Friday, April 16, 2004

வலைப்பூக்கள் பூக்கும் ஓசை - ஆப்பு

அடிக்கடி அரசியலை பத்தி மட்டுமே எழுதி அலுத்துப் போச்சு! ஓரு சேஞ்ச்சுக்கு வேற ஏதாவது கிறுக்கலாம்னு நினைக்கிறேன். வலைப்பூக்கள் உள்ளே போய் ஆற அமர படிச்சு கமெண்ட் அடிக்கலாம்னு ரொம்ப நாளா நினைச்சிருந்தேன். ஆனா, நாட்டாமை முந்திக்கிட்டார். எல்லாத்தையும் அவர் ஷார்ட்டா முடிச்சிடுறார். நாம கொஞ்சம் டீடெய்லா பார்க்கலாம்னு நினைக்கிறேன். மொதல்ல ஆப்புலேர்ந்து ஆரம்பிச்சுடலாம்!

சுயபுராண சிந்து பாடுவோர்களுக்கும், இலக்கிய இறுமாப்பிலிருப்பவர்களுக்கும், பிலிம் காட்டுபவர்களுக்கும், முற்போக்கு பேசும் பிற்போக்குவாதிக்கும் ஆப்பு வைச்சே ஆகணுங்கிற வைராக்கியத்தோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் ஆப்பு. தமிழ் மீடியாவில் இதெல்லாம் ரொம்ப புதுசு. அடுத்தவங்களை எப்போதும் திட்டறவங்களை யாரும் என்கரேஜ் பண்ணமாட்டாங்க. ஆனாலும் கிண்டலுக்கும் ஒரு பவுண்டரி இருக்கே! ஆப்பு, டீஜெண்டா ஆப்பு வைக்கிறவரைக்கும் ஜே போடலாம்!

தந்தை பெரியார் மொளியிலும் அவரோட வளியிலும் ஆப்பு வெச்சிட்டிருக்கறதா சொல்றாரு! நல்லவேளை பகுத்தறிவுன்னு சொல்லி அட்வைஸ் பண்ணாம இருக்காரே!

பெருமாள் பேரை சொல்லி அனுமாரு சாப்பிடுதுங்கோங்கன்னு யாருக்கோ ஆப்பு வெச்சாரு. பிரச்சினை இன்னான்னா.... எல்லாத்துக்கும் ஆப்பு வைக்கிறதுனால யாருக்கு எப்போ வெச்சாருங்கிறதைதான் ஞாபகத்துல வெச்சுக்க முடியலே!

நீ இண்டர்நெட்டில் கவியெழுதி இருப்பை தக்க வைத்துக்கொள்னு அப்பப்ப ஆப்புங்கிற பேர்ல கவிதையெல்லாம் எழுதி தள்ளிடுறியே ராசா!

ரஜினி ரசிகர்களுக்கு ஆப்பு வெச்சா மாஸ் கிடைக்குங்கிற சங்கதி தெரிஞ்ச சமத்துப் பையன் ஆப்பு. ஆமா, சினிமா பார்க்குற பழக்கமெல்லாம் கிடையாதா? அப்ப டிவி?

குடும்ப பத்திரிக்கைன்னு போட்டு குஜால் மேட்டரை அவுத்துவுடும் ராணிக்கு ஆப்பு நியாயம்தான். ஆனா மத்ததெல்லாம் கண்ணுல படலியா?

சினிமா பத்தியும் டிவி பத்தியும் ஆப்பு வைக்காததுக்கு காரணம் பெரியார் வளியிலே வந்தவருங்கிறதனாலயா? ராணி, சன் டிவி, அரசியல், இலக்கியம்னு சின்ன சர்க்கிள்ல வர்றத பாத்தா அப்பு இருக்குற இடம் அயல்நாடு மாதிரி தெரியுது!

இப்ப லேட்டஸ்டா விஷ் போட்டு, நிம்மதியாயிருக்குற மாலன் ஸாருக்கு எம்பி சீட்டு கொடுக்கணும்னு சொல்லி ஆப்பு வைக்கிறதல்லாம் நடக்காது ராசா!

பேரு போட்டு ஆப்பு வைக்கிற காம்பிடேஷன் ஜாஸ்தியிட்டிருக்கும்போது அடிக்கடி ஆப்பு இப்படி ஆப்செண்டானால் என்னாவறது?