Wednesday, June 16, 2004

அப்துல் கலாமின் ஆத்மா!

தலைவர்கள் என்றாலே அரசியல் தலைவர்கள் என்று அர்த்தம் பண்ணிக்கொள்கிற காலத்தில் ஒரு பெரிய தலைவரால் அரசியல் பேசாமலே இருக்கமுடியுமாங்கிற ஆச்சரியத்தை அடிக்கடி கொடுத்துட்டு வர்றவர் நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம். லேட்டஸ்டா ஒவ்வொருத்தரும் குறைந்த பட்சம் 5 பேர் படிக்க ஏற்பாடு செஞ்சு கொடுக்கணும்னு சொல்லியிருக்காரு. கூடவே மரம் வளர்க்கவேண்டும், ஆண் பெண் பாகுபாடு கூடாதுன்னும் சொல்லி இதையெல்லாம் செஞ்சாலே நாட்டை கட்டியமைப்பதில் பெரிய ரோல் செஞ்ச மாதிரிதான் சொல்லி உற்சாகப்படுத்துறாரு. ஒவ்வொரு நாளும் குறைந்தது அஞ்சு லட்சம் பேர் வழிபாட்டுத் தலங்களுக்கு போகும் பழக்கமிருப்பதால் அதில் ஒரு 10 சதவீத பேர் இதுமாதிரி செய்ய ஆரம்பித்தாலே போதும். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும் என்கிறார். இதையெல்லாம் எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் ஒரு அறிவிப்பாகவே வைக்கவேண்டும் என்கிறார். ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதுமாதிரி சிந்திக்க முடியும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டுன்னு அட்வைஸ் பண்றதுக்காவது ஒரு தலைவர் நமக்கு வேண்டுமே! அசத்துறீங்க அப்துல் கலாம் ஸார்!

மகாத்மா காந்திஜியின் ஆத்மா... தமிழோவியத்தில்