Monday, June 14, 2004

தவிக்கும் தலித்தியம்

மறுபடியும் மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சிகளாலும் தீண்டத்தகாத கட்சிகளாகியிருக்கின்றன தலித் கட்சிகள். 1980 முதல் ஜாதியை அடிப்படையாக கொண்ட கட்சிகள் அரசியல்வானில் ஆக்ரமித்து வந்தாலும் தலித் கட்சிகளுக்கு மட்டும் தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததற்கு தெளிவான காரணங்கள் தென்படாவிட்டாலும் திராவிடக் கட்சிகளின் கருணைப் பார்வை கிட்டாததை முக்கியமான காரணமாக சொல்ல முடியும். எண்பதுகளில் வன்னியர் சங்கமாக தொடங்கப்பட்டு தமிழக அரசியல் வானில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இன்று பாமக உருவெடுத்திருப்பதற்கு திராவிடக் கட்சிகளுடனான அதன் அணுகுமுறையே காரணம். 1916ல் நீதிக் கட்சியால் தொடங்கப்பட்ட சுய மரியாதை இயக்கம் பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் அரங்கிற்கு கொண்டுவந்தாலும் அடுத்து வந்த 50 ஆண்டுகளில் இனம், மொழி, பொருளாதார விஷயங்களே முன்னிலைப்படுத்தப்பட்டதால் ஜாதீய ஏற்றத்தாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. திராவிடக் கட்சிகளின் பிராமணீய எதிர்ப்பு என்பது ஜாதி அடிப்படையிலான சமூகத்தை மாற்றுவதற்கு அல்ல; அதிகாரத்தை பிடிப்பதற்கு மட்டும்தான் என்பதை தலித் மக்கள் புரிந்து கொள்வதற்குள் திராவிடக் கட்சிகள் அசைக்க முடியாத சக்தியாக ஆகிவிட்டன.

தொடர்ந்து படிக்க... தவிக்கும் தலித்தியம்.. திசைகள் - ஜூன் 2004