Saturday, July 24, 2004

துக்ளக் கார்ட்'டூமால்'

"KEEP LEFT" போர்டு பார்த்து முச்சந்தியில் மிரண்டு போய் நிற்கும் மன்மோகன் சிங் :-
'தெரியும்..தெரியும்.. கீப் லெ·ப்ட்டுதானே...தலையெழுத்து. அதைத்தானே பண்ணிக்கிட்டிருக்கோம். இதையே தெருவுக்கு தெரு போர்டு வெச்சு வேற காட்டணுமா?  வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கே!'
 
 
நான் மிதவாதிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று வரும் விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர்கள் எனது நண்பர்கள். ஆனால், அவர்களுக்கு பலம் இல்லை. என்னிடம் என்றும் தவறாத பலம் இருக்கிறது. கலகங்கள் நடந்தபோது தவறியது அந்த பலம் அல்ல. ஆக்கப்பூர்வமான உண்மையான பலத்தை கொண்டிருக்கும் அகிம்சையை அதை ஏற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் ஸ்தாபனம் சரியாக அனுசரிக்க தவறியதுதான் காரணம்' 

தொடர்ந்து படிக்க... தமிழோவியத்தில்...

Wednesday, July 21, 2004

காந்தீய விழுமியங்கள்

சென்னைக்கு வந்த காந்திஜியும் கஸ்தூரிரங்க ஐயங்காரின் பங்களாவிலேயே தங்கி ராஜாஜியுடன் ரெளலட் சட்டம் பற்றிய விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அகிம்சை முறையில் சட்ட மறுப்பு செய்யவது என்கிற முடிவில் காந்திஜி இருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்பதை முறைப்படுத்தி காந்திஜிக்கு நிறைய ஆலோசனைகள் சொன்னது ராஜாஜி, கஸ்தூரிரங்க ஐயங்கார், விஜயராகவாச்சாரியர் போன்றவர்கள்தான். ஒரு வழியாக 1919ம் ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிடலாம் என்கிற முடிவை காந்திஜி எடுத்தது சென்னையில்தான்..

காந்தீய விழுமியங்கள் : தென்னிந்திய மோகம் - II

Monday, July 19, 2004

பாரதி கூட்டிய Blogger's Meet

காலையில் கிருபாவின் அபூர்வ வாகனத்திலேறி மாலையில் நம்ம பேட்டைக்கு பத்திரமாய் திரும்பி வரும்வரை கண்டதையும் கேட்டதையும் பத்தி பத்து பக்கத்துக்கு எழுதிவிடலாம். சரக்கு ஜாஸ்தியாவே கிடைச்சது! 'பாரதி'யின் பெயரால் ஒரு எழுத்தாளர்கள் கூட்டத்திற்கே ஏற்பாடு பண்ணியிருந்தார் பாரா. மாலன், இரா.முருகன், வெங்கடேஷ், பத்ரி, ரூமி, ஹரிகிருஷ்ணன், யுகபாரதி மாதிரி பெரியவங்க இருக்குற இடத்துல வாலை சுருட்டிக்கிட்டு அமைதியா உட்கார்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. வெயில் நேரத்தில் கிடைச்ச கூல்டிரிங்ஸை கூச்சப்படாமல் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு ரெண்டு தடவை வாங்கி ஊத்திக்கிட்டோம். ஆனாலும். ஒரு கையில் கூல்டிரிங்ஸ் இன்னொரு கையில் காபி சகிதம் வெளுத்து வாங்கியவர் பத்தி நான் எதுவும் சொல்லப் போவதில்லை! வழக்கம் போல மாப்பிள்ளையாட்டம் வந்ததொரு பூனை. ஆனா, இருக்குற சுவடு தெரியாம இருந்ததென்னவோ சித்திரன்தான். துறு துறு பிரகாஷையும் ஷங்கரையும் கோஆர்டினேட் பண்ணி அழைச்சுட்டு வந்துட்டு, வந்த இடத்தில் சித்திரனோட போட்டி போட்டது முத்துராமன். திருக்குறள் புஸ்தகம் வைத்த தாம்பூல தட்டோடு திரும்பும்போதுதான் சின்ன வருத்தம். மதிய சாப்பாட்டில், பாராவின் பூரணம் வைத்த பூரி இல்லையே!