Monday, May 03, 2004

சனிக்கிழமை ஒரு சாகசப் பயணம்!

ஓழுங்கா டிரெயின் புடிச்சு பழவந்தாங்கல் வந்து பாதயாத்திரை பண்ணியிருக்கலாம். சனிக்கிழமை சாயந்திரம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த ஆஞ்சநேயர், பஸ்க்கு வெயிட் பண்ணாம டிரெயின்ல வான்னு ஜடியா குடுத்திருக்கலாம். எப்பவாவது தானே வர்றான்னு கஷ்டப்பட்டு வரட்டுமேன்னு நினைச்சுட்டார் போலிருக்குது! நம்ம ஊர்ப்பக்கம் குக்குராமத்துல இருக்குற கோயிலுக்கு கூட ரெண்டே மணிநேரத்துல போய்ச் சேர்ந்த எனக்கு, சைதாப்பேட்டை பஸ்டாண்டுல 52L, ,52Mக்கு வெயிட் பண்ண நேரத்துல படையப்பா படத்தை இன்னொரு தபா பார்த்து முடிச்சிருக்கலாம்! கொண்டாட்டும் பார்த்துட்டு கிளம்பின நான் ஏழு மணி வரைக்கும் சைதாப்பேட்டை பஸ்டாண்டே கதிங்கிற மாதிரி நின்னுட்டிருந்தேன். ரெண்டு மணி நேரமா டைம் கீப்பர் தெரியாதுங்கிற ஒரே புராணத்தையே பாடிட்டிருந்தார். சனிக்கிழமை மாதிரியான நாட்களிலேயே இப்படின்னா மத்த நாள்ல பஸ்ஸ¥க்கு வெயிட் பண்ணியே பாதிவயசாயிடும் போலிருக்கேன்னு புலம்பிட்டிருக்கும் போதே வந்தே விட்டது. அதுக்கப்புறம் வந்த ஒரு அட்வென்ச்சர் ஜர்னியை மறக்கவே மடியாது. வாழ்க்கைன்னா மேடு, பள்ளம், குழப்பம், கூச்சல்னு எல்லாமே இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சுது! கிண்டி மேம்பாலத்திலேயே ஒரு பதினைஞ்சு நிமிஷம் டிராபிக் ஜாம். ஹைவேஸ்காரர்கள் வெட்டி வைத்த குழி, டெலிபோன்காரர்கள் வெட்டி வைத்த குழின்னு விவேக் அடுக்குறமாதிரி ரோட்டோரம் குழியா வெட்டி வெச்சதால் பஸ், ஆதம்பாக்கத்து இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட ஆரம்பித்தது ஒரு வழியா வானுவம்பேட்டை வந்து சேர்ந்தது. அதுக்கப்புறம் நங்கநல்லூர் போய் சேர்ந்து ஆஞ்சிநேயரை பார்க்கிறதுக்குள்ளே எட்டரை ஆயிடுச்சு. வரும்போது மறக்காம நடந்தே பழவந்தாங்கல் வந்து டிரெயின் புடிச்சு இருபதே நிமிஷத்தில் சைதாப்பேட்டை வந்து சேர்ந்தேன்.

ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர் மாதிரியான ஏரியாக்களில் ரோடே சரியில்லை. சென்னையின் பிஸியான குடியிருப்பு பகுதிகளில் இப்போதே இப்படின்னா திருவான்மியூர்-வேளச்சேரி-கிண்டி ரயில்வே லைன் கம்ப்ளீட் ஆகும் பட்சத்தில் இன்னமும் குழப்பம்தான் ஜாஸ்தியாகும். ஒரு காலத்தில் சென்னையின் மையப்பகுதியாக இருந்த சைதாப்பேட்டையிலிருந்து பஸ் வசதி குறைந்து கொண்டே போவது ஆச்சரியம். நங்கநல்லூரை விடுங்க.... கோயம்பேடு போகணும்னு நான் நினைச்சா குறைந்த பட்சம் ரெண்டுமணி நேரமாவது ஆகிவிடும். பஸ்ஸோட தரம், வசதியெல்லம் பத்தி கேள்வியே கேட்டுடாதீங்க. நானும் சென்னை, மும்பை, டெல்லி மூணு மெட்ரோ பஸ்ஸில் டிரிப் போன அனுபவம் எனக்கு உண்டு. ஒரே ஒத்துமை என்னான்னா மாகர பஸ்களின் கண்றாவி கோலம்தான். வெளிநாட்டிலிருந்து வர்றவங்க பளிச்சுன்னு கண்ணுல படுறது இந்த அழுக்கு கோலம் தான். பெங்களுர், ஹைதராபாத்திலும் இதே நிலைமைதான். கடலூரிலிருந்து மஞ்சக்குப்பம் போற பஸ் கூட லட்சணமா இருக்கு. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை போகும் தனியார் பஸ்ஸின் டெகரேஷன், ஆம்னி பஸ்ஸையே தோற்கடிச்சுடும். அதெல்லாம் வுடுங்க... பஸ் எப்படியிருந்தா என்ன.. டைமுக்கு வந்தாலே போதும்னு சென்னைவாசி நினைக்கிறான். என்னோட சமீபத்திய அனுபவத்துல அது நியாயமான விஷயம்னுதான் தெரிஞ்சுகிட்டேன்!