Thursday, June 10, 2004

கீதை காட்டும் கிருஷ்ணர்

'வரலாறு காட்டும் கிருஷ்ணரும், கீதை உபதேசம் செய்யும் கிருஷ்ணரையும் நாம் ஒன்றுக்கொன்று குழப்பிக் கொள்கிறோம். கீதையின் கிருஷ்ணர்
வன்முறை, அகிம்சை என்கிற பிரச்சினைகளை பற்றி விவாதிக்கவில்லை. மற்றவர்களை கொல்வதை அர்ஜூனன் பொதுவான முறையில் வெறுக்கவில்லை. தனது சொந்த உறவினகர்களை கொல்வதையே பெறுத்தான். ஆதலால் ஒருவன் தனது கடமையை செய்யும் போது உறவினர்களை மற்ற மக்களிலிருந்து வித்தியாசமாக நடத்தக்கூடாது என்று கிருஷ்ணர் அறிவுரை கூறினார். போர் தொடுக்கலாமா தொடுக்கக்கூடாதா என்கிற பிரச்சினையை கீதையின் காலத்தில் முக்கியமானவர்கள் யாரும் எழுப்பவில்லை. சமீபகாலத்தில்தான் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக தோன்றுகிறது.

காந்தீய விழுமியங்கள் : கீதை காட்டும் கிருஷ்ணர்