Saturday, July 17, 2004

அதெல்லாம் ஒரு காலம்!

 

 
ஒரு கிளாஸ்க்கு நாலு ஜன்னல். ரெண்டு கதவுன்னு விஸ்தாரமா இருக்கும்.  ரெண்டு மூணு தடவை திருடனெல்லாம் வந்து சத்துணவுக் கூடத்துல இருக்குற பிசாத்து அரிசி, எண்ணெயெல்லாம் தூக்கிட்டு போயிருக்கான். மத்தபடி மழை, புயல், வெள்ளம், காத்து எது வந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. வெறும் மொட்டை மாடிதான். அதில் கீத்துக் கொட்டகை எதுவுமில்லை.  தீடீர்னு தீப்பிடிக்க சான்ஸே இல்லை. மாடிப்படிகளில் ஏறுவதற்கே மாணவர்களுக்கு அனுமதியில்லை. வகுப்பறைக்கும், சமையல் கூடத்துக்கும் கிட்டதட்ட நூறடி தூரம். வாத்தியார்களுக்கும் மாணவர்களுக்கும் தனித்தனி டாய்லெட். பள்ளிக்கூடத்தை ஓட்டின மாதிரி சின்ன வாய்க்கால். அதில் கொஞ்சமாவது தண்ணீர் ஓடிக் கொண்டேயிருக்கும். வாய்க்காலின் கரையை ஓட்டின மாதிரி எலந்தை மரம். முள் குத்தினாலும் மீறிக்கொண்டு எலந்தை காயை பறிச்சு தின்னுகிட்டே ஒரு வாக் போயிட்டு வர்றதுக்கு ஒரு தோட்டம். அதில் விளையாட்டு நேரத்தில் வேலியடைத்து பயிரிட்ட வெண்டைக்காய், தக்காளி செடிகள். அதையொட்டி பரந்து விரிந்திருக்கும் விஸ்தாரமான இடம், விளையாடுவதற்காக மட்டும். அங்கிருந்தே மாயூரநாத சுவாமியை பார்த்து ஒரு கும்பிடு போட்டுக்கலாம். இப்படியொரு ஸ்கூலை கட்டி வாடகை எதுவும் வாங்காமல் ரொம்ப நாள் தானமாக கொடுத்த தருமபுரம் ஆதினத்துக்கும் நன்றி சொல்லியாகணும்.
இதுதான் நான் படிச்ச ஆரம்ப பள்ளிக் கூடம். இப்போ ஆள் அரவமற்ற இடமாகிவிட்டது. மாயவரத்து மாபியா கும்பலால் இடத்தை கரெக்டா கண்டுபிடிக்க முடியும்னு நினைக்கிறேன்! இப்படியொரு பள்ளிக் கூடத்தில் படிச்சுட்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்கூலை டிவியில் பார்க்கவே வயித்தெரிச்சலாகத்தான் இருக்கு!