Tuesday, April 20, 2004

Monday வந்து மனம் திறக்கிறேன்!

எல்லோரும் ஜாகையை மாத்திட்டிருக்காங்க. நிறைய பேர் எழுதுற மேட்டரு, ரூட்டு எல்லாத்தையுமே மாத்திட்டாங்க. நான் ஜாஸ்தியா பாலிடிக்ஸ் பத்தி எழுதுறதா நலம் விரும்பிகள் நினைக்கிறாங்க! ராயப்பேட்டை ஆஸ்பிடலிலிருந்துன்னு போட்டவுடனே பல பேர் பதறியடிச்சு போன வாரம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு காரணம் அடிக்கடி காமெடியாவும் சீரியஸாவும் மாத்தி மாத்தி எழுதறதுல எல்லோரும் மண்டை காய்ஞ்சு போயிடுறாங்கிறதுதான்! சரி என்னதான் எழுதறது? ஏகப்பட்ட குழப்பம்.

எதைப்பத்தியாவது ஒழுங்கா உருப்படியா தொடர்ந்து ஏழுதி தொலைச்சா என்ன? (பாரா ஸார்!)

அரசியல் பத்தி ஜாஸ்தியா எழுதி வாங்கி கட்டிக்காதீங்க (பூனை சங்கர்!)

டயலாக்கெல்லாம் மனசுல வந்து டாலடிக்குது!

கிருபா ஷங்கர் சொல்றதை பார்த்தா சப்டொமைன் போட்டு சொந்தக்கடை போடலாமேன்னு ஒரு யோசனை. நடுவுல அருள் வேற மல்டி மீடியா டெமோ காமிச்சு அவரோட பக்கத்தை பத்தி சொன்னதும் வித்தியாசமா ·பிளாஷ் போட்டு கலக்கலாமான்னு ஒரு ஆசை!

ஒரு நாலு நாள் யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம்னு இருக்கேன். அது வரைக்கும் இங்கிருந்து ஜூட்!