Saturday, June 26, 2004

படித்ததும் கேட்டதும்

முதல்ல ஒரு சந்தோஷமான விஷயம். அதிகாலை ஏழரை மணிக்கே பாரா ஸாருக்கு அப்பாவாக ஆண்டவன் பிரமோஷன் குடுத்த மேட்டர் தெரிஞ்சது. பாராட்டுக்கள் பாரா ஸார்... வாழ்த்த வயதில்லைன்னாலும்...!

அடுத்த ஒரு ஆச்சரியமான விஷயம். எப்பவும் ஜூனியர் விகடன் வாங்கினவுடனே கழுகார், பூனையார்னு ஒரு ரவுண்டு வந்தப்புறம்தான் மதனோட ஏரியாவுக்கு வருவேன். அது தப்புன்னு இன்னிக்குதான் தெரிஞ்சது. இன்னிக்கு வந்த இஷ்யூவில் அட்டகாசமான ஒரு மேட்டர் சொல்லியிருக்கார் மதன். Pre Frontal Cortex!

முன்கோபம் - இப்பெல்லாம் பெருமைக்குரிய விஷயமா மாறிடுச்சு இது! 'ஸாருக்கு... ஷார்ட் டெம்பர்' அப்படீன்னு சொல்லி பில்டப் குடுக்கிறது இங்கே சகஜமப்பா...! அரசியலுக்கு வந்தே ஆகணும்னு முடிவோட இருக்குற நம்மூர் ஹீரோக்களுக்கு அடிக்கடி வரும் விஷயமிது. எனக்கு முன்கோபம் ஜாஸ்தின்னு சொல்றதுல யாருக்கும் எப்பவும் தயக்கமோ கூச்சமோ இருக்கிறதில்லை. அதுதான் ஏன்?

முன்கோபத்துக்கு காரணம் வளர்ந்த சூழல் அல்லது சைக்காலஜிக்கல் சங்கதியா இருக்கும்னுதான் இன்னிக்கு வரைக்கும் நினைச்சிட்டிருந்தேன். மதன் pre Frontal Cortexதான் அதுக்கு காரணம்னு சொல்றார்.

பகுத்தறிவு (கருப்புச்சட்டைக்காரர்கள் ஞாபகத்துக்கு வருதா? ஆனா, இது வேற) அதாவது பகுத்தறியும் திறன் வந்தவுடன்தான் மனுஷனின் மூளைக்கு முழு வளர்ச்சி கிடைச்சுதாம். சிந்திக்கும் சக்தி வந்த பின்னாடி மனுஷனுக்கு உணர்ச்சிகளை கண்ட்ரோல் பண்ண முடிஞ்சதாம். கண்ட்ரோல் யூனிட் இருக்குற இடம் மூளையின் முன்பகுதிதான். இதுக்குதான் Pre Frontal Cortexன்னு பேரு. எதையும் யோசித்து பார்க்குறதுக்கு இதுதான் காரணமாம். இவன் கூட சண்டை போட்டா நமக்கு ஆப்பு வெச்சுடுவான்னு சிலபேருகிட்டேயிருந்து ஜகா வாங்குறோமில்ல.. அதுக்கு இதுதான் காரணமாம்!

இனிமே யாராவது 'ஏய்... எனக்கு முன்கோபம் ஜாஸ்தி'ன்னு டயலாக் வுட்டா, நெத்தியை சுருக்கி என் கருப்பு மூஞ்சியை சுளிக்க வைக்கப் போறேன். நீங்க எப்படி?