Wednesday, February 18, 2004

பெரியாரும் தலித்துகளும்
''தமிழர்களைப் பொறுத்தவரையில் இறந்து போனவர்கள் அனைவருமே அமரர்கள். தம் பெரும் மதிப்பிற்கு உரியவர்கள். விமர்சனங்கள், மாறுபாடுகள், எதிர்க்கருத்துகள் போன்றவைகளிலிருந்து விடுபட்டு வேறு தளத்திற்குக் கொண்டு போகப்பட்டு, பீடத்தில் பிரதிண்டை செய்யப் பட்டவர்கள். அவர்கள் எழுத்தாளர்களாக இருக்கலாம், கவிஞர்களாக இருக்கலாம், முக்கியமான அரசியல் தலைவர்களாக இருக்கலாம்.

தற்போது தமிழகத்தில் பெரியாரைப் பற்றிய சில விமர்சனங்கள் தலைது¡க்க ஆரம்பித்திருக்கின்றன. திராவிடர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய அவரைத் தலித்துகளின் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது; அவரது கருத்துகளைப் பற்றிய ஒரு மீள்பார்வை அவசியம் என்ற கருத்து வலுக்கிறது.

நம் சமுகத்தைப் பொறுத்தவரை பெரியாரின் சிந்தனைகள் என்பதும் அவற்றின் தாக்கங்கள் என்பதும் ஒரு போதும் ஒதுக்கிவிட முடியாத ஒன்று. எத்தனையோ கருத்துடைப்புகளுக்கும் சமுகக் கட்டுடைப்புகளுக்கும் காரணமானவர் அவர். பெண் சுதந்திரம் பற்றிய அவரது கருத்துகளுக்கு இணையான கருத்துகள் இன்றுவரை வேறு யாரிடமிருந்தும் வரவில்லை.

ஆனால், தலித் மக்களையும் இஸ்லாமியச் சமுகத்தினரையும் அவர் தமிழர்கள் என்றே கருதவில்லை. அவர்களைத் தனது சொல்லாடலின் விளிம்பிலேயே வைத்திருந்தார் என்பதற்கு பெரியா¡¢ன் வார்த்தைகளையே சில தலித் விமர்சகர்கள் மேற்கொள் காட்டுகின்றனர்.

பெரியார் என்ன சொன்னார், எதைப் பற்றிப் பேசினார், என்பது பற்றிக் கவலை இல்லை. அந்த கருத்துகளைப் பற்றிய புரிதலோ அல்லது அதைப் பற்றிய தெளிவோ அவசியமற்றதாகிவிட்டன.

நான் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாதீர்கள், சுயமாகச் சிந்தியுங்கள் என்று கூறியவரின் கருத்துகளும் அவரோடு சேர்ந்து பீடம் ஏற்றப்பட்டிருக்கின்றன. இன்று தமிழ்க் கட்சிகளின் கொள்கைகள் பெரியாரிடத்திலிருந்து விலகி இப்படி நீர்த்துப் போனதன் காரணம் என்ன? பெரும்பாலான கட்சிகளில் இன்னும் தலித்துகளுக்கு உரிய இடமளிக்கப்படவில்லை. இந்தக் குறை பெரியாரில் ஆரம்பித்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு நேர்மையான பதிலைத் தேடுபது அவரை அவமதிப்பாகாது. பெரியாரை உண்மையாக உணர இது ஒரு சந்தர்ப்பம்.''

- கனிமொழி மே - ஜூன் 2003 காலச் சுவடு இதழில்

எனக்கு 'க்', 'ப்' எங்கெங்கே போடுவது என்பதெல்லாம் கை வராத கலை. கனிமொழியக்கா அளவுக்கு அதிகமாகவே அள்ளிவிட்டிருப்பது மாதிரி தெரியுது. யாராவது பரிசோதித்து சொல்ல முடியுமா?

- ஜெ. ரஜினி ராம்கி