Tuesday, April 27, 2004

காந்தீய விழுமியங்கள்



மகாத்மா காந்திஜி - பாரத தேசத்தின் கலாசார அடையாளமான அகிம்சையை மீட்டெடுத்து ஒரு புது உலகம் படைத்தவர். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை அரங்கேற்றி இந்தியாவை அடிமைத்தளையிலிருந்து அகற்றியவர். முதுபெரும் அரசியல் தலைவராகவும், உண்மையான ஆன்மீகவாதியாகவும், சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்படும் காந்திஜியின் பல்துறை பங்களிப்பை பற்றியக் கருத்துக்களை திரும்பவும் மக்கள் முன்வைக்க ஒரு சிறு முயற்சியை செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆயுதக்குறைப்பு, இந்தியக் கலாசாரம், இலக்கியம், அறிவியல் வளர்ச்சி, உலகமயமாகும் பொருளாதார சிந்தாந்தங்கள் என பல்வேறு தளங்களில் மகாத்மாவின் பதிவுகளையும் அதன் பின்விளைவுகளை பற்றிய ஒரு சிறு பார்வையே காந்தீய விழுமியங்கள். மகாத்மா காந்திஜியின் கருத்துக்களை முழுவதுமாக ஆராய்ந்து விமர்சிக்கும் தகுதியும், திறமையும், அனுபவமும் எனக்கு இல்லாவிட்டாலும் அவரது கருத்துக்களை மக்கள் முன் எடுத்து வைப்பதில் அதீத ஆர்வமுண்டு. காந்தீய சிந்தனைகள் பற்றி விவாதிப்பதற்காக தனியாக ஒரு யாகூ குழுமத்தையும் ஆரம்பித்திருந்தேன். அதைப் பற்றின எனது முந்தைய பதிவு.

காந்தீய சிந்தனைகளை எல்லோருக்கும் புரிகிற எளிய வடிவத்தில் தமிழோவியத்தில் இனி வாராவாரம் எழுதலாம் என்றிருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் தமிழோவியம் கணேஷ¥க்கும், பாரா ஸாருக்கும் எனது நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும்.

"சாந்தி நிலவட்டும்;
சமுதாயம் சிறக்கட்டும்
நதிகள் இணையட்டும்,
நல்வாழ்வு மலரட்டும்;
இந்தியா ஒளிரட்டும்!"

- ஜெ. ரஜினி ராம்கி