Tuesday, August 31, 2004

காலச்சுவடும் காமாலை வியாதியும்

எந்தப் பத்திரிக்கையில் பெண்களின் கழுத்துக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சமாச்சாரம் பற்றி அதிகமான கதைகள் வரும் என்று போட்டி வைத்தால் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறப்போவது காலச்சுவடுதான். முலைவரி கட்டாத பெண்களின் மேற்படி சமாச்சரத்தை அகற்றிவிட கட்டளையிட்ட அந்தக்காலத்து மன்னர்கள் பற்றிய கதைகள்தான் இருந்துவிட்டு போகட்டுமே....அதைப்பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வதால் சொஸைட்டிக்கு என்ன பிரயோசனம் என்றெல்லாம் அப்பாவியாக கேள்வி கேட்டுவிடாதீர்கள். நாம் படிப்பது இலக்கியம். சரோஜாதேவி டைப் கதையல்ல என்கிற உணர்வு உள்ளுக்குள்ளே இருந்தாதான் உண்மையான இலக்கிய ஆர்வலராக இருக்கமுடியும். படிக்கும்போது மனசுக்குள் மஜாவா இருந்தாலும் முகத்துல ஒரு சீரியஸ்னஸ் கொண்டுவரணும்.

முலைவரி வந்த (இன்ப) அதிர்ச்சி போதாது என்று நம்மூர் மகளிர் அணி வேறு படையெடுத்து பெண்குறியை பத்தியெல்லாம் சுதந்திரமாக எழுதி, பிறாண்டிவிட்டு போனது. அதையெல்லாம் எதிர்ப்பது பின்னாளில் ஆணாதிக்கமாகவும் மாறிப்போனது. அப்போது நமக்கேன் வம்பு என்று வாய்மூடிக்கொண்ட இலக்கியவாதிகள்தான் அதிகம். போன வருஷம் நடந்த இளைய தலைமுறையினருக்கான கதைப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆராய்ந்த பின்னர் முதல் பரிசை ஜே.பி. சாணக்கியாவின் படித்துறைக்கு கொடுத்துவிட்டு குஜால் பத்திரிக்கை என்கிற பெயரை தனக்கென்று பத்திரப்படுத்திக்கொண்டது காலச்சுவடு. அதற்கப்புறம் அவ்வப்போது காலச்சுவடு படிக்கும்போதெல்லாம் காமாலை வியாதி வந்துபோகிறது.

இப்போது ஒரு ஸ்டோரியின் கதை. எழுதியவர், இலக்கிய உலகில் பெரிய பிஸ்தாவான சுந்தர ராமசாமி. கதை ரொம்ப சிம்பிள். தெருமுனையில் ஒரு ஸ்தூபி வெடித்து அழகான ஒரு மங்கையின் சிலை வெளிப்படுகிறது. ஈகிள் பத்திரிக்கையின் நிருபர் அதையெல்லாம் கவர் செய்து போட்டோ எடுத்து பிரிண்ட் போடும்போதுதான் ஒரு விஷயத்தை கவனிக்கிறார். எல்லா போட்டோவிலும் மேற்படி சமாச்சாரம் இல்லையாம்! சுந்தர ராமசாமி, கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு புரியவில்லை என்றாலும் ஜிகுஜிகுவென்று வரும் வர்ணணைகள் மட்டும் நன்றாகவே புரிகிறது. சாம்பிளுக்கு சில. வாடாமல்லியையொத்த....

இந்த இடத்தில்தான் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதிய ஆசாமிக்கும் வித்தியாசம் தெரியாமலே போய்விடுகிறது... ஒருவேளை என்னை மாதிரியான சில்லுண்டிகளுக்கு மட்டுமோ?!