Wednesday, January 14, 2004

சென்னை புத்தக கண்காட்சி - ஒரு ரவுண்ட் அப்

எதிர்பார்த்தது மாதிரியே போன வருஷத்தை விட இந்த வருஷம் கூட்டம் ஜாஸ்திதான். காலேஜ் பசங்களோட இல்லத்தரசிகளும் குழந்தைகளும் போட்டி போட்டுக் கொண்டு புத்தகம் வாங்கி தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

குமுதம், விகடன் ஸ்டால்களில் 'நோ ஸ்டாக்' போர்டு வைக்காததுதான் குறை. ஹிக்கின் பாதம்ஸையும் காலச்சுவடு பதிப்பகத்தையும் கடந்து போகவே எனக்கு ஒரு மணி நேரமாகியது. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்ங்கிற மாதிரி எல்லா இடத்திலும் ஜெயமோகனின் காடு, ஒரு யோகியின் கதை, கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் (எல்லா தொகுதியும் ஒரே புக்கில் வர்ற மாதிரி பண்ணக்கூடாதா?) அப்புறம் சமையற்கலை குறிப்புகள், குழந்தைகளுக்கான புக்ஸ்....நிறைய.

இலக்கியவாதிகளில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும்தான் ஹாட் கேக். மத்தபடி எழுத்தாளர்களின் படைப்புகளை விட எழுத்தாளர்களை பற்றிய குறிப்புகளை கொண்ட புத்தகங்கள்தான் அதிகமாக இருந்தது.

கண்ணில் மாட்டிய ஒரே விஐபி நக்கீரன் கோபால். அதைப் பற்றிய எனது பதிவு.

நிறைய எழுதணும்னு நினைச்சேன். ஆனா டயம் தான் கிடைக்கலே. திரும்பவும் ஒரு ரவுண்டு போயிட்டு வந்தப்புறம் எழுதுறேன்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

- ஜெ. ரஜினி ராம்கி