
'...தங்களுடைய மகள் சுலோசனாவின் மரணம் பற்றிய செய்தியை அறிந்தேன். நான் உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்பது தெரியவில்லை. மரணம் ஒரு உண்மையான நண்பன். நமது அறியாமையானாலேயே மரணத்தினால் நமக்கு துக்கம் ஏற்படுகிறது. சுலோசனாவின் ஆன்மா நேற்று இருந்தது, இன்று இருக்கிறது, நாளையும் இருக்கும். உடல் இறந்துதான் தீரவேண்டும். சுலோசனா தன்னுடைய குறைகளைத்தான் தன்னுடன் எடுத்து சென்றிருக்கிறாள்; நல்ல விஷயங்களை இங்கேயே விட்டு சென்றிருக்கிறான். அதையெல்லாம் நாம் மறக்கக்கூடாது. நம்முடைய கடமைகள் இனிமேல்தான் ஆரம்பமாகின்றன. கடமையை நிறைவேற்றுவதில் இன்னும் உறுதியுடன் செயலில் இறங்கவேண்டும்...'
சென்னையை சேர்ந்த தனது நண்பருக்கு 29.01.1948 அன்று இரவு காந்திஜி எழுதிய கடிதத்திலிருந்து... (ஹரிஜன், 22.02.1948)
(30.01.2005 - மகாத்மா காந்திஜியின் 57வது நினைவுநாள்)