Friday, August 06, 2004

காந்தீய விழுமியங்கள்

ஒரு காலத்தில் முஸ்லீம் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரிய நண்பனாக வாழ்த்தப்பட்ட காந்திஜியை பகைவனாக உருதுப் பத்திரிக்கைகளில் சித்திரித்து எழுதிய காலம் பின்னாளில் வந்தது. அகில இந்திய முஸ்லீம் லீக் அமைப்பை முஸ்லீம்களின் அதிகாரமுள்ள ஒரே பிரதிநிதியாக காங்கிரஸ் அங்கீகரிக்க மறுத்த காரணம்தான் பிரச்சினையின் அடிப்படையான சங்கதி. இந்திய யூனியனில் அங்கம் வகிக்க வேண்டியது இந்துக்களா அல்லது முஸ்லீம்களா என்கிற கேள்வி கழுத்தை பிடித்த நேரத்தில் இரு தரப்பினரும் சண்டைபோடாமல் இருந்தால்தான் பிரிட்டிஷாரின் ஆட்சி முடிவுக்கு வரும் என்றெல்லாம் சொல்லி காந்திஜி அமைதிப்படுத்தியதை இந்திய முஸ்லீம் லீக் தவறாக புரிந்து கொண்டது. முஸ்லீம் லீக்கிற்கு ஆதரவான ஒரு ஆங்கில வாரப் பத்திரிக்கை இந்து மதத்தை சாபத்தீ என்று வர்ணித்ததை கண்டு வெகுண்டு முதல் ஆளாக காந்திஜிதான் குரல் கொடுத்தார்.

http://www.tamiloviam.com/unicode/secondpage.asp?fname=08050406&week=aug0504


தமிழக அரசு முழு சுகாதார திட்டம் என்கிற பெயரில் ஒரு திட்டத்தை இரண்டு வருஷங்களாக நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னும் அரசியலாக்கப்படாமல் இருக்கும் அருமையான திட்டமாக இதைச் சொல்லலாம். இதன்படி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இரண்டரை லட்சம் மதிப்பிலான கழிப்பறை வளாகம் கட்டப்படுகிறது. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஆறு கழிப்பறைகளும் நான்கு குளியறைகளும் இருக்கும். இது மட்டுமல்லாமல் துணி துவைக்க தனியாக இட வசதியும் அதற்கென்று பிரத்யேகமாக தண்ணீர் தொட்டியும் உண்டு. வளாகத்தின் மேற்பகுதியில் பெரிய அளவில் தண்ணீர் வசதிக்காக தொட்டி கட்டப்பட்டு மோட்டார் வசதியும் இணைக்கப்பட்டிருக்கும். கழிப்பறை வளாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த பகுதி மகளிர் சுய உதவி குழுக்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாதந்தோறும் அதற்கான செலவாக
குறிப்பிட்ட தொகையை சுய உதவிக் குழுக்களுக்கு அரசே வழங்கி வருகிறது.

http://www.thinnai.com/pl0805049.html