Wednesday, October 26, 2005

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

Image hosted by Photobucket.com

'அரசாங்கம் சரியா நடவடிக்கை எடுக்கலீங்க. மொதல்ல நிபந்தனை எதுவும் இல்லாம கடன் கொடுக்கணும், அப்புறம் யூரியா, டிஏபியெல்லாம் கிடைக்க மாட்டேங்குது. ஒரு ஏக்கர் பயிருக்கு ஆயிரம் ரூபா கொடுக்கிறா சேலம் மாவட்டத்துல அறிவிச்சுருக்காங்களாம்...அது பத்தாது. ஏத்திக்கொடுக்கணும். ஒரு வாரமாக மழை பெய்ஞ்சதால யாருக்கும் வேலை உத்திரவாதம் இல்லை. அதனால நஷ்ட ஈடா பணம் கொடுக்கணும். வீடெல்லாம் மழையால இடிஞ்சு போய் கிடக்குது. அதை சரிப்படுத்தறதுக்கு அரசாங்கம்தான் பணம் கொடுக்கணும். மழை பெய்ஞ்சு ஆடு, மாடு,
கோழியெல்லாம் சீக்கா கிடக்குது. அதுக்கு ஏதாவது நிவாரணம் கொடுக்கணும்....'

சன் நியூஸ் சேனலில் ஏதோ ஒரு விவசாயிகள் சங்கத்தலைவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் சைதாப்பேட்டையின் நனைந்து
போன ஒரு பிளாட்பாரத்தில் இருக்க இடமில்லாமல் ஒடுங்கி படுத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன்.

Image hosted by Photobucket.com

Monday, October 24, 2005

ஓரங்கட்டேய் - 3

Image hosted by Photobucket.com

Courtesy : Vikatan

'இப்பிடி உட்காரட்டுமா? ஓகேவா பாருங்க...'

'ஒகே. மேல ஏதாவது கட் பனியன் போட்டுக்கலாமே!'

'நோ..நோ...தமிழ்நாட்டுல ஆம்பிளைங்களால சட்டை போடாம உட்காரமுடியும். ஆனா, பொம்பளைங்களால முடியுமான்னு முகத்துல அறையற மாதிரி ஒரு கேள்வியை தமிழ் சமூகத்துல பதிவு பண்றதா இருக்கேன்'

'அப்படியா? பண்ணுங்க..பண்ணுங்க...நீங்க எது வேணும்னாலும் பண்ணலாம். அப்டியே கொஞ்சம் காமிராவை பாருங்க'

'நோ..நோ.. காமிராவை பார்த்து போஸ் குடுத்தா சினிமாக்காரன் மாதிரி இருக்கும். வேணாம்... நான் இப்புடியே கேஷ¥வலா இருக்குற மாதிரியே இருக்கட்டும்'

'சரி. ஷாட்டுக்கு போயிடலாமா?'

'இருங்க...அப்புடியே பின்நவீனத்துவம் பத்தி ஏதாவது புக்கை படிச்சிட்டு இருக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்கும். ஏதாவது இருக்குமா?'

'இல்லையே ஸார்.. என்கிட்டே ஒரு இங்கிலீஷ் நாவல்தான் இருக்குது?'

'பரவாயில்லை... எவனுக்கு புரியப்போவது... அதை அப்படியே முன்னாடி விரிச்சு வெச்சுடுங்க.... கரெக்டா போகஸ் ஆவுதான்னும் பார்த்துடுங்க...'

'எல்லாம் ஓகே. கரெக்டா இருக்குது. ஷாட் ரெடி'

'எடுத்துட்டு காட்டுங்க... சரியா வரலைன்னா இன்னொரு ஷாட் எடுத்துடலாம். ஒண்ணும் அவசரமேயில்லை... பட்...ஸ்டில் நல்லா வரணும்'

Monday, October 17, 2005

ஓரங்கட்டேய் - 2

Image hosted by Photobucket.com


"தமிள் பண்பாடு, கலாசாரம் பத்தி அம்மாவும் கருத்து சொல்லியிருக்காங்க பார்த்தியா?"

"அம்மாவுமா? ஆஹா... ஊரு ஒண்ணு கூடிடுச்சுப்பா..!"

Thursday, October 13, 2005

ஓரங்கட்டேய் - 1

Image hosted by Photobucket.com


"இன்னாபா நம்ம பழத்தை மட்டும் காணோம்..."

"அட, மாம்பழ சீசஸனெல்லாம் முடிஞ்சுடுச்சுப்பா!"

Friday, October 07, 2005

டோட்டல் டேமேஜ்

இந்தியா டுடே இதழில் குஷ்புவின் பேட்டியில் ஒரு இடத்தில் கூட தமிழ்ப் பெண்கள் என்கிற சொற்றொடரே கிடையாது. 'என்னைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல; அதில் மனதும் சம்பந்தப்பட்டிருக்கிறது' என்று சொன்ன குஷ்புவின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதே தவிர கண்டிக்கப்படவேண்டியது அல்ல. அவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்திய, ஏற்பாடு செய்த, தூண்டிய ஒரு அரசியல் தலை கூட இதே நேர்மையோடு தங்கள் காதல், திருமண வாழ்க்கையைப் பற்றி பேசமாட்டார்கள்.

குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் நடந்திருக்கும் அராஜகங்களில் தமிழ்நாட்டு அரசியல் ஆம்பளை சிங்கங்கள் பலரும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கருணாநிதியின் 'தமிழ் முரசு' பேரக்குடும்பம் முதல், 'இங்கிலீஷ் தாத்தா' ராமதாஸ், 'எல்லோரும் விபசாரி' புகழ் தங்கர் பச்சான், 'ஜக்கி பக்தர்' திருமாவளவன், 'நடிகர் சங்க' கேப்டன் விஜயகாந்த், த.மு.முக என பலரும் தங்கள் ஆம்பளைத்திமிரை வெவ்வெறு விதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

குஷ்புவின் பேட்டிக்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது என்று 23.9.2005 இதழில் முதல் பக்கத்தில் தன் பொய்யை தொடங்கிய தமிழ் முரசு தொடர்ந்து 'தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா? என்று தலைப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வந்தது. எந்த சன் டிவிக்கு ஆங்கிலப் பெயர் இருப்பதை நியாயப்படுத்தி அறிக்கை கொடுக்குமளவுக்கு பேரப்பாசம் கருணாநிதிக்கு பொங்கி வருகிறதோ, அதே சன் டிவி குழுமம்தான் தமிழ் முரசு ஏட்டை தமிழர்களுக்கு¡க 'டக்கராக' நடத்திக் காட்டிக்கொண்டிருக்கிறது.

Image hosted by Photobucket.com

தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும் தன் பேரக்குழந்தைகளை டெல்லியில் ஆங்கிலப்பள்ளியில் சேர்த்துவிட்டு இங்கே 'டமில்' பாதுகாப்பு இயக்கம் நடத்தும் மருத்துவர் மாலடிமைடியின் குடும்பக்கட்சியின் மகளிர் அணிதான் குஷ்புவுக்கு எதிராக தமிழ்ப் பெண்களின் கற்பை பாதுகாக்க வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார் மூவருமாக ஓருருவில் அவதரித்த ஜக்கி வாசுதேவரிடம் யோக நிஷ்டை பயின்ற திருமாவளவனுக்கு, திண்ணியத்தில் மலம் தின்ன வைத்த ஆதிக்க சாதிக்காரர்கள் வீடு நோக்கியோ மேலவளவு முருகேசனைக் கொன்றவர்கள் வீடு நோக்கியோ கழுதை ஊர்வலம் நடத்த தோன்றவில்லை. ஜக்கி வாசுதேவின் சீடர்களில் குஷ்புவும் உண்டு என்பது திருமாவுக்கு தெரியாதா? குஷ்புவின் கருத்தை விட புரட்சிகரமான கருத்துகளை அதே இதழில் சொல்லியிருக்கும் சுகிர்தராணியை எதிர்த்து துடைப்ப ஊர்வலம் நடத்தாது ஏன்?

உழைத்த தொழிலாளி தினசரி பேட்டா கேட்டதை ஆதரித்த நடிகையை, காசுக்காக வேலை செய்யும் விபசாரியுடன் ஒப்பிட்ட 'தமிழ் சினிமாவின் ஓரே அறிவு ஜீவி' தங்கர்பச்சான், ஒரு ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும் ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தன் திரைப்படங்களில் பதிவு செய்து காட்டியிருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டரில் கருத்து சொன்ன தங்கர்பச்சான், அப்பேர்ப்பட்ட எனக்கு நேர்ந்த அவமானம்தான் இப்போது ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் நேர்ந்துவிட்டது என்கிறார். கி.ராஜநாராயணன் தொகுத்து தள்ளிய கிராமிய பாலியல் கதைகள் எந்தப் பண்பாட்டிலிருந்து வந்தவையாம்?

தமிழ்ப் பெண்களின் கற்பு பக்கம் நிற்கப்போகிறாரா அல்லது அதை கொச்சைப்படுத்திய சக நடிகர் பக்கம் நிற்பாரா என்கிற தர்மசங்கடத்தை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உண்டாக்க நினைத்ததை உணர்ந்தததால்தான் விஜய்காந்த் நடிகர் சங்கத்தலைவர் என்கிற முறையில் குஷ்பு சார்பாக எடுக்க வேண்டிய நிலையை எடுக்காமல் நழுவிவிட்டார்.

குஷ்பு ஒரு முஸ்லீம் பெண்ணானாலும் அவரை நாங்கள் முஸ்லீமாகவே கருதவில்லை என்று அறிக்கை வெளியிட்டது முஸ்லீம் முன்னேற்றக்கழகம். பாலியல் பிரச்னைகளில் குஷ்புவுக்கு நிகராக கருத்து தெரிவிக்கும் படைப்புகளை எழுதும் தமிழ்நாட்டு சல்மாவை த.மு.மு.க ஏன் இன்னும் முஸ்லீம் அல்ல என்று அறிவிக்கவில்லை?

தமிழ் ஆணுக்கு இவர்கள் வைக்கும் ரோல் மாடல் கோவலன். மனைவிக்கு வைக்கும் ரோல் மாடல் கண்ணகி. ஆனால் இவர்களுக்கு மாதவியும் வேண்டும். மாதவிகள் கோவலனின் கற்பை கேள்விக்குள்ளாக்கினால் இவர்களால் தாங்க முடியாது. கண்ணகியே நெடுஞ்செழியனிடம் நீதி கேட்பதற்கு முன்னால் கோவலனிடம் நீதி கேட்டிருந்தால் கோவலன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்?

'தமிழ் நாட்டை விட்டு ஓடு'

நன்றி - தீம்தரிகிட அக்டோபர் 2005.

மும்பையிலிருந்து ஞாநி கொடுத்திருக்கும் வாய்ஸை படிச்சா வடிவேலு டயலாக்தான் ஞாபகத்துக்கு வருது. 'ஏய்.. வேணாம்...மம்மி பாவம்... நோ..நோ.. டாடி பாவம்.... ஏய்....வேணாம்...சொல்லிட்டேன்...சிஸ்டரை வம்புக்கிழுக்காதே... நோ..நோ... தாத்தா பாவம்.. பிரதர் ரொம்ப பாவம்... ஐயோ...அடிப்பாவி, என் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுத்து இமேஜை டேமேஜ் பண்ணிட்டாளே....'

Wednesday, October 05, 2005

கலக்கி

குடும்பத்துடன் களிக்க... கல்கி! கல்கியோட லோகோ மாறியிருக்குது. குடும்பத்துடன் கண்டுகளிக்க.. டூரிங் தியேட்டர் நோட்டீஸ் ஞாபகத்துக்கு வருது. விகடன், குமுதம் மீட்டரோட கல்கியும் போட்டி போடுது. மீட்டர்னா வேற என்ன, சினிமா மேட்டர்தான். வழக்கம் போல வட்டமேஜைக்கு வர்றவங்க லிஸ்ட் இன்னும் மாறலை. சிதம்பரம் ஸ்ரீவித்யா காளிதாஸ், திருப்பரங்குன்றம் சுப்ரமணியன், சேலம் சியாமளா ஈஸ்வரன், திருவண்ணாமலை சண்முகம், தஞ்சை வளர்மதி... ஹை.. நம்ம டீம் இன்னும் அப்படியேதான் இருக்குது. இந்த வாரம் பாட்டு வாத்தியாருங்களை பத்தின துணுக்கு ஸ்பெஷல். தமிழ் சினிமாவில் பெரிய புரட்சி நடக்குப்போவது. பின்னே, இன்னொரு 'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு' பாட்டை எழுதமாட்டேன்னு சினேகன் சொல்லியிருக்கிறாராம்! ஆளாளுக்கு விடற பீட்டர்தான் கல்கியின் இந்தவாரத்து மேட்டர்! சாம்பிளுக்கு கொஞ்சம். கல்கியோட கொஞ்சம் கலக்கி....

"நான் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன உலக அழகி ஐஸ்வர்யாராய், இன்றுவரைக்கும் அதுபற்றி விசாரித்து வருகிறார்."
- பிரவீண்காந்த்

எதுக்கு தேடிட்டிருக்கார்.. எதை தேடிட்டிருக்காரு... அதெல்லாம் ரகசியம். எத்தனை நாளைக்கு ஐஸ்வர்யா ராய் உலக அழகிங்கற விஷயம் தெரியமாத்தான் எல்லோரும் தேடிட்டிருக்காங்க.

"நியூ படத்தை தடை செய்யறதை பார்த்தா, எங்களை மாதிரியானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதை தடுக்கறாங்களோன்னு சந்தேகமா இருக்கு."
- சிம்பு

'ஆடறா..சக்கை... ஆடறா.. சக்கை... மாயவரத்து திமிர் ஆரம்பத்துல ஆட்டம் போடத்தான் வைக்கும்.. போகப்போக அடங்கிடும். அதான் பார்க்குறோம்ல...' கமெண்ட் உதவி : நாகர்கோவில் ரூம்மேட்

"குஷ்பு, உருது பேசும் முஸ்லீம் பெண். சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருப்பதால் இந்துத்வா சக்திகளும், தமிழ் தேசியவாதிகளும் அவரைப் பழிவாங்குகிறார்கள் என்பதே உண்மை."
- கவிஞர் சல்மா

கவிஞருங்க வாயிலேர்ந்து கவித தவிர வேறு எதுவும் வரக்கூடாதுன்னு அம்மா கிட்ட சொல்லி ஒரு ஆர்டர் வாங்கணும். வைரமுத்து சினிமா பாட்டையெல்லாம் குறைச்சுக்கிட்டு இலக்கியம் படைக்கப்போறாராம். சல்மா மாதிரியான கவிதாயினிகளும் கொஞ்சம் நல்ல கழுத.. ஸாரி.. கவித எழுத ஆரம்பிக்கலாமே!

"தன் கருத்தை சொல்வதற்கு குஷ்புவுக்கு உரிமை உள்ளது. ஆனால் அவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்க நான் விரும்பவில்லை."
- வழக்கறிஞர் அருள்மொழி.

பவுடர் பசங்க என்ன சொன்னாலும் அத யாரும் கண்டுக்கக்கூடாதுன்னு முந்திக்கிட்டு நாமளே சவுண்டு விட்டுடறதுதான் அறிவு ஜீவித்தனம். பெரியார் இப்ப இருந்தா குஷ்பு பத்தி ஸாரி...குஷ்புவோட ஸ்டேட்மெண்ட் பத்தி என்ன கமெண்ட் அடிச்சிருப்பாரு? நல்லா யோசிங்கப்பா!

"இந்தப் பிரச்னையில் ஆண்கள் பதில் சொல்லவே கூடாது"

- தொல். திருமாவளவன்.

சொல்லலாமா.. வேணாமா... எதை சொன்னாலும் உனக்கு.......சரி, சரி....மனசுல எதுவும் வெச்சுக்க வேணாம். சொல்ல வந்ததை சொல்லிடலாம். நோ கமெண்ட்ஸ்!

Image hosted by Photobucket.com

"நவ்யா நாயரு அட்டகாசம் பண்ணியிருக்காங்க. ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மாவா நடிச்சதே பெரிய விஷயம். அதுல சூப்பரா ஆக்ட் கொடுத்துருக்கிறது இன்னும் தூளு. மத்த ஹீரோயினுங்க இவங்ககிட்ட கத்துக்க வேண்டிய விஷயம் நிறையவே கீது. 'தேனு...தேனு'ன்னு பொண்டாட்டிகிட்ட தங்கரு உருகறப்போ படம் பார்க்க விடலைங்களுக்கே 'ச்சே... சீக்கிரம் கண்ணாலம் பண்ணிக்கணும்'னு தோணும்."
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, விமர்சனம்.

ஹைய்யா.. ஒரு ஸ்டில்லை எடுத்துவுடுப்பா.. தலை தப்பிக்க வெச்ச அந்த மேக்கப் வுமனுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிடுங்க.. தங்கர்!

"இமயமலையின் அமைதியான பிரம்மாண்டம் எனக்குள்ளே அடக்கத்தையும் மன அமைதியையும் ஏற்படுத்துகிறது. அங்கே கார் ஓட்டுவது சவாலான விஷயம்."
- ரேவதி

ஹி...ஹி....அம்மிணி, உங்களுக்கும் நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்! யாராவது நெசமாவே ஓட்ட போறாங்க!

Sunday, October 02, 2005

மனிதன்

ஆண்டவனின் படைப்பிலேயே அபூர்வமான படைப்பு மனிதன்தான் என்று ஆச்சர்யப்படுகிற அறிஞர்கள் போலவே காந்திஜியும் மனிதன், மற்ற படைப்புகளிலிருந்து ரொம்ப வித்தியாசமான தனிப்பிறவி என்கிறார். உடலமைப்பு, உணவுமுறை, உறக்கம் மற்றும் உடல் சார்ந்த வேலைகளையெல்லாம் பார்க்கும்போது மனிதனும் விலங்குகளை போலவே நடந்துகொண்டாலும் ஒழுக்க நெறிமுறையான தார்மீக தளத்தில் அவ்வப்போது தன்னை வைத்துக்கொள்வதுதான் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆறாவது அறிவுதான் மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனிதனின் பூர்வாசிரமம் குரங்குதான் என்கிறது விஞ்ஞானம். மிருகத்தனம் என்பது மனிதனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விலக ஆரம்பத்திருக்கிறது. மனிதரில் இத்தனை குணங்களா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவதற்கு காரணம் மிருகத்தனம் சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம். அது முற்றிலுமாக விலகியிருக்கும்போது மனிதன் தன்னை படைத்த ஆண்டவனின் வசமே வந்துவிடுவான். அதற்கு காந்திஜி சொல்லும் வழிமுறை மனிதனுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் தெய்வீக சக்தி புரிந்துகொள்ள முயற்சிப்பது.

'மனிதன் என்பவன் வெறும் அறிவாற்றலோ, விலங்குகளையொத்த உடலமைப்போ, இதயம் அல்லது ஆன்மாவோ மட்டும் அல்ல. இவை அனைத்தும் ஒத்திசைவாக ஒருங்கிணைந்தவனே முழுமையான மனிதன்' (ஹரிஜன், 8.5.1937)

மனிதனின் நடவடிக்கைளுக்கும் அவனது ஆன்மாவின் குரலுக்கும் சம்பந்தமிருக்கவேண்டும். அப்போதுதான் அவனால் ஒரு முழுமையான மனிதனாக நடந்து கொள்ள முயற்சிக்க முடியும். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லவேண்டுமென்றால் பகுத்தறிவு, புலனடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கெட்டதை செய்யும் மனிதனுக்கு கூட எது நல்லது எது கெட்டது என்பது நன்றாகவே தெரிந்தபின்தான் அந்த செயலை செய்கிறான். பகுத்தறிவு மனிதனை பண்படுத்துவது உண்மைதான். ஆனால், அதுவே எல்லா மனிதனுக்கும் இருக்கவேண்டுமென்கிற கட்டாயமில்லை. ஆனால், புலனடக்கம் என்கிற விஷயம் ஒன்றில்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. மனிதனுக்கு என்றைக்கு பகுத்தறிவும் புலனடக்கமும் முழுமையாக கிடைக்கிறதோ அன்றுதான் மனிதனிடமிருந்து முரட்டுத்தனம் முற்றிலுமாக விலகிச்செல்கிறது.

'மனிதன் என்றால் மிருகத்தனத்தையும் முரட்டுத்தனத்தையும் விட்டொழிப்பதே என்பதை முழுமையாக உணரும்போதுதான் மனிதத்தன்மையே முழுமை பெறுகிறது' (ஹரிஜன், 8.10.1938)

மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்ததால் வந்த வினை, ஆண்டவனின் படைப்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படுபவன் மனிதனாகிவிட்டான். விலங்குகளை விட ஆபத்தானவன் மனிதன் என்பது உண்மைதான். மனிதனின் உணர்ச்சிகள் சில சுய கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது மனிதனும் மிருகமாகிறான். என்னதான் சொன்னாலும் பகுத்தறிவுதான் மனிதனை உயர்நிலைக்கு உயர்த்துகிறது என்கிறார் காந்திஜி.

'முன்னேற்றம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய விஷயம். பகுத்தறிவை பெற்றிருக்கும் மனிதனுக்கு உண்பதும் உறங்குவதும் மட்டுமே வாழ்க்கையில்லை. மனிதன் தனது பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை வழிபட ஆரம்பித்தான். கடவுளை புரிந்து கொள்ள முயற்சி செய்தான். அதை புரிந்து கொள்வதே மனித வாழ்க்கையின் லட்சியமானது. ஆனால் விலங்குகளுக்கோ கடவுளை ஆராதிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை' (யங் இந்தியா, 24.6.1926)

யானை, பூனை, நாய், குரங்கு எல்லாமே சினிமாவில் சாமி கூம்பிடுவதுகூட மனிதனின் பகுத்தறிவால் வந்த ஐடியாதானே! பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பகுத்தறிவின் உந்துதல்தானே! உண்மையில் இது மாதிரியான ஜந்துகளுக்கு அடுத்த வேளை ஆகாரம்தான் ஆண்டவன். அதை தேடுவதில்தான் மும்முரமாக இருக்குமே தவிர ஆண்டவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்காது!

உணவு, உடையெல்லாம் கிடைத்தபின்னரும் சாந்தி கொள்ளாமல் எதையாவது தேடி அலைகிறான். சரி, மனிதன் ஒருவனே தன்னைப் படைத்தவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான் என்று சொல்லிவிடலாமா? இல்லை. அப்படியொரு ஆராய்ச்சியில் இறங்குமாறு ஆண்டவனால் படைக்கப்பட்டவனே மனிதன் என்கிறார் காந்திஜி.

'இறைவனின் படைப்பில் மனிதன் ஒருவனே தன்னை படைப்பித்த ஆண்டவனை அறிவதன் பொருட்டு உருப்பெற்றவன். நாளுக்கு நாள் தன்னை வளப்படுத்திக்கொண்டு உடைமைகளை சேர்த்துக்கொள்வது மனித வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. தன்னை படைத்த ஆண்டவனை நோக்கி நாளுக்கு நாள் ஆத்மார்த்தமாக நெருங்கி வருவதே மனித ஜென்மத்தின் முக்கியமான பணி' (யங் இந்தியா, 27.10.1927)

Coutesy : www.tamiloviam.com - காந்தீய விழுமியங்கள்