Saturday, May 15, 2004

சுத்தமான இலக்கியம்?!

வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒரு மசாலா சினிமா என்கிற மாதிரி ஜெயமோகன் கொஞ்ச நாளைக்கு முன்பு தீம்தரிகிடவில் சொல்லியிருந்தது பத்தி எலெக்ஷன் நேரத்து டென்ஷனில் எழுத மறந்துவிட்டேன். நல்ல இலக்கியம் என்பது வெகுஜன ரசிகர்களால் படித்து, புரிந்து, ரசிக்க முடியாத லட்சணத்தில் இருக்கவேண்டும் என்பதை யார் சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை! ஜே.பி. சாணக்கியாவின் 'படித்துறை' பத்தி ஜெயமோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசை.

எந்த ஒரு படைப்பாளியையும் எல்லோரும் ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று யதார்த்தமாய் பேசும் ஜெயமோகன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தை சிறந்த நாவல்களில் ஒன்று என்று சொல்வதற்காக வல்லிக்கண்ணனை வம்புக்கு இழுப்பது முரண்பாடு. எந்த துறையாக இருந்தாலும் அனுபவமிக்கவர்கள், தற்கால படைப்புகளின் தரம் குறித்து திருப்தி இல்லையென்றாலும் கூட புதிதாக வரும் படைப்பாளர்களை பாராட்டி அங்கீகாரம் தருவதுதான் நடைமுறை. ஜம்பதுகளிலிருந்து எழுதி வரும் வல்லிக்கண்ணனும் தி.க.சியும் அதே நடைமுறைகளை பின்பற்றுவதில் ஜெயமோகன் குறை காண்பதுதான் புரியவில்லை.

கள்ளிக்காட்டு இதிகாசம், வெகுஜன இதழான ஆனந்த விகடனில் வெளியாகிக்கொண்டிருக்கும் காலத்தில் தனக்கு சாகித்ய அகாதமி கிடைக்கும் என்று வைரமுத்து நம்பியிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு நம்பிக்கை இருந்திருந்தால், ஜெயமோகன் சொல்லியிருக்கும் அளவுகோல்களுக்கு ஏற்றவாறு இட்டு நிரப்பி அவார்டு வாங்குமளவுக்கு வைரமுத்துவுக்கு செல்வாக்கிருக்கிறது. வெகுசிலர் மட்டுமே வாசிக்கிறார்கள் என்பது தமிழிலிருக்கும் அவல நிலை என்று சொல்லி தட்டிக்கழிக்க முடியாது. இலக்கியத்தரமுள்ள படைப்புகளை சற்று மாற்றி வெகுஜன ஊடகங்களில் எழுதும்போது அவார்டு கிடைக்காமல் போனாலும் சொல்ல வந்த கருத்துக்கள் சேர வேண்டிய இடத்தை போய்ச் சேரும். தரமான இலக்கியப் படைப்புகள் வெகுஜன பத்திரிக்கைகளில் வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற கருத்தை தகர்த்தெறிந்திருக்கும் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாச'த்தையும் எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்தை'யும் வரவேற்காமலிருப்பதுதான் தமிழ் இலக்கியத்துக்கு நாம் செய்யும் கேடு என்பது என்னுடைய தாழ்வான அபிப்பிராயம்.

Friday, May 14, 2004

தனி மரம்!

இங்கே ஒரு தனி மரம் வெட்டப்படுவதற்காக காத்திருக்கிறது!


என்னைத்தான் 'கவன'¢க்கிறதா நினைச்சு டாக்டர் அய்யாவோட தொண்டர்கள் வேற யாரையாவது 'கவனி'ச்சு பின்னாடி கஷ்டப்படக்கூடாதுங்கிறதுக்காகவே என்னோட வண்ண புகைப்படத்தை இங்கே போட்டிருக்கேன். வசதியான இடத்துக்கு கூப்பிட்டு கவனிக்க வேணும்னு நினைச்சாலும் 98400 95437 என்கிற செல்போனை அழைக்கலாம்!


இந்த வாரத்து காந்தீய விழுமியங்கள்... தமிழோவியத்தில்!

(கேட்கக்கூடாத) கேள்விகள் ஆயிரம்!

'ஆண்டனியோ' சோனியா காந்தி

இந்தியா இன்னும் மூணு மாசத்துல ஒளிர ஆரம்பிச்சுடுமா?

'வேர்ல்டு டூர்' வாஜ்பாய்

தமிழ்நாட்டுல எங்க அய்யா அசெம்பளிக்கு வராம இருக்குற மாதிரி நீங்களும் பார்லிமெண்ட்டுக்கு வரமாட்டீங்களாமே?

'தூக்க தேவன்' தேவ கெளடா

சோனியாதான் பிரதமர், கிருஷ்ணாதான் முதல்வர்னு நீங்க தூங்கிட்டிருக்கும்போதே சொன்னதா காங்கிரஸ்காரங்க சொல்றாங்களே?

'ஹை ஜம்ப்' ஹர்கிஷன் சிங் சுர்ஜித்

சோனியாதான் பிரதமர்னு உடனே ஒத்துக்கிட்டா அடுத்த எலெக்ஷன்ல வெஸ்ட் பெங்கால்ல என்ன பண்ணுவீங்க?

'வெறுத்துப் போன' வெங்கய்யா நாயுடு

வேற வழியில்லேன்னுதான் ஜெயலலிதா கூட கூட்டு வெச்சுக்கிட்டோம்னு சொன்னது சந்திரபாபு நாயுடு பத்தி இல்லையே?

'நிரந்தர முதல்வர்' ஜெயலலிதாவிடம்

தோத்துப் போனதுக்கு காரணம் வாஜ்பாய் மட்டும்தான் காரணம்னு செல்லுவீங்களா அல்லது திருநாவுக்கரசரையும் சேர்த்துக்குவீங்களா?

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கருணாநிதியிடம்

தயாநிதி மாறனுக்கு கேபினட்டில் என்ன பொறுப்பு கிடைக்கும் அய்யா?

'சமூக நீதி' டாக்டர் ராமதாஸிடம்

சினிமா, தமிழ் கலாச்சாரத்தை கெடுத்துக் கொண்டிருப்பதை எப்போ திரும்பவும் தடுக்கப் போறீங்க?

'செயல் வீரர்' ஜி.கே.வாசனிடம்


ஈ.வி.கே.எஸ் ஆளுங்களுக்கு மினிஸ்டர் பதவி கிடைக்குமா?

'கேரளாத்துக் காளை' கருணாகரன்

தோத்ததுக்கு அந்தோணிதான் காரணம்னு இன்னுமா சொல்லாம இருக்கீங்க?

'கணக்கு வாத்தியார்' ப. சிதம்பரம்

மூணாவது அணி பத்தின மேட்டரையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு காபினட் மினிஸ்டராகி டெல்லிவாசியாகப் போறீங்களாமே?

'அப்பாவி' பொது ஜனம்

யாருக்கோ பனிஷ்மெண்ட் கொடுக்கணும்னு நினைச்சு யாருக்கோ அள்ளிக் கொடுத்துட்டு திருதிருன்னு நிக்கிற நீங்கதான் மிஸ்டர் அப்புசாமியா?

Wednesday, May 12, 2004

பேராசை பெருநஷ்டம்!



ஆந்திரத்தில் நாயுடுகாரு கவுந்து போனதற்கு காரணமென்ன எல்லா பத்திரிக்கைகளும் பத்தி பத்தியா எழுத ஆரம்பிச்சுட்டாங்க! மக்கள் சக்தி மகத்தான சக்தி; மக்களை யாரும் ஏமாத்த முடியாதுன்னு தனி பில்டப் வேற. நேத்து வரைக்கும் தேறுவோமான்னு சந்தேகத்துலேயே இருந்த காங்கிரஸ் கோஷ்டிங்க இன்னிக்கு ஜிவ்வுன்னு பறக்குறாங்க. எலெக்ஷனுக்கு முன்னாலேயும் சரி முடிஞ்சப்புறம் சரி காங்கிஸ் சார்பா யாரு முதல்வராவறதுங்கிறதுல பிரச்சினை ஆரம்பிச்சாச்சு! டெல்லி அம்மா ஷிலா தீட்சித்தையே டீல்ல வுட்டவங்க ஆந்திராவுல மட்டும் சும்மாயிருப்பாங்களா?

ஆறேழு தலை உருண்டாளும் ஆறு வருஷமா லைம் லைட்டில் இருந்த ராஜசேகர ரெட்டிக்குதான் பிரகாசமான வாய்ப்பு. தெலுங்கானா வேணும்னு கேட்டு கட்சி ஆரம்பிச்சு டி.ஆர்.எஸ்ஸை காங்கிரஸ் பக்கத்துல வெச்சுக்குமா அல்லது கழட்டி வுட்டுடுமா? சென்னை மக்களுக்கு கிருஷ்ணா தண்ணி வருமா? ஹைதராபாத், தெலுங்கானா பக்கம் போயிட்டா ஆந்திராவோட தலைநகர் திருப்பதியா விசாகப்பட்டினமான்னு தனியா பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சு!

ஒரு பழைய சினிமாதான் ஞாபகத்துக்கு வருது. முகமது பின் துக்ளக்கில் எலெக்ஷன் முடிந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் துக்ளக் (சோ) பேசுவதாக ஒரு காட்சி.

'மக்கள் முட்டாள்கள்!'

'என்னது?'

'ஆம். மக்கள் முட்டாள்கள். என்னையே தேர்ந்தெடுத்து விட்டார்களே!'