Saturday, May 08, 2004

முன் தேதியிட்ட நாட்குறிப்பு!

Friday, May 14, 2004

நான் எதிர்பார்த்திருந்த மாதிரியே தேர்தல் முடிவுகளும் அமைந்து விட்டன. என்னோட சர்வே ரெண்டே விஷயத்தைதான் அடிப்படையா வெச்சு, உட்கார்ந்த இடத்திலிருந்தே எடுத்தது.

1. எலெக்ஷன் அன்னிக்கு ஒட்டு போடறது பொது மக்கள் அல்ல; கட்சித் தொண்டர்கள்தான்

2. காந்தி நோட்டுக்கும் பிரியாணி பொட்டலத்துக்கும் 'ஓட்டு' போட்ட பின்னர்தான் நிறைய பேர் ஓட்டுச் சாவடிக்கே வர்றது

சரி, ரிசல்ட் எப்படி?

வட சென்னை - குப்புசாமி (திமுக)
தென் சென்னை - டி. ஆர். பாலு (திமுக)
சீறிபெரும்புதூ¡ர் - கிருஷ்ணசாமி (திமுக
கடலூர் - வெங்கடபதி (திமுக)
கிருஷ்ணகிரி - சுகவனம் (திமுக)
வேலூர் - காதர் மொகைதீன் (திமுக)
திருப்பத்தூர் - வேணுகோபால் (திமுக)
திருச்செங்கோடு - சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக)
கரூர் - பழனிச்சாமி (திமுக)
நாகப்பட்டினம் - விஜயன் (திமுக)
தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் (திமுக)
புதுக்கோட்டை - ரகுபதி (திமுக)
பெரம்பலூர் - ராஜா (திமுக)
திருச்செந்தூர் - ராதிகா செல்வி (திமுக)

வந்தவாசி - ராஜலெட்சுமி ராஜன் (அதிமுக)
மத்திய சென்னை - பாலகங்கா (அதிமுக)
திண்டிவனம் - அருண்மொழித்தேவன் (அதிமுக)
அரக்கோணம் - சண்முகம் (அதிமுக)
ராசிபுரம் - அன்பழகன் (அதிமுக)
ராமநாதபுரம் - முருகேசன் (அதிமுக)
நெல்லை - அமிர்த கணேசன் (அதிமுக)
தென்காசி - முருகேசன் (அதிமுக)


மயிலாடுதுறை - மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)
சிவகங்கை - ப. சிதம்பரம் (காங்கிரஸ்)
சேலம் - தங்கபாலு (காங்கிரஸ்)
நீலகிரி - பிரபு (காங்கிரஸ்)
கோபிச்செட்டிப்பாளையம் - ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்)
பழநி - கார்வேந்தன் (காங்கிரஸ்)
திண்டுக்கல் - சித்தன் (காங்கிரஸ்)
பெரியகுளம் - ஹாரூண் (காங்கிரஸ்)

பொள்ளாச்சி - கிருஷ்ணன் (மதிமுக)
திருச்சி - கணேசன் (மதிமுக)
சிவகாசி - ரவிச்சந்திரன் (மதிமுக)

தருமபுரி - செந்தில் (பாமக)
செங்கல்பட்டு - ஏகே மூர்த்தி (பாமக)

நாகர்கோவில் - ராதாகிருஷ்ணன் (பாஜக)
பாண்டிச்சேரி - லலிதா குமாரமங்கலம் (பாஜக)

கோவை சுப்பராயன் - (கம்யூனிஸ்ட்)
மதுரை மோகன் - (கம்யூனிஸ்ட்)
சிதம்பரம் - திருமாவளவன்(விடுதலைச் சிறுத்தைகள்)


நிஜமான லக்கி பிரைஸ் திமுகவுக்குதான்; போட்டியிட்ட 15க்கு 14 இடம். அதிமுகவுக்கு திமுகதான் மாற்று என்கிற மேட்டரை திரும்பவும் சொல்லியிருக்காங்க மக்கள்.

இனிமேலாவது மக்களை நினைச்சு கொஞ்சமாவது பயப்படுறதுதான் அதிமுகவுக்கு நல்லது. இல்லாட்டா வர்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள், 2001ல் திமுக கிடைச்ச மாதிரி அல்ல; 1991ல் திமுகவுக்கு கிடைச்ச தோல்வி மாதிரி மோசமா போய்விடும்.

ஏகப்பட்ட கோஷ்டியா இருந்து இப்போ ரெண்டே கோஷ்டியா இருக்கும் காங்கிரஸ், இனிமே மூன்றாவது அணி பத்தி யோசிக்க ஆரம்பிக்கலாம் அல்லது குறைந்த பட்சம் திமுகவுடன் ஓட்டிக் கொண்டாவது இருக்கலாம்.

பாஜகவால் எனக்கு எந்த லாபமுமில்லைன்னு அம்மா சொன்னாலும் அது நிஜமில்லை. ஆனா, அதே சமயத்துல அதிமுகவால எந்த லாபமுமில்லைங்கிற நிஜத்தை புரிஞ்சுக்கிட்டு சவாரி பண்ணாம தனி ரூட் போட்டு கொஞ்சாமாவது வோட் பேங்க வெச்சுக்கிறதுதான பாஜகவுக்கு நல்லது

சினிமா மக்களை சீரழிக்குதுன்னு சொல்லி ஓவரா கவலைப்படாம, மத்த ஜாதிக்காரங்க ஓட்டை எப்படி கவர் பண்றது பத்தி யோசிக்கிறதுதான் பாமகவுக்கு நல்லது.

இனிமேலும் இலங்கைப்பிரச்சினையிலிருந்து பாலஸ்தீன பிரச்சினை வரை பேசி பிலிம் காட்டாம உள்ளூர் பிரச்சினையை பத்தி மட்டும் பேசி, திமுகவுல சேர்ந்து கலைஞருக்கு கை கொடுக்குறதுதான் வைகோவுக்கு நல்லது.

மத்த ஜாதிக் கட்சிகளை எதிர்க்கறதே முக்கியமான வேலையாக நினைக்காம தலித் மக்களை பத்தி ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து நிஜமான அக்கறையுடன் ஏதாவது செஞ்சாத்தான் திருமாவளவன், கிருஷ்ணசாமி கோஷ்டிகளுக்கு அரசியலில் எதிர்காலம்.

பின்குறிப்பு இது மீடியாக்காரங்களுக்கு....
நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை ரஜினியின் செல்வாக்கு பற்றிய அலசலாக முன்வைப்பதுதான் புத்திசாலித்தனம். குறைந்த பட்சம் திராவிடக்கட்சிகளின் அருட்கடாட்சம் கிடைக்கும். பாமகவின் ஆத்திரத்திலிருந்து தப்பிக்கலாம். எல்லாவற்றையும் விட சர்க்குலேஷனை ஜம்முன்னு ஏத்திப்புடலாம்!

Thursday, May 06, 2004

எப்படி இருந்த காவிரி....இப்படி ஆனதே!

ரெண்டு மாசத்துக்கு முந்தி வலைப்பூக்களில் கொஞ்சம் தண்ணீரோடு பார்த்த எங்க ஊர் காவிரி ஆத்தங்கரையின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ் இதுதான்!


Monday, May 03, 2004

சனிக்கிழமை ஒரு சாகசப் பயணம்!

ஓழுங்கா டிரெயின் புடிச்சு பழவந்தாங்கல் வந்து பாதயாத்திரை பண்ணியிருக்கலாம். சனிக்கிழமை சாயந்திரம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த ஆஞ்சநேயர், பஸ்க்கு வெயிட் பண்ணாம டிரெயின்ல வான்னு ஜடியா குடுத்திருக்கலாம். எப்பவாவது தானே வர்றான்னு கஷ்டப்பட்டு வரட்டுமேன்னு நினைச்சுட்டார் போலிருக்குது! நம்ம ஊர்ப்பக்கம் குக்குராமத்துல இருக்குற கோயிலுக்கு கூட ரெண்டே மணிநேரத்துல போய்ச் சேர்ந்த எனக்கு, சைதாப்பேட்டை பஸ்டாண்டுல 52L, ,52Mக்கு வெயிட் பண்ண நேரத்துல படையப்பா படத்தை இன்னொரு தபா பார்த்து முடிச்சிருக்கலாம்! கொண்டாட்டும் பார்த்துட்டு கிளம்பின நான் ஏழு மணி வரைக்கும் சைதாப்பேட்டை பஸ்டாண்டே கதிங்கிற மாதிரி நின்னுட்டிருந்தேன். ரெண்டு மணி நேரமா டைம் கீப்பர் தெரியாதுங்கிற ஒரே புராணத்தையே பாடிட்டிருந்தார். சனிக்கிழமை மாதிரியான நாட்களிலேயே இப்படின்னா மத்த நாள்ல பஸ்ஸ¥க்கு வெயிட் பண்ணியே பாதிவயசாயிடும் போலிருக்கேன்னு புலம்பிட்டிருக்கும் போதே வந்தே விட்டது. அதுக்கப்புறம் வந்த ஒரு அட்வென்ச்சர் ஜர்னியை மறக்கவே மடியாது. வாழ்க்கைன்னா மேடு, பள்ளம், குழப்பம், கூச்சல்னு எல்லாமே இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சுது! கிண்டி மேம்பாலத்திலேயே ஒரு பதினைஞ்சு நிமிஷம் டிராபிக் ஜாம். ஹைவேஸ்காரர்கள் வெட்டி வைத்த குழி, டெலிபோன்காரர்கள் வெட்டி வைத்த குழின்னு விவேக் அடுக்குறமாதிரி ரோட்டோரம் குழியா வெட்டி வெச்சதால் பஸ், ஆதம்பாக்கத்து இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட ஆரம்பித்தது ஒரு வழியா வானுவம்பேட்டை வந்து சேர்ந்தது. அதுக்கப்புறம் நங்கநல்லூர் போய் சேர்ந்து ஆஞ்சிநேயரை பார்க்கிறதுக்குள்ளே எட்டரை ஆயிடுச்சு. வரும்போது மறக்காம நடந்தே பழவந்தாங்கல் வந்து டிரெயின் புடிச்சு இருபதே நிமிஷத்தில் சைதாப்பேட்டை வந்து சேர்ந்தேன்.

ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர் மாதிரியான ஏரியாக்களில் ரோடே சரியில்லை. சென்னையின் பிஸியான குடியிருப்பு பகுதிகளில் இப்போதே இப்படின்னா திருவான்மியூர்-வேளச்சேரி-கிண்டி ரயில்வே லைன் கம்ப்ளீட் ஆகும் பட்சத்தில் இன்னமும் குழப்பம்தான் ஜாஸ்தியாகும். ஒரு காலத்தில் சென்னையின் மையப்பகுதியாக இருந்த சைதாப்பேட்டையிலிருந்து பஸ் வசதி குறைந்து கொண்டே போவது ஆச்சரியம். நங்கநல்லூரை விடுங்க.... கோயம்பேடு போகணும்னு நான் நினைச்சா குறைந்த பட்சம் ரெண்டுமணி நேரமாவது ஆகிவிடும். பஸ்ஸோட தரம், வசதியெல்லம் பத்தி கேள்வியே கேட்டுடாதீங்க. நானும் சென்னை, மும்பை, டெல்லி மூணு மெட்ரோ பஸ்ஸில் டிரிப் போன அனுபவம் எனக்கு உண்டு. ஒரே ஒத்துமை என்னான்னா மாகர பஸ்களின் கண்றாவி கோலம்தான். வெளிநாட்டிலிருந்து வர்றவங்க பளிச்சுன்னு கண்ணுல படுறது இந்த அழுக்கு கோலம் தான். பெங்களுர், ஹைதராபாத்திலும் இதே நிலைமைதான். கடலூரிலிருந்து மஞ்சக்குப்பம் போற பஸ் கூட லட்சணமா இருக்கு. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை போகும் தனியார் பஸ்ஸின் டெகரேஷன், ஆம்னி பஸ்ஸையே தோற்கடிச்சுடும். அதெல்லாம் வுடுங்க... பஸ் எப்படியிருந்தா என்ன.. டைமுக்கு வந்தாலே போதும்னு சென்னைவாசி நினைக்கிறான். என்னோட சமீபத்திய அனுபவத்துல அது நியாயமான விஷயம்னுதான் தெரிஞ்சுகிட்டேன்!