Wednesday, October 26, 2005

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

Image hosted by Photobucket.com

'அரசாங்கம் சரியா நடவடிக்கை எடுக்கலீங்க. மொதல்ல நிபந்தனை எதுவும் இல்லாம கடன் கொடுக்கணும், அப்புறம் யூரியா, டிஏபியெல்லாம் கிடைக்க மாட்டேங்குது. ஒரு ஏக்கர் பயிருக்கு ஆயிரம் ரூபா கொடுக்கிறா சேலம் மாவட்டத்துல அறிவிச்சுருக்காங்களாம்...அது பத்தாது. ஏத்திக்கொடுக்கணும். ஒரு வாரமாக மழை பெய்ஞ்சதால யாருக்கும் வேலை உத்திரவாதம் இல்லை. அதனால நஷ்ட ஈடா பணம் கொடுக்கணும். வீடெல்லாம் மழையால இடிஞ்சு போய் கிடக்குது. அதை சரிப்படுத்தறதுக்கு அரசாங்கம்தான் பணம் கொடுக்கணும். மழை பெய்ஞ்சு ஆடு, மாடு,
கோழியெல்லாம் சீக்கா கிடக்குது. அதுக்கு ஏதாவது நிவாரணம் கொடுக்கணும்....'

சன் நியூஸ் சேனலில் ஏதோ ஒரு விவசாயிகள் சங்கத்தலைவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் சைதாப்பேட்டையின் நனைந்து
போன ஒரு பிளாட்பாரத்தில் இருக்க இடமில்லாமல் ஒடுங்கி படுத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன்.

Image hosted by Photobucket.com

Monday, October 24, 2005

ஓரங்கட்டேய் - 3

Image hosted by Photobucket.com

Courtesy : Vikatan

'இப்பிடி உட்காரட்டுமா? ஓகேவா பாருங்க...'

'ஒகே. மேல ஏதாவது கட் பனியன் போட்டுக்கலாமே!'

'நோ..நோ...தமிழ்நாட்டுல ஆம்பிளைங்களால சட்டை போடாம உட்காரமுடியும். ஆனா, பொம்பளைங்களால முடியுமான்னு முகத்துல அறையற மாதிரி ஒரு கேள்வியை தமிழ் சமூகத்துல பதிவு பண்றதா இருக்கேன்'

'அப்படியா? பண்ணுங்க..பண்ணுங்க...நீங்க எது வேணும்னாலும் பண்ணலாம். அப்டியே கொஞ்சம் காமிராவை பாருங்க'

'நோ..நோ.. காமிராவை பார்த்து போஸ் குடுத்தா சினிமாக்காரன் மாதிரி இருக்கும். வேணாம்... நான் இப்புடியே கேஷ¥வலா இருக்குற மாதிரியே இருக்கட்டும்'

'சரி. ஷாட்டுக்கு போயிடலாமா?'

'இருங்க...அப்புடியே பின்நவீனத்துவம் பத்தி ஏதாவது புக்கை படிச்சிட்டு இருக்கிற மாதிரி இருந்தா நல்லா இருக்கும். ஏதாவது இருக்குமா?'

'இல்லையே ஸார்.. என்கிட்டே ஒரு இங்கிலீஷ் நாவல்தான் இருக்குது?'

'பரவாயில்லை... எவனுக்கு புரியப்போவது... அதை அப்படியே முன்னாடி விரிச்சு வெச்சுடுங்க.... கரெக்டா போகஸ் ஆவுதான்னும் பார்த்துடுங்க...'

'எல்லாம் ஓகே. கரெக்டா இருக்குது. ஷாட் ரெடி'

'எடுத்துட்டு காட்டுங்க... சரியா வரலைன்னா இன்னொரு ஷாட் எடுத்துடலாம். ஒண்ணும் அவசரமேயில்லை... பட்...ஸ்டில் நல்லா வரணும்'