Monday, July 19, 2004

பாரதி கூட்டிய Blogger's Meet

காலையில் கிருபாவின் அபூர்வ வாகனத்திலேறி மாலையில் நம்ம பேட்டைக்கு பத்திரமாய் திரும்பி வரும்வரை கண்டதையும் கேட்டதையும் பத்தி பத்து பக்கத்துக்கு எழுதிவிடலாம். சரக்கு ஜாஸ்தியாவே கிடைச்சது! 'பாரதி'யின் பெயரால் ஒரு எழுத்தாளர்கள் கூட்டத்திற்கே ஏற்பாடு பண்ணியிருந்தார் பாரா. மாலன், இரா.முருகன், வெங்கடேஷ், பத்ரி, ரூமி, ஹரிகிருஷ்ணன், யுகபாரதி மாதிரி பெரியவங்க இருக்குற இடத்துல வாலை சுருட்டிக்கிட்டு அமைதியா உட்கார்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. வெயில் நேரத்தில் கிடைச்ச கூல்டிரிங்ஸை கூச்சப்படாமல் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு ரெண்டு தடவை வாங்கி ஊத்திக்கிட்டோம். ஆனாலும். ஒரு கையில் கூல்டிரிங்ஸ் இன்னொரு கையில் காபி சகிதம் வெளுத்து வாங்கியவர் பத்தி நான் எதுவும் சொல்லப் போவதில்லை! வழக்கம் போல மாப்பிள்ளையாட்டம் வந்ததொரு பூனை. ஆனா, இருக்குற சுவடு தெரியாம இருந்ததென்னவோ சித்திரன்தான். துறு துறு பிரகாஷையும் ஷங்கரையும் கோஆர்டினேட் பண்ணி அழைச்சுட்டு வந்துட்டு, வந்த இடத்தில் சித்திரனோட போட்டி போட்டது முத்துராமன். திருக்குறள் புஸ்தகம் வைத்த தாம்பூல தட்டோடு திரும்பும்போதுதான் சின்ன வருத்தம். மதிய சாப்பாட்டில், பாராவின் பூரணம் வைத்த பூரி இல்லையே!