Friday, June 04, 2004

துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்

சோ எடுத்த தேர்தல் நிலைப்பாடு பற்றிய பொது ஜனத்தின் கமெண்ட்

'மக்கள் இந்த ஆள் ஏன் எழுதறான். எதுக்காக எழுதறான். யாருக்காக எழுதறான்னே இத்தனை நாள் புரியாம இருந்துச்சு. இப்போதானே தெரியுது. தானே எழுதி, தானே படிச்சுக்கறான்யா அவன்!'

*****************************************************************

பொன்னையன் -

'ரேஷன் கடையில் அரிசி இலவசம், மின்சாரக் கம்பியிலிருந்து யார் வேண்டுமானாலும் கரண்ட் இழுத்துக் கொள்ளலாம், அரசு ஊழியர்கள் வேலைக்கு வரத் தேவையில்லை-சம்பளம் மாதாமாதம் மணியார்டரில் அனுப்பி வைக்கப்படும், ஆடு கோழி பலி போல யாருக்காவது வேண்டுதால் இருந்தால் அவர்கள் நரபலி கொடுக்கலாம், போன் செய்தால் அரசு பஸ் வீடு தேடி வரும்- பயணம் இலவசம்ம்னு நீங்க போட்ட உத்தரவையெல்லாம் ஒரு பட்டியலா எழுதிட்டேம்மா... பாக்கறீங்களா?'

ஜெ -
'இதையெல்லாம் செஞ்சு அடுத்த எலெக்ஷன்ல ஜெயிச்சா, சரி. ஜெயிக்கலேன்னாலும் கவலையில்லை. அடுத்து ஆட்சிக்கு வர்றவங்க நல்லா மாட்டிகிட்டு சாவட்டும்! நமக்கென்ன!'