Monday, April 10, 2006

அரிசியல்

ஒரு நாப்பது வருஷமா சொல்லிட்டிருக்கிற விஷயந்தான். 'பொற்காலம் தொடரட்டும்'னு போன தடவை சொல்லிட்டு கவுந்துபோனதிலேர்ந்து எல்லோரும் படு உஷார்தான். எலெக்ஷன் நேரத்துல அரிசியை பத்தி பேசலைன்னா இன்னாத்துக்கு ஆவறது? சித்த முன்னாடித்தான் எங்க பேட்டை எம்.எல்.ஏ டி.நகர்ல கூவிட்டிருந்தாரு. அம்மா கொடுக்கிற அரிசி அரை மணி நேரத்துல வெந்துடும்; அய்யா கொடுக்கிற அரிசி வெந்து வர்றதுக்கு அரை நாள் ஆயிடுமாம்! அப்பனை மாதிரி குரலை மட்டும் கொடுத்த அந்த ஆண்டவன் கொஞ்சம் இதையும் கொடுத்திருக்கலாம்!

அரிசி விலை இனிமே குறையவே குறையாதுன்னாங்க அம்மா; ரெண்டு ரூபாய்க்கு திவ்யமா தர்றேன்னார் பெரியவர். பதினைஞ்சு கிலோ அரிசியை வூடு புகுந்து(!) குடுத்துட்டு போவேன்னு கேப்டன் சொல்றாரு. சினிமாவை பார்த்து இந்த ஓட்டு ஓட்டுறவங்களுக்கு அரிசி கிடையவே கிடையாதுன்னு கேப்டன் கண்டிஷனா சொல்லிப்புடணும்!

அரிசி, கலர் டி.வியி கனவுல இருக்கற நேரத்துல இந்த அர்ஜூன் சிங் இப்பிடி பண்ணிட்டாரேன்னு கொஞ்சம் வருத்தம்தான். கட்சிக்காரங்க யாரும் கண்டுக்கலைதான். ஆனா சும்மா சுரண்டி வுட்டாலே அரிப்பெடுத்து காயமாக்கி கட்டுப்போடற நிலைமைக்கு கொண்டு போய்டற நம்மூர்காரங்க இதை விட்டுறவாங்களா? அனுபவத்தை வெச்சு அட்¨வைஸ் பண்ணி வெள்ளைக்கொடி காட்டப்போக அது கருப்புக்கொடியாயிடுச்சு. தேவுடா... தேவுடா.. நமக்கெதுக்கு வம்புடா! சந்திரமுகி ஒரு வருஷம் கம்பிளீட் பண்ணியிருக்குது! இக்கட சூடேண்டி!

Image hosting by Photobucket

யாரும் கண்டுக்கலைன்னு நினைச்சு வை.கோ பேசுற காமெடி சீரியஸா போன மாதிரி இங்கே சீரியஸ் கமெண்ட்டெல்லாம் காமெடியா போவது! ஒரு சீரியஸ் சீரியலும் திடீர்னு காமெடிக்கு தாவி ஒரே களேபரம். பாலசந்தர் - குஷ்பு மேட்டரை விட பரம அதிர்ச்சி! ஏண்ணா, நடிக்கப்போறதா சொன்னதுக்கு பதிலா இலக்கியம் படைக்கப்போறதா சொல்லியிருந்தா இன்னும் பத்துப்பேரு பயந்துருப்பாங்களே!

இவ்ளோ சீரியஸ் மேட்டர் ஓடறச்ச அம்மாஞ்சியா ஒரு கேள்வி. இந்துன்னா யாரு? ரொம்ப முக்கியம்! யாரங்கே... திருட்டு ராஸ்கலையும் திராவிட ராஸ்கலையும் களத்துல இறங்கி ஒரு கை பார்க்க செல்லுங்கோ! ஆளாளுக்கு மாஞ்சு மாஞ்சு கமெண்ட்டாலும் அந்த அருள்வாக்குதான் மனசை அள்ளுது. வேஷ்டி கட்டுன அம்மாவும்; புடவை கட்டின அய்யா பத்தியும் ஒரு பேச்சு நடக்குது. ஆம்பளை புடவை கட்டுனா அது அசிங்கமாம்; அதுவே பொம்பளை வேஷ்டி கட்டுனா அட... சிங்கமாம்! ஆணாதிக்க திமிர் பத்தி அருள்வாக்கு சொன்னதெல்லாம் ஞாபகத்துக்கு வருது!. சரி... சரி பெண்ணுரிமை பத்தி மாங்கு மாங்குன்னு கட்டுரை எழுதிட்டா சரியாப்போச்சு!

அரசியல்ல....ஸாரி எழுத்துல இதெல்லாம் சகஜமப்பா!