Tuesday, July 13, 2004

தென்னிந்திய மோகம் - I

தென்னாப்பிரிக்க தமிழர்கள்தான் காந்திஜியை அசத்தினார்கள் என்றால் இந்தியாவிலிருக்கும் தமிழர்களும் காந்திஜியை ஆச்சரியப்படுத்த தவறவில்லை. இந்தியாவிற்கு வந்த பின்பு பம்பாயில் சில காலம் இருந்துவிட்டு பூனா வந்தவர், அதற்கு பின்னர் போக நினைத்த இடம் சென்னைதான்.

சென்னைக்கு வந்த காந்திஜி தனக்கு இப்படியொரு கூட்டம் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. தனது பிரசங்கத்தை அச்சிட்டு கையோடு எடுத்து வந்திருந்தார். தான் அந்த பிரசங்கத்தை வாசித்து காட்டும்போதும் மக்கள் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டுக்கொண்டதாகவும் போகும்போது மறக்காமல் பச்சைத் துண்டில் அச்சடித்த பிரசுரத்தை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போனதாகவும் காந்திஜி சொல்கிறார். அப்போதே 10,000 பிரதிகள் விற்பனையானதாம்! ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்த காந்திஜிக்கு, இந்தியாவிலேயே ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமாக இருப்பது சென்னையில்தான் என்கிற நினைப்பையும் தந்தது அந்த பிரசங்க கூட்டம்தான்

காந்தீய விழுமியங்கள் : தென்னிந்திய மோகம் - I