Wednesday, July 14, 2004

"உண்மை"யின் குரல்

"அந்தப் பொடிப் பையனின் ஒரு நாள் உணவுப் பட்டிய லைக் கேட்டால் தலை சுற்று கிறது. அதிகாலை தேன் கலந்த வெந்நீரில் ஆரம்பித்து இரவு பூரி மசால், மசாலாபால், செவ்வாழைப் பழம் என்று ஒரு நீண்டப் பட்டி யல் இருக்கிறது.

பெற்றோர்களை விட்டு நீங்கி விட்டான் - பந்தம் என்கிற கட்டை அவிழ்த்துக் கொண்டு விட்டான். சந்நியாசம் வாங்கியவன் பெற் றோர்களிடம் எப்படி தங்க முடியும்?

பெற்றோர்களிடம் சமாதானமாகி விட்டது என்று ஒரு செய்தி வெளி வந்து அதன் ஈரப்பசை காய்வதற்குள்ளாகவே இல்லை- இல்லை - அது சுத்த பொய் என்று மற்றொரு செய்தி மறுப்பாக வெளிவருகிறது.

மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறதா? பத்திரிகைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் பரபரப்புத் தீனி தேவைப்படுகிறது. அப்பொழுது தானே அவர்கள் வியாபாரம் போனியாகும். ஒரு பார்ப்பனச் சிறுவன் என்ப தாலே இவ்வளவு முக்கியத்துவம் - பாலசந்நியாசி என்கிற கிரீடம்.

ஆன்மீகம் தவிர்த்து வேறு துறைகளில் இவ்வளவுக் குழப்பங்களும், முரண்பாடுகளும் இருந்திருந்தால் என்னென்னவெல்லாம் `சோ’ ராமசாமி கிறுக்கி இருப் பார். `தினமலர்’ எப்படி எல்லாம் தினவெடுத்து எழுதும்!

பார்வதி தேவியார் தங்கக் கரண் டியில் ஞானப்பாலைப் பிழிந்து கொடுத்தார் - அந்தக் கரண்டி இது தான் என்று சோடித்து இருக்க மாட்டார்களா? உப்பு கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பாத்தி போல அவாள் கூட்டம் திருதிருவென்று முழக்கிறது. ஆன்மீகத்தின் பேரால் பெரும் கொள்ளை - பணக்குவிப்பு செய்ய ஒரு மோசமான கூட்டம் இதன் திரைமறைவில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

பொடியனின் பெற்றோர்களும் இந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தன் மகன் உயிருக்கு ஆபத்து என்று புலம்புகின்றனர். இதில் யாருக்குப் பங்கு என்பதில் ஏற்பட்ட மோதலால்தான் இவ்வளவு தூரம் கதை நாறிப் போய் விட்டது போலும்! இந்தப் போட்டி மட்டும் இல்லாமல் போயிருந்தால், அடேயப்பா, இதற்குள் பொடியன் பரணிதரன்பற்றி புதுப் புது தலப்புராணங்கள் எழுதப் பட்டு இருக்கும். ஆன்மீகம், சாமியார் கதை என்றாலே குத்தலாக மக்கள் பேசும் ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

நியாயமாக காவல்துறை மூலம் இதன் பின்னணியைக் கண்டு பிடித்து புரட்டல்காரர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தும் கடமையை அரசு செய்திருக்க வேண்டும். பக்திக்குப் பக்தவத்சலத்தையே தோற்கடிக்கும் அரசு அல்லவா நடந்து கொண்டிருக்கிறது - அதனிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா?"


வெறுமனே அசை போட்டுக்கிட்டிருந்த வாய்க்கு அவல் கிடைச்சா சும்மா விடுமா? மொட்டை தலைக்கும் முழுங்காலுக்கும் பிரமாதமாக முடிச்சு போட உண்மையால் மட்டுமே முடியும். சரி இதெல்லாம் கிடக்கட்டும். ஆளுங்கட்சியிடமிருந்து வல்லம் இடத்தை காப்பாத்திக்க சுயமரியாதைச் சிங்கம் வீரமணி அய்யா கலைஞர் காதுல ஏதோ கிசுகிசுக்குறாரே... அதான் மேட்டரு!