நேரிலும், மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் வாழ்த்துச் சொல்லியவர்களுக்கு வேண்டுமானால் ஒற்றைவரியில் நன்றியை சொல்லிவிடலாம். சென்னையிலிருந்து இரண்டு லீவு போட்டு வந்து கல்யாண வேலைகளில் களமிறங்கியவர்களுக்கு வெறுமனே நன்றி சொல்வதில் இருக்கும் தர்மசங்கடத்தை வெளியே சொல்லமுடியாது. பரபரப்பு, டென்ஷனெல்லாம் இறங்கி நாலு மணி நேரத்தில் மண்டபத்தை காலி செய்துவிட்டு வெறுமையாய் தனிமையில் நடக்கும்போது மனதை அழுத்தும் பாரத்திற்கு என்ன பெயர் சொல்வதோ?
மறக்க முடியாத ஷாட்களை மட்டும் சொல்லி ஷார்ட்டா முடிச்சுக்குறேன்!

எலெக்ஷனுக்கு அப்புறமாய் ஒரு நிம்மதி கும்பிடு!

அவரு வர்றலையா? பையன் கல்யாணத்துக்கு வந்துடுவாரா?

தாலிகட்டும்போது பொண்ணுங்க தலைகுனியறதுக்கு எதுக்காம்?

சீக்கிரமா மாலையை மாத்துங்க... சி.எம் வர்றதுக்குள்ளே கிளம்பியாகணும்!

மாப்பிள்ளே... கடைசியா ஒரு சிரிப்பு சிரிச்சுக்கோங்கோ!

பார்த்து தேடுங்கோ.... பானையை உடைச்சுடாதீங்கோ...

மச்சானுக்கு ஒரு பவுன் மோதிரமும் தர்றேன்னு சொல்லியிருந்தா அம்மா ஜெயிச்சுருப்பாங்க!

அட...வேட்டி கட்டிக்கிட்டு நல்லா நடக்கத்தெரியுமா?

மொய் எழுதாம கம்பி நீட்டுறவங்களை கரெக்டா பிடிச்சு கொண்டாங்கடா...

தம்பியுடையான்... கரெக்டாத்தான் சொல்லியிருக்காங்க!

என்னதான் சிவாஜி மாதிரி போஸ் கொடுத்தாலும் திரும்பி பார்க்க மாட்டேங்கிறாரே!

கூட்டம் வந்துடும்னுதான் வர்றதை சீக்ரெட்டா வெச்சுக்க சொன்னேன்!

இட ஒதுக்கீடு இங்கெல்லாம் வேணாம்மா...சேர்ந்தே நில்லுங்க!

மாப்பிள்ளைக்கும் சந்திரமுகிக்கு அப்புறம் சிவாஜிதான் சினிமாவாம்!

போயஸ் கார்டன் ஸ்பெஷல் கிப்டை பத்திரமா எடுத்து வைங்கப்பா!