Monday, November 01, 2004

கேள்விகள் ஆயிரம்!

மும்முரமா பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அப்பாவுக்கும் ஹாலில் விளையாடிக்கொண்டிருக்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடல் :-

"அப்பா, சூரியனை யார் கண்டுபிடிச்சாங்க?"

"கடவுள்"

"கடவுள் எங்கேப்பா இருக்காரு?"

"சொர்க்கத்துல"

"நீங்க சொர்க்கத்துக்கு போய் பார்த்துட்டு வந்தீங்களாப்பா?"

"இல்லே".

"பின்னே, அவர் சொர்க்கத்துலதான் இருக்காருன்னு எப்படி சொல்றீங்க?"

"கடவுள் சொர்க்கத்துல இருக்கார்னு எல்லோரும் சொல்வாங்க"

"அப்ப சொர்க்கத்தை கண்டுபிடிச்சது யாரு?"

"கடவுள்"

"அப்ப, அதுவும் கடவுள்தானா?"

"ஆமா"

"கடவுள், அதுக்கு முன்னாடி எங்கே இருந்தாரு?"

"ஷட் அப்... நீ ரொம்ப பேசுறே! போய் ஹோம் வொர்க் பண்ற வேலையை பாரு.."

நீதி - உலகத்துல எந்த கேள்விக்குமே சரியான பதில் கிடைக்கவே கிடைக்காது!

(சொன்னது - சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிஜி)