Wednesday, January 28, 2004

காந்தி தாத்தா

சின்ன வயசிலிருந்தே மகாத்மா காந்தின்னா ரொம்ப பிரியம். In India, எனக்கு தெரிஞ்சு அரசியல், ஆன்மீகம், எழுத்துன்னு பல தளங்களில் இயங்கிய பெருந்தலைவர் காந்தியை விட்டால் வேறு ஆளில்லை. இந்திய மண்ணுக்கே உரிய அகிம்சை என்னும் ஆயுத்தை மீட்டெடுத்து தந்த மகான் அவர். காந்தி பத்தி பாட புத்தகங்களில் நிறைய படிச்சிருந்தாலும் பசக்னு மனசுல ஒட்டிக்கிட்டது கூட நலாங்கிளாஸ் படிக்கிறச்ச பார்த்த 'காந்தி' படம்தான். இன்னிக்கும் எனக்கு சுதந்ததிர தினம், குடியரசு தினத்தை விட முக்கியமான நாளா தெரியறது காந்தி ஜெயந்திதான்.

மகாத்மாவை பற்றிய வலைத்தளங்கள் ஏகப்பட்டது இருந்தாலும், மகாத்மாவின் கொள்கைகளையும் வாழ்க்கை முறையையும் அலசும் விவாதக் குழுக்கள் இணையத்தில் இருப்பது மாதிரி எனக்கு தெரியவில்லை. ரொம்ப நாள் தேடி.... களைத்த பின்னர் எனக்கு தோன்றியதுதான் - 'ஏன் நாமளே ஒரு விவாதக் குழுவை ஆரம்பிக்க கூடாது' http://groups.yahoo.com/group/Mahatma_Gandhiji

ஆரம்பிச்சு இரண்டு வருஷமானாலும் இன்னும் உறுப்பினர்களின் எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை. இதில் பாதிப்பேர் என்னுடைய அன்பான (தொல்லை?!) அழைப்பை ஏற்று வந்தவர்கள். திடீரென்று இரண்டு வடஇந்தியர்கள் உறுப்பினரானதும் ஏற்பட்ட சந்தோஷம், ஓரினச் சேர்க்கை பற்றிய வலைத்தளத்தை சிபாரிசு செய்து அவர்கள் மெயில் அனுப்பியதும் மாயமானது!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். காந்தி என்றதும் மரியாதை காட்டுபவர்கள் கூட சில சமயம் அலட்சியப்படுத்துவதுதான் புரியவில்லை. உதாரணத்துக்கு 'காந்தி கணக்கு' என்கிற சொல் பதம். சமீபத்தில் எம்டிவி போட்டுக் காட்டிய 'காந்தி டான்ஸ்'. காந்தி பற்றிய கிண்டல்கள் இன்னும் தொடர்கதையாகத்தான் இருக்கின்றன. The people who like Gandhi do not like Gandhiji's principles. காந்தியை எல்லோருக்கும் பிடிச்சிருந்தாலும் யாரும் காந்திக்கும் காந்தீயத்துக்கும் நெருக்கமாக இருக்க விரும்பவில்லை என்பது உண்மைதானோ?