Friday, April 02, 2004

வாழ்க்கையே ஒரு முரண்பாடுதான்!

நாம் முரண்பாடுகளுடன்தான் வாழ்கிறோம். நமக்குள் ஒழுங்கு இல்லையென்பதே நாம் முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒழுங்கென்பது மனதால் சித்தரிக்கப்பட்ட ஒரு எண்ணமல்ல. ஒழுங்கு என்பது ஒவ்வொரு பொருளையும் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அதற்கு உரிய இடத்தில் வைக்கும் கலை. ஓழுக்க உணர்வு எந்தவொரு பழக்கவழக்கத்தின் கட்டுப்பாடோ, சாதரண செயல்முறையோ, சடங்கோ அல்ல. ஒரு பொருளை விரும்புகிறோம். ஆனால் விரும்புவதை பெரும்பாலும் மறுக்கிறோம். சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று.
வாழ்க்கையே முடிவில்லாத முரண்பாடுகளின் கோர்வையாக இருக்கிறது, முரண்பாடு இருக்குமிடத்தில் சண்டை, அபிப்பிராய பேதம் கட்டாயம் இருக்கும். ஓர் மனிதர் மேல், நாட்டின் மேல், கொள்கையின் மேல் ஏற்படும் பற்றாக இந்த சச்சரவு வளர்ச்சியடைகிறது. ஆனால் ஒருக்காலும் சாஸ்வதமான உண்மை வாழ்க்கையை நாம் வாழ்வதில்லை. ஆகவே நாம் அரசியல் ரீதியாக, சமய தீதியாக, குடும்ப வாழ்க்கையில், ஓழுங்கில்லாமல் வாழ்கிறோம்.

- ஜெ. கிருஷ்ணமூர்த்தி

சமீபத்தில்தான் சிறந்த ஆன்மீகவாதியும் தத்துவஞானியுமான ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் வலைத்தளத்தை தேடிக் கண்டுபிடித்தேன். உண்மையை பற்றியும் வாழ்க்கை முறைகளை பற்றியும் கிருஷ்ணமூர்த்தி தந்திருக்கும் தெளிவான விளக்கங்கள் மகாத்மா காந்திஜியின் எழுத்துக்களை ஞாபகப்படுத்துகின்றன. எல்லோரும் விசிட் அடிக்க வேண்டிய வெப்சைட்!