Monday, March 15, 2004

49ஓ!

'வாக்காளர்களிடம் விழிப்பு ஏற்படுவதற்காக உந்துநர் அறக்கட்டளை நடத்தி வரும் குடீமக்கள் முரசு இதழில் ஆசிரியர் முன்னாள் ஜ.ஏ.எஸ் அதிகாரி அ.கி. வேங்கடசுப்ரமணியன், எந்த வேட்பாளரையும் பிடிக்காவிட்டால் அதையும் வாக்குச்சாவடியில் பதிவு செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். அது 49ஓ பிரிவின்படி வாக்களிப்பதில்லை என்று வாக்காளர் முடிவு செய்வதுதான்.

ஒரு வாக்காளர், படிவம் 17 ஏவில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவரது வாக்காளர் எண் முறையாக பதிவு செய்யப்பட்டு அவரும் தமது கையெழுத்தையோ பெரு விரல் ரேகையையோ விதி 49 Lபடி வைத்த பிறகு, வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால், அந்த முடிவுக்கு ஏற்ப படிவம் 17Aவில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஒரு குறிப்பைச் செய்து வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையையும் அந்த குறிப்புக்கு எதிரே பெறவேண்டும் (தேர்தல் நடைமுறை விதிகள் 1961) வாக்குப்பதிவு முடிந்தபிறகு இவ்வாறு எத்தனை பேர் வாக்களிக்க மறுத்து பதிவு செய்தார்கள் என்ற எண்ணிக்கை விவரத்தையும் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

1999ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் மொத்தமுள்ள 4.75 கோடி வாக்காளர்களில் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கவில்லை. சென்ற தேர்தலில் வட சென்னை எம்பி தொகுதியில் மொத்தம் 70 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. இதனால் ஒரு தொகுதியின் மொத்த வாக்குகளில் சுமார் 15 சதவிகித வாக்கு பெற்றாலே ஒருவர் எம்பியாகிவிடமுடியும் என்பது தெரிகிறது. சென்னை மாநகராட்சி தேர்தலின்போது பெசண்ட் நகர், கலாசேத்திரா காலனி, திருவான்மியூர் போன்ற 'மெத்த' படித்தவர்கள் உள்ள டிவிஷன்களில் 75 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை. இவர்களில் பாதி பேர் வந்து 49 ஓவைப் பயன்படுத்தியிருந்தால், பல தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளரை விட அதிக ஓட்டாக இருந்திருக்கும்.

இந்த நிலைமையை பல தொகுதிகளில் வாக்களர்களாகிய நம்மால் ஏற்படுத்த முடியும். அது அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தும். அதை தீர்க்க தேர்தல் முறைகளில் மாற்றங்கள் வந்தே தீரும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை ஏற்பட்டால் எந்த கட்சியும் தன்னுடைய அசல் பலத்துக்கு மீறிய சீட்டுகளை பெற முடியாது. பிஜேபி, பாமக போன்ற கட்சிகள் தங்கள் அசல் பலத்துக்கு பொருத்தமில்லாத வகையில் ஆட்சியை அதிகாரத்தை பிடிக்க உதவி செய்யும் தேர்தல் முறையை மாற்றும் நிரந்தர தீர்வுக்கு இது வழி வகுக்கும்.'

நன்றி தீம்தரிகிட

நல்ல ஜடியாதான்! ஆனா, தேர்தல் நாளன்று 'மெத்த' படித்த மக்கள் மெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு வரணுமே! இதைவிட நல்ல ஜடியா, ஓட்டுப் போடதவனுக்கு அரசியல் பத்தி பேச தகுதியில்லைன்னு நம்ம அரசியல் பெருந்தலைகளை விட்டு சொல்ல வைக்கணும். நடக்கிற காரியமா அது...?!