Wednesday, December 01, 2004

கேள்வியின் நாயகனே!

"சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்! ஏன் மத்திய அமைச்சர்கள்மீதும், மற்ற தலைவர்கள்மீதும் இப்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்டாலே அவர்கள் வகிக்கும் பதவியிலிருந்து விலகவேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கூறும் பலர், இந்த சங்கராச்சாரியாரை அவர் வகிக்கும் மடாதி பதி பதவியிலிருந்து உடனடியாக நீக்கி வைக்கவேண்டியது, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமை யாகும்! சட்டம் வளையக் கூடாது என்றோம்; அப்படி யாராவது வளைக்க முயன்றால் அவர்களை மக்களும், உண்மை நாடுவோரும் கடைசிவரைக் கண் காணித்தலும் அவசிய மாகும்! இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது." தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கையில்... சில கேள்விகள் * ஜெயிலில் இருக்கும் ஜெயந்திரரை, விஜயேந்திரர் பார்க்க மறுப்பது ஏன்? இவ்வளவு நடந்தபின்பும் மடாதிபதி பதவியிலிருந்து ஜெயந்திரரை விலக்க முடியாதது ஏன்? * இந்து சமய அறநிலைய பாதுகாப்புத்துறையால் ஜெயந்திரர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? இந்து அறநிலையத்துறையின் அதிகார வரம்பை எல்லா சமயக் கோயில்களுக்கும் விரிவுபடுத்த முடியாதது ஏன்? * ஜெயந்திரர் கைதை எதிர்க்கும் பிராமண சங்கத்திற்கும் மற்ற ஜாதி சங்கங்களுக்கும் வித்தியாசம் உண்டா? * சங்கரராமன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சத்தை அள்ளிக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதா சாதிக்க நினைத்தது எதை? * ஜெயந்திரர் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸின் கோரிக்கை குறித்து கலைஞர் வாய்திறக்காதது ஏன்? * எத்தனை நாளைக்குத்தான் ஜெயந்திரர் விஷயத்தில் மெளனச் சாமியாராக இருக்கப்போகிறது காங்கிரஸ்? மேட்டர் உண்மைதானுங்களா?! "அய்யோ... சில்லறை இல்லேன்னா ஆளை வுடு சாமி.... தோண்டி துருவாதே! நான் அந்த மாதிரி சாமியாரில்லை!"