Thursday, June 13, 2019

ரஞ்சித்தும் ராஜராஜ சோழனும்

That's historical fact! I support Ranjith but that doesn't mean that i do not like Raja Raja Chola

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

15 பிப்ரவரி 1934. தஞ்சை பெரிய கோயில் வரலாற்றில் மகத்தான நாள். முதல் முதலாக தலித்துகள் ஆலயத்திற்குள் நுழைந்த திருநாள். அதை சாத்தியப்படுத்தியவர், காந்தியார். I still support Ranjith!

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

ரஞ்சித்தை பாராட்டி தலித், மதனை பாராட்டி பிராமின், மோடியை பாராட்டி சங்கி, ஸ்டாலினை பாராட்டி மங்கி... எல்லா டைட்டிலையும் வாங்கியாச்சு, இனிமே வாய்க்கு வந்தபடி திட்டுவோம்... என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்! ரெடி ஜூட்!

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

மறுபடியும் சோழமண்டலம். கிபி 1010 முதல் 1934 வரையிலான கதை.

1. தீண்டாதார் ஒழியப் பிறர்தான் தூர் வாரவேண்டும் என்கிறது சோழர் காலத்து கல்வெட்டு. அந்த தீண்டாதார் சேரி எங்கேதான் இருந்ததாம்?

2. வலங்கை, இடங்கை பிரிவில் பிராமணர்கள், வேளாளர்கள் இல்லை. மற்ற சாதிப்பிரிவினர்தான் இருந்தார்கள். அப்படியென்றால் சோழர் காலத்தில் மேல்சாதி, கீழ்சாதி இரண்டு மட்டும்தானா-? தலித்துகளோடு வன்னியர்களும், கம்மாளர், செங்குந்தர், தேவேந்திரர் எல்லோரும் ஒரே பிரிவான கீழ்சாதிதானா?

3. நில அளவை என்பது ஷெர்ஷா சூரி காலத்தில் வட இந்தியாவில் ஆரம்பித்து, அதே சம காலத்தில் தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசால் அறிமுகப்படுததப்பட்டது. ஆக 1500க்கு முன்னால் நிலங்களை விற்பதும், வாங்குவதும் தமிழகத்தில் எப்படி நடந்தது? பிராமணர்கள் நிலங்களை விற்கமுடியாது. அப்படியென்றால் வெள்ளாளர்களிடமிருந்து கீழ் சாதியினர் நிலங்களை வாங்க முடிந்ததா?

4. சோழர்கள் காலத்திற்கு பின்னர் தெலுங்கு நாயக்கர்களாக தஞ்சை பெரிய கோயிலில் முடிசூட்ட முடிந்தது. கொள்ளையர்களாக உள்ளே வந்த மராத்தியர்களால் கோயிலை நிர்வகிக்க முடிந்தது. ஆனால், பச்சைத்தமிழர்களான தலித்துகள் உள்ளே நுழைய முடியாமல் போனதற்கு காரணம்தான் என்ன?

5. சதி, உடன்கட்டையையெல்லாம் 1800லேயே தூக்கிக் கடாசிவிட்ட இந்துக்கள் (உபயம், வங்கத்து பார்ப்பன ராஜா ராம் மோகன் ராய்) 1930கள் வரை, பார்ப்பன அல்லாதோர் எழுச்சிக்குப் பின்னரும், தலித்துகள் கோயிலுக்குள் அனுமதிக்காதப்படாததற்கு என்ன காரணம்?

6. முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களின் நன்கொடையை ஏற்றுக்கொண்ட இந்து கடவுள்கள், தலித்துகளை உள்ளே வரவே கூடாது என்று பாராமுகம் காட்டியது ஏன்?

7. தலித்துகளுக்கு ஆலயப்பிரவேசம் மட்டுமா மறுக்கப்பட்டது? நாடகக் கொட்டைகை பிரவேசம், செருப்பு, துண்டு சகிதம் பட்டமங்கலத்தெரு பிரவேசம், துலாக்கட்ட பிரவேசம். அனைத்தும் மறுக்கப்ட்டதற்கு என்னதான் காரணம்?

8. 1924ல் மதுரையிலிருந்து வைக்கம் போன ஈரோட்டு வீரருக்கு தஞ்சாவூருக்கு வழி தெரியவில்லையா? 1934ல் மகாத்மா காந்தி வரும்வரை தலித்துகள் காத்திருக்க வேண்டியிருந்தது ஏன்?

9. தமிழே தெரியாத காந்தியால், இரண்டே மணி நேரத்தில் ஆலயப்பிரவேசத்திற்கு சம்மதம் வாங்க முடிந்தது எப்படி? யாரிடம் பேசினார்? என்ன மொழியில் பேசினார்? எப்படி பேசினார்?

கேள்விகள் ஆயிரம்! 😎

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

இன்னொரு அதிகாலை கொடுங்கனவு. "ப்ரோ, அப்போ அம்பேத்கர், மார்க்ஸ், பெரியாரெல்லாம் தஞ்சாவூர் கோயில் பக்கமே வரலையா?" என்றார் ரஞ்சித்.

"மார்க்ஸ்க்கு தமிழ் தெரியாது, ஆகவே தஞ்சாவூரும் தெரியாது. அப்போ பெரியாருக்கு சுயமரியாதை இயக்க பிரமோஷன் வேலை இருந்தது. ஒருவேளை அம்பேத்கர் மட்டும் வந்திருந்தால், 30 வருஷத்துக்கு முன்னாடியே தலித்துகள் கோயிலுக்குள் போயிக்கலாம்" என்றேன்.

"என்ன சொல்றீங்க ப்ரோ? யாராவது வரவிடாம தடுத்துட்டாங்களா?" என்றார் ரஞ்சித், கவலை தோய்ந்த முகத்துடன்.

"அதுவொரு பெரிய பிளாஷ்பேக். அப்போ அம்பேத்கர் பரோடா அரண்மனையில் வேலை பார்த்துட்டிருந்தார். அங்கே ஒரு பாட்டி ராணி, சிம்னாபாய்னு ஒருத்தர் இருந்தார். பரதநாட்டியம் ஆடுவார், அப்பப்ப கர்நாடிக் சாங்ஸ் பாடுவார். அவருக்கு சொந்த ஊரு தஞ்சாவூரு. ரொம்ப நல்ல பாட்டி"

"அட, அப்போ தஞ்சாவூர் பத்தி அம்பேத்கருக்கு தெரியுங்கிறீங்களா ப்ரோ?"

"ஆமாமா.. சிலப்பதிகாரத்துலேர்ந்து சிவாஜிராவ் வரைக்கும் எல்லாத்தையும் பாட்டிதான் சொல்லிக்குடுத்தா.. இப்போ நீ அங்கே போனா உன்னால எதுவும் செய்யமுடியாது. அதனால லண்டனுக்கு போய் வக்கீலாகி. அவங்களையெல்லாம் ஒரு கை பார்த்துடுன்னு சொல்லி அனுப்பி வெச்சுட்டா.. அதைத்தான் பின்னாடி திருமதி பழனிசாமின்னு சினிமாவா எடுத்தாங்க"

"சூப்பர் ப்ரோ" என்று சொல்லிவிட்டு அடுத்தபட டிஸ்கஷனுக்கு கிளம்பினார் ரஞ்சித். இந்த நாள் இனிய நாளாக விடிந்தது!

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

போஜ்பூர், போபாலின் பெரிய கோயில் இது. பிரக்யா சிங்கை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த ஊர் எல்லையில்தான் வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்த்து, காப்பியடித்து கட்ட ஆரம்பித்தார்களாம். ரஞ்சித்துகள் UDS கிளைம் பண்ண வாய்ப்பேயில்லை. காரணம், ஒரு குன்றுக்கு மேல் கட்டப்பட்டது.

இதைக் கட்டிய போஜராஜா, ராஜேந்திர சோழனின் டிகிரி தோஸ்து. இருவரும் கூட்டணி சேர்ந்து, ஒரிஸாவில் ஏதோவொரு கோயிலை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஏதாவது நல்ல காரியத்திற்காகத்தான் இருக்கும்!

சோம்நாத் தாண்டி உள்ளே வந்து கொள்ளையடித்துவிட்டு கஜினி முகம்மது ஓடியபோது, போஜராஜாவின் படை, துரத்தினார்களாம். கஜினி முகம்மதுவை பிடித்து, கண்டமாக்கியிருந்தால் போஜராஜா, இன்னொரு அசோகர் ஆகியிருப்பார். ஒருவேளை கஜினி முகம்மது தப்பித்து, காண்டாகி, திரும்ப வந்து போஜராஜாவை கண்டமாக்கியிருந்தால்... சரி விடுங்க, நமக்கெதுக்கு வரலாறு? 😎