Monday, December 12, 2005

ஹேப்பி பர்த்டே!

Image hosted by Photobucket.com

'இன்று புதிதாய் பிறந்தோம்' என்கிற வார்த்தையை படிக்கும்போது அதற்கான அர்த்தம் ரொம்ப நாள் வரை புரிந்ததில்லை. ரொம்ப நாள் என்று பொதுவாய் சொல்வதைவிட பத்து வருஷத்துக்கு முன்புவரை என்று சொல்வது இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். அப்போதெல்லாம் கேள்வி கேட்பது பிடித்தமான விஷயம். பொறுப்பு, பதில் சொல்பவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்த பதினெட்டு வயசு. தினமும் டஜன் கணக்கில் கேள்விகளை எழுதி தள்ளி அனுப்பிவிட்டாலும் பிரசுரிப்பார் யாருமில்லை. எதுவாக இருந்தாலும் பிரசவித்து, பிரசுரமாய் வந்தால்தான் பெருமை. 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்' ஸ்டைலில் பத்திரிக்கையை தூக்கிக்கொண்டு ஓடிவந்து உற்சாகத்தில் ஊரையே கூட்டிய அனுபவம் பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கே உண்டு என்கிறபோது என்னைப் போன்ற சில்லுண்டிகளை பற்றி சொல்லவே வேண்டாம்! மூன்று வருஷம் போராடியபோது கிடைக்காத அங்கீகாரம், மூன்று நிமிஷ பதிலில் அதுவும் எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சந்தோஷத்தில் நிஜமாகவே நெஞ்சை அடைத்தது. ஓரே நிமிஷத்தில் உயரத்திற்கு போன கால்கள் தரையை தொட சில நாட்கள் ஆனது உண்மைதான். ஒரு சாதாரண வாசகனை எழுத்தாளனாக்குவது என்கிற முயற்சிக்கான முதல் விதை பத்து வருஷத்திற்கு முன்னர் இதே நாளில் கிட்டதட்ட இதே நேரத்தில்தான் தூவப்பட்டது. விதை முளைத்து வந்திருப்பது நல்ல செடியா, முள்செடியா என்பதெல்லாம் தனிக்கச்சேரி.

12.12.1995 தூர்தர்ஷன் பேட்டியிலிருந்து.... (click here)

தியானத்தின் போது மனம் அலைபாய்கிறதே? அதை எப்படி கட்டுப்படுத்துவது? - ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை.

'இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க. சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது. அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது. அது தேவையே இல்லை. அதைப்பத்தி கவலைப்படாதீங்க. காலையில எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க. அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க. அது எங்காவது போகட்டு. எது பின்னால வேணும்னாலும் போகட்டும் யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும். ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க. அதை கன்டினியூ பண்ணுங்க. அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும். அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும். இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


சுயபுராணத்துல சொன்ன மாதிரி 'நீங்க பத்திரிக்கைங்களுக்கெல்லாம் எழுதுவீங்களா'ன்னு எல்லோரும் கேட்குற நிலைமைதான் இன்னிக்கும். அதனால புதுசா நமக்கு நாமே திட்டம்! நம்மை பத்தி நாமே சொல்லிக்கிறதுதான் நமக்கு நல்லது.

ஹேப்பி பர்த்டே ரைட்டர் ராம்கி!