Friday, June 18, 2004

மோட்சம்

மறு பிறப்பு, மோட்சம் போன்றவற்றிற்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இருந்தாகவேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறார் காந்திஜி.

'கடவுளே இல்லையென்றால் மோட்சம் எப்படி இருக்க முடியும் என்று கேட்பது மோட்சத்தை புரிந்து கொள்ள தவறுவதாகும். மோட்சம் என்பதன் பொருளின் ஒரு பகுதியைத்தான் நம்மால் கிரகிக்க முடியும்; மீதியை அனுபவத்தால்தான் அறிய வேண்டும். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முடிவற்ற பல்வேறு ஜன்மங்களை எடுப்பதிலிருந்தும் அதன் விளைவான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுதல் என்பது அதன் பொருள். ஆனால், கடவுள் இருக்கிறார் என்பதை மறுப்பது தேவையில்லை.

தமிழோவியத்தில்