னு ஞாநி கடைசியா ஒரு கேள்வி கேட்டிருப்பதில் நியாயமிருக்கிறது. பெரியாரின் நாத்திகம், பெண் விடுதலை, ஜாதி ஒழிப்புக் கொள்கைகளை ஏற்காத ராமதாஸ் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை மட்டும் ஆதரித்து பெரியாரின் வாரிசுன்னு பட்டத்தை வாங்கிக்கும்போது இட ஒதுக்கீட்டை ஏற்காத வாஸந்தி, மாலன் போன்றோர் பெரியாரின் பெண் விடுதலைக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பெரியாரின் வாரிசுகளாக ஏன் ஆகக்கூடாது? நமக்கேண்டா வம்பு! திருமாவளவன் வழியையே பின்பற்றலாம். தமிழ்நாடே வெள்ளக்காடா இருக்கும்போது குஷ்பு விஷயத்தை பிடிச்சு தொங்க வேண்டாம்னு சொல்லியிருக்கார். ஓவர் டூ வெள்ள மேட்டர்.
கொள்ளிடத்து மக்கள் கெலிக்கிறாங்க. அரசியல் தலைவருங்க எல்லாம் அடிக்கடி வந்துட்டுப் போறாங்க. பண புழக்கம் ஜாஸ்தியா இருக்குதாம். மணிசங்கர் ஏன் வரலைன்னு ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்க.கையில துட்டு இல்லை. அதனால வரலை. மக்களை சந்திக்கணும்னா நிறைய சூட்கேஸ் வேணும். அரசியல்வாதிங்க கிட்டே கைநீட்டி காசு வாங்காத தமிழனின் கற்பு கொடி கட்டி பறக்குது! அரசியலுக்கு புதுசா வந்திருக்கும் கரைவேஷ்டியோ கட்டுப்படி ஆகலைன்னு பாதி வழியிலேயே ரிட்டர்ன் ஆயிட்டாராம். இதுக்கெல்லாம் அசராத சமூக நீதி போராளியோ முப்பத்திரெண்டு காரில் வந்திருந்து ஏரியாவையெல்லாம் சுற்றிப்பார்த்து மக்களின் துயர் துடைத்துவிட்டு போயிருக்கிறார். அரசியல் மேட்டரெல்லாம நமக்கெதுக்கு? கொள்ளிடம் இப்போது எப்படி இருக்கிறது? நல்லாத்தான் இருக்குது.
'கொள்ளிட பாலத்துல பன்னிங்க கூட்டமா போயிட்டிருக்கிற மாதிரி போட்டோவை போட்டிருக்கியே... வம்புதானே?'
'அய்யய்யோ.. வேற பொருத்தமான போட்டோ இல்லீங்கண்ணா... வேணும்னா அதை ஆ·ப் த ரெக்கார்டா வெச்சுக்கோங்க'
Saturday, December 03, 2005
செகண்ட் செஞ்சுரி
நெஞ்சத்தில் பெயர் எழுதி, கண்ணுக்குள் நான் படிப்பேன்...
கற்பனைகளில் சுகம், சுகம்... கண்டதென்னவோ நிஜம், நிஜம்.
Hits of 1978
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் - காற்றினிலே வரும் கீதம்
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான்
ஒரு நடிகை பார்க்கும் நாடகம் - ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
மோக சங்கீதம் - கண்ணன் ஒரு கைக்குழந்தை
கோயில் மணியோசை - கிழக்கே போகும் ரயில்
சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்
அமுத தமிழில் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது
நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி
ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் - வணக்கத்துக்குரிய காதலியே
பிளாக் எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சுங்கிறதுக்காக இப்படியா படத்தை போட்டு ஒப்பேத்துறதுன்னு கண்கலங்கி ஆ...ச்சரியப்படறது நம்ம கமல்தான்!
கற்பனைகளில் சுகம், சுகம்... கண்டதென்னவோ நிஜம், நிஜம்.
Hits of 1978
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் - காற்றினிலே வரும் கீதம்
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான்
ஒரு நடிகை பார்க்கும் நாடகம் - ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
மோக சங்கீதம் - கண்ணன் ஒரு கைக்குழந்தை
கோயில் மணியோசை - கிழக்கே போகும் ரயில்
சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்
அமுத தமிழில் - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது
நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி
ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் - வணக்கத்துக்குரிய காதலியே
பிளாக் எழுத ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சுங்கிறதுக்காக இப்படியா படத்தை போட்டு ஒப்பேத்துறதுன்னு கண்கலங்கி ஆ...ச்சரியப்படறது நம்ம கமல்தான்!
Thursday, December 01, 2005
1977 பாடல்கள்
ஹி..ஹி.. வணக்கம்பா. எல்லாரும் எப்பிடி கீறீங்கோ? கொஞ்ச நாளா தலையை மறைச்சுக்கினு இருக்க வேண்டியதா போச்சு. அதான் வரமுடியலை. அதாகப்பட்டது அம்மா டிவியை கிண்டலடிச்சாலும் தப்பு அய்யா டிவியை கிண்டலடிச்சாலும் தப்புன்னா இன்னாதான் பண்ணமுடியும்? சரி பாலிடிக்ஸ் மேட்டரெல்லாம் வேண்டாம்னு நினைச்சாலும் போரடிக்குதே. அதான் திரும்ப வந்தாச்சு!
சரி, ஒரு சூப்பர் மேட்டரோட ஸ்டார்ட் பண்ணுவோம். 'நீ மூணாம் கிளாஸ் படிக்கிறச்ச வந்த படம்டா இது'ன்னு யாராவது சொன்னா மனசுல கொஞ்சம் குளிர் அடிக்குமில்லியா.. அப்படியோரு ஜில் மேட்டர். 'ரெண்டு வயசா இருக்கும்போது வந்த சினிமாப்பா இது'ன்னு ஒரு பெரிசு சொன்னவுடன் பசக்குன்னு உட்கார்ந்துட்டேன். வெள்ளிக்கிழமை ராத்திரி சீரியல் தொல்லையெல்லாம் இல்லாத ஒரு சுபவேளை. பதினோரு மணிக்கு ஜெயா டிவியில 77 ஆம் வருஷம் வந்த பாட்டெல்லாம் வரிசையா எடுத்து வுட்டாங்க.....தூக்கம் போயோ போச்!
டெலிவுட் : 1977 பாடல்கள் More in www.tamiloviam.com
List of Movies
Aarupushpangal
Alukkoru Aasai
Andaman Kathali
Avar Enakke Sontham
Avargal
Chakravarthi
Dheepam
Dhurga Dhevi
Maduraiyai Meeta Sundara Pandian
Navarathnam
Nee Vazha Vendum
Odi Vilaiyaadu Thaaththaa
Palabhisekham
Pathinaru Vayathinile
Pattina Pravesam
Pen Jenman
Ponmani
Punniyam Seithaval
Rowdy Rakkamma
Sainthadamma Sainthadu
Sonnathai Seiven
Thunaiyiruppaal Meenatchi
Vayilla Poochi
சரி, ஒரு சூப்பர் மேட்டரோட ஸ்டார்ட் பண்ணுவோம். 'நீ மூணாம் கிளாஸ் படிக்கிறச்ச வந்த படம்டா இது'ன்னு யாராவது சொன்னா மனசுல கொஞ்சம் குளிர் அடிக்குமில்லியா.. அப்படியோரு ஜில் மேட்டர். 'ரெண்டு வயசா இருக்கும்போது வந்த சினிமாப்பா இது'ன்னு ஒரு பெரிசு சொன்னவுடன் பசக்குன்னு உட்கார்ந்துட்டேன். வெள்ளிக்கிழமை ராத்திரி சீரியல் தொல்லையெல்லாம் இல்லாத ஒரு சுபவேளை. பதினோரு மணிக்கு ஜெயா டிவியில 77 ஆம் வருஷம் வந்த பாட்டெல்லாம் வரிசையா எடுத்து வுட்டாங்க.....தூக்கம் போயோ போச்!
டெலிவுட் : 1977 பாடல்கள் More in www.tamiloviam.com
List of Movies
Aarupushpangal
Alukkoru Aasai
Andaman Kathali
Avar Enakke Sontham
Avargal
Chakravarthi
Dheepam
Dhurga Dhevi
Maduraiyai Meeta Sundara Pandian
Navarathnam
Nee Vazha Vendum
Odi Vilaiyaadu Thaaththaa
Palabhisekham
Pathinaru Vayathinile
Pattina Pravesam
Pen Jenman
Ponmani
Punniyam Seithaval
Rowdy Rakkamma
Sainthadamma Sainthadu
Sonnathai Seiven
Thunaiyiruppaal Meenatchi
Vayilla Poochi
Subscribe to:
Posts (Atom)