எழுத்துதான் அப்படியென்றால் பேச்சு 'ழ'கர சுத்தமாக நல்லாவே வரும். நண்பர்கள் வட்டாரத்தில் அது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம். அதுவும் சென்னைக்கு வந்த புதிதில் அதுவே பேரதிசயம். 1989 ஆம் வருஷம் என்று ஞாபகம். ஏதோ ஒரு ஸ்கூல் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் அன்பழகன் ஒரு தத்துவார்த்தத்தை அள்ளிவிட்டு போனார். 'எட்டாம் கிளாஸ் படிக்கிறவனுக்கு நாலு வார்த்தை தமிழ்ல எழுத தெரிஞ்சுருக்கணும்; பிளஸ் டூ படிக்கிற பையனுக்கு நாலு வார்த்தை இங்கிலீஷில் எழுத தெரிஞ்சிருக்கணும்' ஆஹா... நாம ரொம்பவே ஓவராத்தான் வளர்ந்துட்டிருக்கோங்கிற நினைப்புதான் வந்தது. நல்லவேளை, காலேஜ் படிக்கிறப்போ அன்பழகன் அமைச்சரா இல்லை!

போன வாரம் மேஜை டிராயரை குடைஞ்சு பழைய ·பைலை பிரிச்சு பார்க்கும்போது கையில் மாட்டின விஷயம்தான் இது. மூணாங்கிளாஸ் நோட்டு புத்தகத்திலிருந்து கிழித்து எடுத்த சில பக்கங்கள். எல்லா பக்கத்திலேயும் பெயர், தேதி, தமிழ் மாதம், ஆங்கில மாதம் என விலாவாரியான தகவல்கள். கொஞ்சம் நம்பர், கொஞ்சம் கிறுக்கல்கள், ஏகப்பட்ட இடைவெளி விட்டு தமிழ் ரைம்ஸ். விழுப்புரத்திலிருந்து மாயவரம் வழியா தஞ்சாவூர் போகிற மாதிரியான வார்த்தைகள். ஆங்காங்கே அள்ளித் தெளித்த மாதிரி பென்சில் பூக்கள். ஓரே பக்கத்தில் கணக்கு, தமிழ், வரலாறு என சகலமும். முரசு, இகலப்பையை கண்டுபிடித்தவர்களுக்கு கோடி நன்றி. 'அன்னிக்கு பார்த்த மாதிரியே இன்னிக்கும் இருக்கேடா ராம்கி'ன்னு யாராவது சொல்லித்தொலைச்சு அது அந்த சப் எடிட்டர் காதுலேயும் விழந்துட்டா....