Thursday, April 29, 2004

மரபுக்கவிதையும் மனுஷ்யபுத்திரனும்!

நேத்து ராஜ் டிவியில் "டேக் இட் ஈஸி" ஊர்வசி, நம்ம மனுஷ்யபுத்திரனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். மரபுக் கவிதைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் அப்படியென்ன அலர்ஜியோ தெரியலை... இந்த காலத்துல மரபுக் கவிதையெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு சொல்லிட்டிருந்தார். அந்த காலத்துல மக்களெல்லாம் சந்தோஷமா இருந்தாங்க அதனால யாப்பு, அணி மாதிரியான இன்னபிற இலக்கிய சங்கதிங்க தப்புத் தாளம் போடாம முறையா எழுதிட்டிருந்தாங்க. ஆனா இப்போ யாருக்கு டயமிருக்குன்னு யதார்த்ததை சொன்னார். அது மட்டுமல்ல, இப்போ மரபுக்கவிதையால தற்காலத்து சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்க முடியாம வெற்று அலங்கார சங்கதியா படு செயற்கையா இருக்கும்னார். இந்த சின்ன வயசுல எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு எப்படி உங்களால செய்யமுடியுதுன்னு ஊர்வசி கேட்ட கேள்விக்கு படு டீடெய்லா சொன்ன பதில் அசத்தல். என்னதான் பிஸியா இருந்தாலும் நமக்கு உண்மையிலேயே ஒரு விஷயத்துல இன்ட்ரெஸ்ட் இருந்தா அதைத்தான் முதல்ல செஞ்சி முடிப்போம். அது மாதிரிதான் இதுன்னார். இன்னொருத்தர் எழுதி தனக்கு பிடிச்ச கவிதையா ஒண்ணு சொன்னார். எழுதினது யாருங்கிறதுதான் சைக்கிள் கேப்புல மிஸ்ஸாயிடுச்சு!

கடவுளை சந்தித்தேன்
அவரிடம் எதுவும்
கேட்க தோன்றவில்லை;
அவரும் என்னிடம்
எதுவும் சொல்லவில்லை;
இருந்தாலும் மனசுக்குள்
ஏதோ நிம்மதி!

மனுஷ்யபுத்திரனை சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் நேரில் பார்த்தேன். மெனக்கெட்டு பேர், ஊரெல்லாம் ஆர்வமா கேட்டுக்கொண்டார். உயிர்மையில் புதுசா ஏதாவது செய்யுங்க, அப்படியே காலச்சுவடு பார்த்து காப்பியடிச்ச மாதிரி இருக்குன்னு தைரியமா சொன்னேன். சுவராசியமா கேட்டுக்கொண்டு தொடர்ந்து படிச்சுட்டு வாங்கன்னு சொன்னார். அதுக்கப்புறம் ஏனோ படிக்க முடியலை. ஆனா அவரை நேர்ல பார்க்கிறதுக்கு முந்தி அவர் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த உடல் ஊனமுற்ற, மற்ற இலக்கியவாதிகளை விட வயதில் சின்னவருங்கறது எனக்கு தெரியாது. அவரோட கவிதைகளை விட என்னை அதிகமாக பாதித்த விஷயம் அது!