Thursday, November 18, 2004

யாரோடு யார்...

யாரோடு யார்தான் என்பது
உண்டாகும்போதே உள்ளது.
வானோடு நீலம் சேர்ந்தது
வாழ்வோடு இன்பம் சேர்ந்தது.
கங்கை நதி வந்ததென்ன...
காவிரியும் சேர்ந்ததென்ன...

Wednesday, November 17, 2004

நிலமெல்லாம் ரத்தம்!

கேட்டது

முதன் முதலாக ரொம்ப சிக்கலான கேஸை டீல் பண்ணப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன் என்கிற முஸ்தீபோடு ஆரம்பித்த என்டிடிவி ராஜீவை இடைமறித்து.... ரொம்ப சிம்பிளான கேஸ்தான் என்றார் ராம்ஜெட்மலானி. சங்கராச்சாரியார் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வி கேட்டால் அவரை கைது செய்த விதம் சரியில்லை என்று சொன்னார். கடைசி வரை சப்ஜெக்டுக்கு வரவேயில்லை. யாருக்கு தெரியும் அந்த ரகசியம்?! வேலூர் சிறைக்குள் போன முரளி மனோகர் ஜோஷியும், ஜார்ஜூம் 'உண்மையிலேயே உங்களுக்கு தொடர்பு உண்டா'ன்னு சங்கரச்சாரியாரை கேட்டிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

நள்ளிரவு கைதுகள் சரியா தவறான்னு திமுக தலைவரால் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை. கலைஞர் கைதின் போது எல்லோரும் பேருக்கு 'உச்' சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கப் போய்விட்டார்கள். சங்கராச்சரியாரின் கைதுக்கு காவிப்படையோ நாடு முழுவதும் கழி, குச்சி சகிதம் அலைந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரமே நார்மலாக இருக்கும்போது கேரளாவில் கடையடைப்பாம்! அவசரமாய் ஹைகோர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த நண்பரிடம் கேட்டேன். 'ஹைகோர்ட் ஜாமீன் கொடுக்க மறுத்தால் சுப்ரீம்கோர்ட்... எப்படியும் சாமியார் வார இறுதியில் காஞ்சிபுரத்தில் இருப்பார்'னு சொன்னார். பெரிய இடத்து சமாச்சாரமுங்கோ!

படித்தது

எங்க ஊர் நேஷனல் ஹைஸ்கூல் சேஷாத்திரி வாத்தியார் ரொம்ப பிரபலம். ஆசிரியர் சங்க மீட்டிங், போராட்டம் என்று எப்போதும் பிஸியாகவே இருப்பார். எப்போதாவது வரலாறு கிளாஸ் எடுத்து வாய் பிளக்க வைப்பார். அவர் உலகப் பிரச்னைகளை புத்தகத்தில் இல்லாத சங்கதிகளோடு விவரிப்பதே சுவராசியமாக இருக்கும். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றி எனக்கு புரியும்படியாக சொன்னவர் அவர் ஒருவர்தான். அப்போதே டிஎம்கே, ஏடிஎம்கே, அமெரிக்க, ரஷ்யா என்று சார்பு நிலை எடுத்தே பழக்கப்பட்டனுக்கு யார் பக்கமும் சாயாமல் பிரச்னையை அவர் எடுத்து சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. பாலஸ்தீனர்கள் படும்பாட்டை உருக்கமாக சொல்பவர் அதே வேகத்தில் உலகத்தில் இஸ்ரேலில் இருப்பதை விட பிரமாதமான பாதுகாப்பு படைகள் எங்கும் கிடையாது என்பார். அதற்கப்புறம் வாராவாரம் இஸ்ரேலில் நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி கேட்டும் படித்தும் ரொம்ப காலமாய் அலுத்துப் போய்விட்டது.

பாக் ஒரு புதிரில் ஆரம்பித்து டாலர் தேசத்தை விவரித்து செப்டம்பர் 9/11 அறிக்கையையே குட்டி திரைக்கதையாக்கிய பா.ராகவன் இஸ்ரேல்-பாலஸ்தீனத்து பிரச்னையை சுவராசியமாக சொல்ல வருகிறார். திரும்பவும் குமுதம் ரிப்போர்ட்டரில்! அடுத்த வாரத்திலிருந்து கலக்கப்போகிறாராம். காலையில் ரிப்போர்ட்டரை படித்து நான் தெரிந்து கொண்ட சங்கதி இது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாரா ஸார்!