Tuesday, May 25, 2004

காணாமல் போன காஸி!

தெற்காசியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் முப்பது வருஷத்துக்கு முந்தி விசாகப்பட்டினம் கரையோரம் ஜல சமாதியடைந்து இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கிறது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே ஆச்சரியமாக சங்கதிதான். டயாப்ளோ என்று நாமகரணம் சூட்டி இரண்டாம் உலகப்போரின் போது அறிமுகப்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல்தான் அறுபதுகளில் பாகிஸ்தானுக்கு குத்தகை விடப்பட்டு, ஒரு சில மாற்றங்களுடன் காஸி என்று பெயரிடப்பட்டு பாகிஸ்தானின் முக்கியமான அஸ்திரமாக இருந்து வந்திருக்கிறது.

1971 ஆம் ஆண்டின் இறுதிகளில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தை தவிடு பொடியாக்க சத்தம் போடாமல் விசாகப்பட்டினத்திலிருந்து வெகு தொலைவில் மையம் கொண்டிருந்ததாக ஒரு சிலரும் இந்தியாவின் யுத்த கப்பலான விக்ராந்தை தகர்க்க காராச்சியிலிருந்து புறப்பட்ட காஸி, வழி தெரியாமல் விசாகப்பட்டினத்திற்கு வந்து தொலைந்ததாக இன்னும் சிலரும் சொல்கின்றனர். எதுக்காக இந்தப் பக்கம் வந்தது என்பது யாருக்குமே தெளிவாக தெரியவில்லை.

300 மீட்டர் நீளமுடைய காஸியால் 11,000 கடல் மைல்கள் வரை விடாமல் டிராவல் பண்ணி தொடர்ந்து 75 நாட்கள் வரை கடலிலேயே இருக்க முடியுமாம். எதிரியை ஒழிப்பதற்காக வெகு து¡ரம் பயணம் செய்து வந்து காத்திருந்த காஸி, இந்திய எல்லையில் போர் துவங்குவதற்கு முன்னாலேயே வங்காள விரிகுடாமல் ஜல சமாதியாகி அட்ரஸ் இல்லாமலே போய்விட்டது. பாகிஸ்தானிலும் எமர்ஜென்ஸி வந்து யுத்தத்திற்கு தயாரானதால் காஸியை பத்தி பேசவே யாரும் முன்வரவில்லை. இன்று வரை தெற்காசியாவின் மிகப் பெரிய புதிராகவே காஸி இருந்து வருகிறது.

காஸி எப்படி மூழ்கியது? இந்திய கப்பற்படையின் பங்கு என்ன என்கிற விடை தெரியாத கேள்விகள் முப்பது வருஷமாக தொடர்ந்து இருந்து வருகிறதாம். இந்திய படையின் அதிரடி தாக்குதல்தான் காரணம் என்று ஒரு குரூப்பும் கப்பலில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து என்று பாகிஸ்தானும் பக்கமும் சொல்கிறார்கள். உண்மையிலேயே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. சம்பவம் நடந்த போது எத்தனை பேர் இருந்தார்கள் சடலங்கள் கிடைத்ததா இல்லையா என்பதை பற்றியெல்லாம் பாகிஸ்தான் மூச்சு விட மறுக்கிறது. இந்தியாவும் காஸி மூழ்கிய இடத்தில் தேடிக்கொண்டே இருக்கிறது. அட்லீஸ்ட், நம்ம பேரனுங்களுக்காவது விஷயம் தெரிய வரும்னு நம்பிக்கை வைப்போம்!