Friday, July 09, 2004

எனக்கொரு கவிதை வேணுமடா

எனக்கொரு கவிதை வேணுமடா
இல்லாட்டி போனா
வலைப்பூ நாறுமடா!

எல்லோரையும் படிக்க வைச்சு
ஏகாந்தமாய் சிரிக்க வைச்சு
தலையில்
எலுமிச்சை தேய்க்க வைக்க...
எனக்கொரு கவிதை வேணுமடா!

ஏண்டா எழுத வந்தேன்னு
இருக்கிறதை தூக்கிக்கிட்டு
எல்லோரும் என்னை
இல்லாம ஆக்கிவிட...
எனக்கொரு கவிதை வேணுமடா!

ஷங்கர் பூனையையெல்லாம்
சதாய்ச்சுட்டு,
இருக்குதா இல்லையான்னு
சுவடு தெரியாம
சுத்தமா ஓரங்கட்ட...
எனக்கொரு கவிதை வேணுமடா!

காலாகாலத்துக்கும்
கவிதையே எழுதுமாட்டேன்னு
மீனாக்ஸெல்லாம் மன்னிப்பு கேட்டு
மீளாத்துயருக்கு போய்டற மாதிரி...
எனக்கொரு கவிதை வேணுமடா!

கிருபா ஷங்கரெல்லாம்
கிறுகிறுத்துப் போய்
கரும்பு ஜூஸை கட் பண்ணிட்டு
ஜாம் பஜாருக்கு ஜகா வாங்கிக்க...
எனக்கொரு கவிதை வேணுமடா!

புதுக்கோட்டைக்கு போன எம்கேகுமார்
புதுசா, கவிதைப் பேட்டைக்கு வந்திருக்கும்
கரையானை அழிக்க
புதுக்கட்டையுடன் ஓடி வர்றமாதிரி...
எனக்கொரு கவிதை வேணுமடா!

பேஸ்தடிக்க வைக்கும் பேரா படிச்சு
பாரா பேஜாராகி...
கழுதை எழுதிய கவிதைன்னு
மனசுக்குள் டைட்டில் போட்டு
மானத்தை வாங்காமல்
கவிதைப் பேட்டைக்குள்
கா(மெண்ட்ஸ்)லடி வைக்காதேன்னு
பதினெட்டுப்பட்டிக்கும்
பதிமூணாவது கட்டளை போட...
எனக்கொரு கவிதை வேணுமடா!