
அடுத்தவனுக்கு கோஷம் போட்டே பழகிப்போன உடன்பிறப்புகள் வழக்கம்போலவே கொஞ்சம் புலம்பிட்டு எலெக்ஷன் வேலையை பார்க்க ஆரம்பிச்சாச்சு! ரத்தத்தின் ரத்தங்களுக்கும் அதே வருத்தம்தான். ம.தி.மு.க சார்பா மகாலிங்கம் நிக்குறாரு. ஏற்கனவே எம்.பி எலெக்ஷன்ல நின்னு தோத்துப்போனதுல அனுதாப அலை கொஞ்சம் மிச்சமிருக்குது. கொஞ்சம் டீஜென்டான பார்ட்டி! பா.ம.ககாரங்களுக்கும் மகாலிங்கம் மேல ஜாதிப்பாசம். இப்போ இருக்குற எம்.எல்ஏவுக்கு அ.தி.மு.கல சேர்ற பாக்கியம் கிடைக்கலையாம்! என்னை நல்லவன்னு சொல்லிட்டாங்களேன்னு வடிவேலு ஸ்டைலில் ·பீல் பண்ணிவிட்டு கட்சியோட அன்புக்கட்டளையை ஏத்துக்கிட்டு வேறு வழியில்லாம பா.ஜ.க சார்பா தனியா நிக்குறாராம். பன்ச் டயலாக்கெல்லாம் ஞாபகத்துக்கு வருது!
விஜயகாந்த் சார்பா ஒரு அம்மிணி நிக்கிறாங்க. அஞ்சு வருஷமா அன்னாருக்கு ரசிகையாக இருக்குறாங்களாம்! இதெல்லாம் போதாதுன்னு டி.ராஜேந்தர் வேற. குத்தாலத்துல தி.மு.கவை சப்போர்ட் பண்ணி பேசிட்டு இங்கே வந்து எதிர்த்து பேசி தனக்கு ஓட்டு கேட்பாராம். அப்படியே செம்பொன்னார்கோயில் பக்கம் போய் திரும்பவும் தி.மு.கவை சப்போர்ட் பண்ணுவாராம். சர்க்கஸ்னு இருந்தா கோமாளின்னு யாராவது இருக்கணுமே! பா.ஜ.க பார்ட்டி இப்போ நிம்மதியா இருக்காராம்! என்னதான் ஜாதி கணக்கு போட்டாலும் வெற்றி வாய்ப்பை முடிவு செய்யறது எல்லா ஜாதிக்காரங்களும் இருக்குற மயிலாடுதுறை டவுண் மக்கள்தான். யாருக்கும் ஆதரவோ, எதிர்ப்போ இல்லாம நிலைமை சவசவன்னுதான் இருக்குது. வை.கோ கணக்குக்கு பிள்ளையார் சுழி இங்கே ரெடின்னுதான் தோணுது!